Wednesday 29 April 2015

பதினாறும் பெற்று வாழ்ந்தாலே பெருவாழ்வு வாழ முடியும் என..........!.

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று பெரியோர் வாழ்த்துகின்றனரே. அந்தப் பதினாறு எவை எவை என்று தெரிந்து கொண்டால் நலமாயிருக்கும் அல்லவா?


அதன் விளக்கம் பின்வருமாறு:-

1.கலையாத கல்வி (வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய கல்வி)
2.குறையாத வயது (நீண்ட ஆயுள்)
3.கபடு வராத நட்பு (நம்பிக்கையான நல்ல நண்பர்கள்)
4.குன்றாத வளமை (வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்)
5.குன்றாத இளமை (உழைப்புக்குத் தளராத உடல் வலிமை)
6.கழுபிணி இல்லா உடல் (நோயற்ற வாழ்க்கை)
7.சலியாத மனம் (கலங்காத மனத்திண்மை)
8.அன்பகலாத மனைவி (மாறாத அன்பைச் செலுத்தும் மனைவி)
9.தவறாத சந்தானம் (அறிவு, ஆற்றல், ஒழுக்கம், ஆயுள் இவற்றில் தவறி விடாத குழந்தைகள்)
10.தாழாத கீர்த்தி (மென்மேலும் வளரக்கூடிய பொருளும் புகழும்)
11.மாறாத வார்த்தை (வாய்மை)
12.தடைகள் வராத கொடை (இல்லையென்று சொல்லாத உதவி)
13.தொலையாத நிதியம் (சிக்கனம், சேமிப்பு பழக்கம்)
14.கோணாத கோல் (நேர்மையும் திறமையும் கொண்ட குடும்ப நிர்வாகம்)
15.உதவி பெரிய தொண்டரோடு கூட்டு (பெருமக்கள் தொடர்பு)
16.துய்ய நின்பாதத்தில் அன்பு (இறை நம்பிக்கை)

இந்த பதினாறும் பெற்று வாழ்ந்தாலே பெருவாழ்வு வாழ முடியும் என்று நம் முன்னோர்கள் கூறினர்.
நன்றிகள்.

Saturday 25 April 2015

தமிழன் கண்டுபிடிப்பான திருகை...........

நம்ம தலைமுறை தொலைத்த தமிழன் கண்டுபிடிப்பான திருகையின் அனுபவம் உண்டா உங்களுக்கு.!

திருகை என்பது பயறு, உழுந்து போன்ற தானியங்களை உடைத்துப் பருப்பு ஆக்குவதற்காக உள்ள சாதனமாகும். இது பொதுவாகக் கருங்கல்லினால் செய்யப்படுகின்றது. திருகையில் இரண்டு பகுதிகள் உண்டு.

ஒன்று நிலையாக இருக்கும் கீழ்ப்பகுதி. இது கிடைத் தளத்தில் வட்ட வடிவம் கொண்டது. திருகையின் அளவுக்குத் தக்கபடி உயரம் உள்ளதாயிருக்கும். ஒரு குட்டையான உருளை வடிவம் எனலாம்.

கிராமபுறங்களில் பல பேர் வீட்டில் மதிய நிசப்தத்தை கெடுக்கும் இந்த அரைவைக்கல்லில் நடுவில், வெயிலில் காய வைத்த அரிசியை போட்டு சுத்தினால் கர கர கர சத்தத்தை ஏற்ப்படுத்தி மாவை கொடுக்கும்.

சமாச்சாரம் இது...இதை அரைக்கின்றார்கள் என்றால் வீட்டுக்கு வெளியே கூட இதன் சத்தம் கேட்கும்... இந்த சத்தம் கேட்டு வெகுநாள் ஆகி விட்டது...

இதன் மேற்பகுதியின் மையத்தில் நிலைக்குத்தாகப் பொருத்தப்பட்ட ஒரு தண்டு காணப்படும். இத்தண்டு பெரும்பாலும் இரும்பினால் செய்யப் பட்டிருக்கும்.


