Thursday 30 May 2013

தமிழர்கள் பயன்படுத்திய காசுகள்...........!

தமிழர்கள் பயன்படுத்திய காசுகள் பற்றிய வரலாற்று தகவல்கள்...


மனித நாகரிகத்தின் தொடக்கக் காலத்தில் உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரு பொருளை வாங்குவதற்கும், விற்பதற்கும் பண்டமாற்று முறைதான் இருந்து வந்தது. இம்முறையில் ஒருவர் தம்மிடமிருந்த நெல்லைக் கொடுத்து மற்றொருவரிடமிருந்த பருப்பை வாங்கினார்.

பிறிதொருவர் தம்மிடமிருந்த மீனைக் கொடுத்துப் பால், தயிர் போன்றவற்றைப் பிறரிடமிருந்து வாங்கினார். இம்முறையில் மிகுதியான பொருட்களைப் பண்டமாற்றம் செய்கையில் அவர்களுக்கு இடர்ப்பாடு ஏற்பட்டது.

ஆதலால் ஒரு பொருளை மையப் பொருளாகக் கொள்ளத் திட்டமிட்டனர். தொடக்கத்தில் மாடு அம்மையப் பொருளாக இருந்தது. இந்தக் காலக்கட்டம் அரப்பன்நாகரிக காலமாக இருக்கலாம்.

அரப்பன் களிமண் முத்திரைத் தகடுகள் கூட அக்காலக் காசுகளாக இருக்கலாம். ஏனெனில் அரப்பன் களிமண் தகடுகளில் காளை உருவம்தான் மிகப் பெரியதாக காணப்படுகிறது.

மாடு மிகுந்த அளவில் பொருட்கள் வாங்க மட்டுமே பயன்பட்டது. குறைந்த அளவில் பொருள்கள் வாங்குவதில் இடர்பாடு ஏற்பட்டது. ஆதலால் - சோழிகளை - மையப் பொருளாகப் பின்னாளில் பயன்படுத்தினர்.

சோழிகளைக் கொண்டு குறைந்த அளவில் பொருள்கள் வாங்குவது எளிதாக இருந்தது. இம்முறையில் உயர்ந்த மதிப்பில் பொருள்களை வாங்க வேண்டுமானால் மூட்டை மூட்டையாகச் சோழிகளைத் தருதல் வேண்டும.

அது மட்டுமின்றி சோழிகள் எளிதில் உடைந்து போகக்கூடிய தன்மை கொண்டவை. இவ்வாறாக இருக்கும் நேரத்தில் உலோகம் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

ஆதலால் உலோகத் தகட்டை மையப்பொருளாகக் கொள்ள முடிவெடுத்தனர். அவ்வுலோகத்திலும் செம்பு மற்றும் தங்கத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். இரண்டுமே கடினமான பொருள்கள். ஆகையால் இவை அவர்களுக்கு நன்கு பயன்பட்டன.

செப்புத் தகட்டைச் சாதாரண பொருள்கள் வாங்குவதற்கும், தங்க உருண்டைகளை மதிப்பு மிகுந்த அறிய பொருள்கள் வாங்குவதற்கும் பயன்படுத்தினர்.

தங்க உருண்டைகள் வேப்பம்பழம் வடிவிலும், நெல்லிக்கனி வடிவிலும் நிறத்திலும் இருந்தன என்பதைச் சங்க இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன. இக்காசுகள் மக்கள் கூட்டு வாழ்க்கை நடத்தியபோது பயன் படுத்தப்பட்டவை.

பிறகு தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து வாழ்ந்தபோது தங்களுக்கென சில குலச்சின்னத்தை ஏற்படுத்திக் கொண்டனர். அக்குழுக்கள் வெளியிட்ட காசுகளில் ஒவ்வொரு குழுவும் தங்கள் உண்மையே நிலைநாட்ட தங்களது குலச்சின்னத்தைச் செப்புத் தகட்டிலோ அல்லது வெள்ளித் தகட்டிலோ முத்திரையாகப் பதித்து வெளியிட்டனர்.

அப்பொழுதுதான் அவை தங்கள் பகுதிகளில் பயன்படுத்தப்படும் உரிமை பெறும். அத்தகைய காசுகள் முத்திரை பதிக்கப்பெற்ற காசுகள் என்று காசு இயல் வல்லுநர்களால் அழைக்கப்படுகின்றன.

அனைத்துக் குழுத்தலைவர்களுக்கும் தலைவனாக ஒருவன் உருவானான். அவனே வேந்தன் என்று அழைக்கப்பட்டான். அவ்வாறு உருவானவர்களே தமிழக மூவேந்தர்கள்.