மற்றப் பகுதியான மேற்பகுதியும் வட்டவடிவமாகக் கீழ்ப்பகுதி போலவே இருந்தாலும், இதன் நடுப்பகுதியில் ஒரு துளை அமைந்திருக்கும் இது துளையின் அளவு, திருகையின் கீழ்ப் பாகத்தில் பொருத்திய தண்டின் விட்டத்திலும் சற்றுப் பெரிதாக இருக்கும்.

இத் துளையினூடாகக் கீழ்ப் பாகத்தின் தண்டைச் செலுத்தி இரண்டு பாகங்களையும் ஒன்றன்மீது ஒன்று வைக்கக்கூடியதாக இருக்கும். கீழ்ப் பகுதியின் தண்டைச் சுழலிடமாகக் கொண்டு மேற்பகுதியைச் சுற்றுவதற்கு வசதியாக மேற்பாகத்தின் விளிம்புக்கு அருகில் இன்னொரு தண்டு பொருத்தப்பட்டிருக்கும்.

சுற்றுவதற்கான கைபிடியாக இது பயன்படும். திருகையின் மேற்பாகத்தில் அமைந்த முன் குறிப்பிட்ட துளை மேல் அகன்றும் கீழே ஒடுங்கியும் புனல் வடிவில் அமைந்திருக்கும். திருகையின் கீழ்ப்பகுதியும் மேற்பகுதியும் ஒன்றன் மீது ஒன்று அடுக்கிய நிலையில், மேற்பகுதியின் துளைக்குள் உடைக்க வேண்டிய தானியத்தைப் போட்டுக் கைப்பிடியினால் மேற்பகுதியைச் சுழற்றுவார்கள்.

தானியம் சிறிது சிறிதாக இரண்டு கற்களுக்கும் இடையே சென்று உடைக்கப்பட்டு வெளி விளிம்பினூடாக வெளியேறும். இவ்வாறு வெளியேறும் உடைந்த தானியம் (பருப்பு) சேகரிக்கப்படும்.
நன்றிகள்.

Friday 24 April 2015

பெண் என்றும் அடிமையில்லை. அவளை யாரும் அடக்கவுமில்லை..........!.

இறைவன், உலகின் மதிப்பு மிக்க, கிடைக்கப் பெறாத மற்றும் 
அபூர்வப் பொருள்கள் எல்லாவற்றையும் மறைத்தே வைத்து உள்ளான். அவைகள் கடினமானவைகள். மிகுந்த சிரமத்திற்கு பிறகே அவைகள் கிடைக்கப் பெறும்.


1. "வைரம்" ஆழமான நிலத்தின் கீழே மூடப்பட்டு, பாதுகாக்கப் படுவதால் அதன் மதிப்பு அதிகம்.

2. "தங்கம்" பாறை அடுக்குகளால் மூடப்பட்ட நிலையில் உள்ளது. தங்கத்தினை பெற கடினமாக உழைக்க வேண்டும்.

3. "முத்து" ஆழ்கடலில் மறைக்கப்பட்டு, அழகான சிப்பிக்குள் பாதுகாக்கப்படுவதால் அதன் மதிப்பும் உயர்வாகின்றது.

அது போலத் தான் !!!! பெண்களும்.....!!!!

இயற்கை அமைப்பிலே பெண்கள் மிக மென்மையானவர்கள். தோற்றத்தின் மென்மையைப் போலவே, உள்ளமும் மென்மை வய்ந்தது. அவர்கள் இதயம் மலரினும் மென்மை உடையது. அன்பு, ஆதரிப்பு, பராமரிப்பு இவையே பெண்ணுக்குரிய வேலைகளாக உள்ளன. இவற்றில் அவள் பெற்ற திறமையை வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் காணலாம். பெண்ணின் மனமும் செயலும், மலரும் மணமும் போலப் பிரிக்க முடியாதபடி ஒன்றாகிவிட்டன.

பெண்களிடம் தாய்மை உணர்ச்சி உண்டு. அந்தச் செயலால் ஆண்கள் வளர்கிறார்கள். அடுத்தாற் போல் இங்கிதம். இங்கிதம் என்பது பெண்களுடன் கூடப்பிறந்த பொக்கிசமாகும். அவர்களின் உள்ளத்திலே இங்கிதம், பேச்சிலே இனிமை, நடையிலே நளினம், தோற்றத்திலே அழகு - இவை அத்தனையும் பெண்களிடம் உள்ள கலைச் செல்வங்கள்.

இப்படியொரு அற்புதமான படைப்பை ஆணுக்குத் துணையாகப் படைத்தானே அந்த ஏக இறைவனுக்கு வாழ்நாள் முழுக்க ஆண்வர்க்கம் நன்றி சொன்னாலும் போதாது. பெண் என்றும் அடிமையில்லை. அவளை யாரும் அடக்கவுமில்லை. அவளே அடங்கி வாழ்ந்தாள்.

''மானிட வரலாற்றின் பின்னால் ஒரு பெண் இருப்பது உண்மை… அது அம்மாவாக, மனைவியாக, சகோதரியாக ....இன்னும் இன்னும் நீளும் பட்டியல்கள்...
நன்றிகள்.

Wednesday 22 April 2015

பொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு சீக்கிரம்..........!.

பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..!
பொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு சீக்கிரம் வசியம் செய்ய முடியாது....
மூளையின் செயல் திறன்அதிகரிக்கும்.கண்பார்வை திறன் கூடும் .
நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி ,மூக்கடைப்பு (Sinus) பிரச்சனை சரி செய்கிறது.

பாலுறுப்புகளை தூண்டும் புள்ளிகள் மோதிர விரலில் உள்ளது.. ப்ரேசிலட், கைக்கடிகாரம், காப்பு அணிவதும் பாலுறுப்பின் புள்ளிகளை தூண்டும்.

கழுத்து சங்கிலி , கழுத்தணி (Necklace) : கழுத்தில் செயின் அணியும் போது உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகும்.


கையின் பூஜை பகுதியில் இறுக்கமான அணிகலன்கள் அல்லது கயிறுகள் அணியும் பொது உடலில் ரத்த ஓட்டம் சீராகி பதற்றம்படபடப்பு ,பயம் குறைகிறது .மார்பக புற்று நோய் வருவது தவிர்க்க படுவதாக ஆய்விலே உருதிபடுதப்படிருக்கிறது.

பெண்களுக்கு மார்பக புற்று நோய் வருவது இல்லை.கரணம் மணிக்கட்டில் இருந்து முழங்கைக்கு மேல்வரை நெருக்கமாக வளையல்களை அணிவதால் மார்பு பகுதியின் ரத்த ஓடம் சீராக வைத்திருக்க உதவுகிறது.

வளையல்கள் அந்த பகுதியின் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் வெள்ளையணு உற்பத்தி உடலில் அதிகரிக்கிறது.முக்கியமான ஊக்கிகள் (Hormones) சுரப்பும் ஒழுங்குமுறை செய்யபடுகிறது. இதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.

ஒட்டியாணம் அணியும் போது இடுப்பு பகுதியின் சக்தி ஓட்டம் நன்றாக தூண்டப்பட்டு ஆரோக்கியம் கூடும்.வயிற்று பகுதிகள் வலுவடையும்.

மூக்கில் இருக்கும் சில புள்ளிகளுக்கும் பெருங்குடல் மற்றும் சிறுகுடலுக்கும் நெருக்கமான தொடர்னு உண்டு.அந்த புள்ளிகள் தூண்டப்படும் பொது அது சமந்தமான நோய்கள் குணமாகும் .மூக்குத்தி அணியும் பெண்கள் சில நாட்களில் விட்டு சிக்கல் சரியாகி வருவதை உணரலாம் .

கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகம், சிறுநீர்ப்பை, வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல் திறனை தூண்டிவிடும் அற்புதமான அணிகலன் கொலுசு. கர்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனான கொலுசு அணிவதன் மூலம்தீர்க்கலாம் .

மெட்டி அணிவது கர்ப்பப்பையை பலப்படுத்தும். பாலியல்  ஊக்கிகளைத் தூண்டும். பில்லாலி என்பது குழந்தை பிறந்தவுடன் 3வது விரலில் அணியும்போது சில புள்ளிகள் தூண்டப்பட்டு பால் சுரப்பை அதிகப்படுத்தும்.
நன்றிகள்.

Monday 20 April 2015

கணவன் உண்ட அதே இலையில் மனைவி உண்டால் ஆணாதிக்கமா............?