அம் மூவேந்தர்களும் தங்களுக்கென சில காசுகளை வெளியிட்டார்கள் . அவை சதுரச் செப்புக் காசுகள் என்று வழங்கப் பெறுகின்றன.

சேரரது காசில் ஒரு பக்கம் யானை உருவமும் மறுபக்கம் வில் அம்பு உருவமும் அல்லது பனை மரம் உருவமும் இருக்கும்.

சோழரது காசில் ஒரு பக்கம் யானை உருவமும், மறுபக்கம் புலியினது உருவமும் காணப்படும்.

பாண்டியரது காசில் ஒருபக்கம் யானை உருவமும், மறுபக்கம் மீன் உருவமும் பொறிக்கப்பட்டிருக்கும்.

குறுநில மன்னரான மலையமான் காசில் ஒரு பக்கம் குதிரைச் சின்னமும், மறுபக்கம் ஆற்றின் சின்னமும் காணப்படும்.

குறுநில மன்னரான அதியாமான் காசில் ஒரு பக்கம் நீண்ட கழுத்தையுடைய குதிரைச் சின்னமும், மறுபக்கம் ஆற்றின் கரைகள் சின்னமும் காணப்பெறும்.

மேற்குறிப்பிட்ட சதுரச் செப்புக் காசுகளின் காலம் இற்றைக்குச் சற்றேற குறைய 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாகும்.

இதற்கு அடுத்தகட்ட வளர்ச்சி செப்புச் சதுர மற்றும் ஈய முட்டை வடிவக் காசுகளில் பண்டைத் தமிழ் எழுத்தில் மன்னர் பெயர் பொறித்து வெளியிடப்பட்டவை ஆகும்.

இதுவரை பாண்டிய மன்னன் பெருவழுதி பெயர் பொறிக்கப்பட்ட காசும், அதிய மன்னன் - சேந்தன் அதினன் எதிரான் - பெயர் பொறிக்கப்பட்ட காசும் தொ¢ய வந்துள்ளன. அவை கி.மு 4-3 ஆம் நூற்றாண்டுகளில் வெளியிடப்பட்டவை.

காசு வெளியிடுவதில் இதற்கு அடுத்ததாக மன்னன் தலை உருவத்தோடு, மன்னரது பெயர் பொறிக்கப்பட்டு வெளியிடப் பெற்றிருப்பவை காணப்படுகிறது.

முதல் வகைக் காசில் ஒரு பக்கம் வாயிலில் நிற்கும் மன்னன் உருவமும், அவனைச் சுற்றிப் பண்டைத் தமிழ் எழுத்தில் கொல்லிப்புறை என்ற மன்னன் பெயரும் காணப்படுகின்றன. மறுபக்கம் வில் அம்பு உருவம்.

இரண்டாம் வகைக் காசில் மாக்கோதை என்று மன்னன் பெயர் பண்டைத் தமிழ் எழுத்தில் தலைப்பிலும், அதற்குக் கீழே மன்னனது தலை உருவமும் காணப்படுகிறது.

மூன்றாம் வகையில் குட்டுவன்கோதை என்று மன்னன் பெயர் பண்டைத் தமிழ் எழுத்தில் தலைப்பிலும், அதற்குக் கீழே மன்னனது தலை உருவமும் காணப்படுகிறது.

மூன்றுவகைக் காசுகளிலும் கோதை, பொறை, என்ற சேர அரசர்களின் பெயரொட்டுக்கள் காணப்பெறுவதால் இவை சேரர் காசுகள் என்பது தெளிவாகிறது. இக்காசுகளின் காலம் இற்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்

மலையமான் காசுகள் !!

திருக்கோவலூர் மலையமான் என்பவன் சங்ககால குறுநில மன்னர்களுள் ஒருவன். இவனது வம்சத்தினர் மலையமான் வம்சத்தினர் எனப்பட்டனர். இவர்கள் வெளியிட்ட செப்பு மற்றும் இருமபுக் காசுகள் கிடைத்துளன.

அதில் இவர்கள் ஆண்ட திருக்கோவலூர் ஊரின் பொன்னையாறு, மூன்று மலைகள் மற்றும் ஒரு பாதையும் காணப்படுகிறது. இவற்றின் காலம் கிபி 100 - 300 ஆகும்.

இப்போது நாம் பயன் படுத்தும் காசுகள் பல காலங்களையும் பல நாகரிகங்களை தாண்டி வந்து உள்ளது.
நன்றிகள்.

Wednesday 29 May 2013

கொழுப்பை குறைக்கும் செம்பருத்தி....................!