கணவன் உண்ட அதே இலையிலோ அல்லது தட்டிலோ மனைவி உண்ண காரணம்!!

கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான், அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான்,


அவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவி மார்கள் கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம்,பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறலாம், அதற்காக ஏற்படுத்தப் பட்டதே இந்த பழக்கம் ஆகும்.

கணவனில் எச்சிலில் இருக்கும் புதிய மரபணுக்கள் சாப்பாட்டின் மூலம் மனைவியின் உடலில் கலந்து அது அவள் பாலூட்டும் குழந்தைக்கு கிடைக்கவே (ஜீன் அப்டேசன்) இந்த ஏற்பாடு.

என்ன தான் கணவனின் மரபணு குழந்தைக்குள் இருந்தாலும் அது சமீபத்திய மேம்படுத்தவே இந்த ஏற்பாடு. மேலும் இது வயிற்றிற்குள் இருக்கும் குழந்தையின் முதல் ஆறு மாதத்திற்குள் உண்டாகும் வளர்சிதை மாற்றங்களுக்கும், பிறந்தபின் முதல் ஆறு மாதங்களுக்கு ஏற்படும் வளர்ச்சிக்கும் மிக மிக அத்தியாவசமாகிறது என்று மேல்நாட்டு அறிவியல் வல்லுனர்கள் கண்டறிந்து ஆச்சரியப்படுகின்றனர்... 

இபொழுது சொல்லுங்கள் கணவன் உண்ட அதே இலையில் மனைவி உண்டால் ஆணாதிக்கமா?
நன்றிகள்.

உலக எடைக்கோலுக்கு வித்திட்ட தமிழர் அறிவியல்..............!

படத்துல பாக்குறது ஒத்த தட்டு தராசு. நம்ம ஊர்களுல காலங்காலமா பண்டங்கள் நிறுக்க நம்ம மக்களால பயன்படுத்தப்பட்டு வர்ர ஒண்ணு. இத நம்ம ஊர்ல 'வெள்ளிகாவரை' ன்னு சொல்லுவாங்க. சில இடங்களில தூக்கு, தூக்குகோல்ன்னும் சொல்லுவாங்க. 'வெள்ளைக்கோல்வரை' என்கின்ற
சுத்தமான, அழகான தமிழ் சொல்தான் நம்ம வாய்களுக்குள்ள நுழஞ்சி சிதஞ்சி வெள்ளிகாவரன்னு ஆகி போச்சு. 

அந்த கோலுல வெள்ள நிறத்துல சில கோடுங்க வரஞ்சிருப்பாங்க. அதனாலதான் இந்த பேரு. அந்த கோடுங்கதான் எடைகளுக்கான குறியீடுங்க. பொதுவா தாரசுன்ன இரண்டு தட்டு இருக்குறது வழக்கம். ஒண்ணு எடைக்கல் வைக்கறதுக்கு. இன்னொன்னு எடை போட வேண்டியத வைக்க. ஆனா இந்த வெள்ளிக்காவரைங்குற தூக்குகோலுல ஒரு தட்டுதான் உண்டு. அந்த கோலுல வரஞ்சிருக்குற கோடுங்க தான் எடை அளவு. ஒவ்வொரு கோடும் ஒரு எடை அளவுக்கானது. 



அங்க இங்க நகர்த்துற மாதரி அந்த கோலுல ஒரு சின்ன நூல் கயிறு கட்டியிருப்பங்க. தேவையான எடைக்குண்டான கோட்டுக்கு கயித்த நகர்த்தி பிறகு அந்த.கோட்டுலயே கயித்த இருக்கி எடை போட வேண்டிய பொருள தராசுதட்டுல வச்சு கோல தூக்கி எடை போடவேண்டியது தான். கோல் படுக்கவசத்துல சமமா இருந்தா சரியான எடை காட்டுதுன்னு அர்த்தம். மேல பாக்க தூக்குனா நிறுக்குற பொருள் நிறுக்க வேண்டிய அளவுக்கு அதிகமா தட்டுல இருக்குன்னு அர்த்தம். 

கோல் கீழபாக்க தாந்தா குறைவா இருக்குன்னு அர்த்தம். இப்ப புழக்கத்துல இருக்குற ரெட்டத்தட்டு தராச விட இந்த ஒத்தத்தட்டு தராசுக்கு சில விஷேச தன்மைங்க உண்டு. இதுல பண்டங்கள நிறுக்க தனியா எடைக்கல்லுன்னு ஒண்ணு தேவையில்ல. இரட்டத்தட்டுத் தராசுல ஒரு கிலோ எடைக்கு ஒரு பொருள நிறுக்கணுமுண்ண எடைக்கல் ஒரு கிலோ எடை போட வேண்டிய பொருள் ஒரு கிலோன்னு ரெண்டு கிலோ எடைய தூக்குறதுக்கான சக்திய நம்ம உடம்பு செலவழிக்கணும். 

ஆன ஒத்தத்தட்டு தராசுல இந்த பிரச்சனை இல்ல. இன்னக்கு ரயில்வே ஸ்டேசன், லாரி ஆபீஸ் மாதரி இடங்களில பண்டங்கள நிறுக்க பயன்படுத்தப்படுகிற 'மேடை சமநிலை' (Platform Balance) ங்களுக்கு மூலம் நம்ம தாத்தாங்க கண்டுபிடிச்ச ஒத்தத்தட்டு தராசு தான். நாம அபிவிருத்தி பண்ணியிருக்க வேண்டிய நம்ம தாத்தாக்களோட தொழில் நுட்பங்களை எல்லாம் வெளிநாட்டுக்காரன் மேம்படுத்திகிட்டு இருக்கான். நாம வேடிக்க பாத்துகிட்டு இருக்கோம். என்ன கொடுமை சார் இது?........

திருவள்ளுவர் சொன்ன "சமன் செய்து சீர்தூக்கும் கோல்" இது தான். இந்த சமன் செய்து சீர்தூக்கும் கோல்ங்கிறது வேற ஒண்ண ஞாபாகப்படுத்துது. தமிழ் மாதம் ஐப்பசிக்கு துலாம் மாசம்ன்னு ஒரு பேரு இருக்கு. இந்த பேரு எத்துக்குன்ன சூரியன் துலாரசில சஞ்சரிக்குற மாதம் இது. சூரியன் துலா ராசில நுழையுற நாள் அன்னக்கி பூமில பகலும் ராத்திரியும் சம நீளத்துல இருக்கும். 

அதாவது பகல் 12 மணி நேரம் ராத்திரி 12 மணி நேரம். மத்த நாளையில எல்லாம் பகலுக்கும் ராத்திரிக்கும் நீளத்துல கொஞ்சம் கூடுதல் குறைவு வித்தியாசம் இருக்கும். என்வே சமமான நீளம் கொண்ட பகலிரவை கொண்ட நாள் இருக்கிற மாதத்திற்கும் ராசிக்கும் துலாம்ன்னு பேர் வச்சிருக்கிறாங்க நம்ம தாத்தாங்க. 

இன்னும் ஒரு கூடுதல் வானத்தில் துலாராசி நம்ம ஒத்ததட்டு தராசு அதாவது துலாக்கோல் வடிவத்தில் தான் இருக்கு. இப்படி வானியல், கணக்கு, கணக்கீடு, சமானம்ன்னு நம்ம தாத்தாங்களோட பன்முக அறிவு செழிப்பை நினச்சி பார்க்கையில நம்மால் ஆ....ன்னு வாய பிளக்கதான் முடியுது. நம்ம தாத்தாங்களோட அறிவு தொடர்ச்சி கண்ணி நம்ம விட்டு எப்ப, எங்க அறுந்து போச்சுங்கிற கேள்விதான் பதில் இல்லாம நம்ம முன்னால நின்னுக்கிட்டு இருக்கு.......
நன்றிகள்.

Wednesday 1 April 2015

நிலத்தடி நீரைக் காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்...........!.

பனையை வெட்டினால்.... நதிகள் வறண்டு போகும்...!

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர்.


அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும், ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது. இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர். இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும்.

அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும். இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல் நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்...

இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டேவரும் என்பது மட்டும் உண்மை... நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்.
நன்றிகள்.