மருத்துவ குணமுள்ள செம்பருத்தி பூவின் நிறம் மற்றும் அழகில் மயங்காதவர்களே இருக்க முடியாது. ஏராளமான நிறங்கள், ஒற்றை மற்றும் அடுக்கு செம்பருத்தி என பல வகைகள் உள்ளன.


கண்ணை கவரும் இதன் சிவப்பு நிறத்தால் தோட்டத்தில் மற்ற செடிகளுக்கு இடையில் பளீரென அழகாக தோற்றமளிக்கும்.

வீட்டில் அழகுக்காக வளர்க்கப்படும் இதில் பல்வேறு மருத்துவ குணங்களும் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வாகும்.

தேங்காய் எண்ணையில் இதன் காய்ந்த மொட்டுக்களை போட்டு ஊற வைத்து தொடர்ந்து தடவி வந்தால் கூந்தலின் கருமை நிறம் பாதுகாக்கப்படும்.

இங்கிலாந்தை சேர்ந்த தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்த தகவல்கள் இவை. இதை நேரடியாகவோ மறைமுகமாகவோ உட்கொண்டால் கிடைக்கும் பலன் மற்றும் பயன்களை பட்டியலிட்டுள்ளனர்.

அதன் விபரம்: உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். இதன் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து தேநீராக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

தொடர்ந்து இதை பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுக்கும். உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது.

சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டது.

இயற்கையின் கொடை என்பது மட்டுமின்றி பக்க விளைவுகளும் பாதிப்புகளும் அற்றது என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
நன்றிகள்.

இன்சுலின் செடி.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இன்சுலின் செடி...

இன்சுலின் செடி.


1) மூலிகையின் பெயர் - இன்சுலின் செடி.

2) தாவரப்பெயர் - காஸ்டஸ் பிக்டஸ் (Kastas piktas )

3) தமிழ் பெயர் - கோசுட்(ஷ்)டம் (Kostam)

சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக் கொல்லி

4) PLANT FAMILY: Costaceae

5) BOTANICAL NAME: Costus இக்நேஉசு(ஸ்)

6) பயன் தரும் பாகம் -: இலை.

7) வளரியல்பு

இந்தச் செடி வளமான ஈரப் பதம் உள்ள இடங்களில் நன்கு வளரக் கூடியது. இந்தத் தாவரம் ஈஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். மெக்சிகோ மற்றும் கோசுட்(ஸ்)டா ரிகா (Costa Rica) நாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்தது.

இதன் தாயகம் அமரிக்காவின் புளோரிடா மாகாணம். இது பற்றி அறிந்த ஐரோப்பியர்கள் தற்போது இதன் பயனை முழுமையாக அனுபவித்து வருகின்றனர்.

கொச்சியிலும் தமிழகத்திலும் கன்னியாகுமரி யிலும் இந்த தாவரத்துக்கான நாற்றங்கால்(nursery) உள்ளன. நாம் இதை வீட்டுத் தோட்டங்களிலும் தொட்டிகளிலும் கூட வளர்க்கலாம்.

இது மலைக் காடுகளிலும் நீர் நிலைப் பகுதிகளிலும் 10 அடி உயரத்திற்கு மேல் வளரக்கூடியது. இதை இனப் பெருக்கம் செய்ய 3 கணுவுகளை உடைய முதிர்ந்த குச்சிகளை கரும்பு நடுவது போல் நட்டால் வளர்ந்து விடும். 

ஆரம்பத்தில் அடிக்கடி தண்ணீர் விட வேண்டும். இதன் இலைகள் மா இலை போன்று இருக்கும். ஆனால் இலைகள் அடுக்காக விசிறி போல் சுற்றிக் கொண்டு மேல் நோக்கி வளரும். சுவை சிறிது புளிப்பு கலந்திருக்கும்.

8) மருத்துவப் பயன்கள் -:

சர்க்கரை நோயாளிகளுக்கு காசு(ஸ்)டசு(ஸ்) பிக்டசு(ஸ்) என்ற தாவர இலை அதிக பயன்களைத் தருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இன்சுலின் மருந்து பயன் படுத்த வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

முதல் நிலை சர்க்கரை நோயாளிகளை தவிர்த்து 2 ம் நிலை சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதைத் தவிர்க்கக் கூடிய சூழிநிலைதற்போது ஏற்பட்டுள்ளது.

காசுடசு பிக்டசு  என்ற இன்சுலின் தாவரத்தின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலே போதுமானது என்று கூறுகிறார்கள்.

இந்த தாவரத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக் கூடிய மாற்றங்கள் குறித்து முழுமையாக ஆராய்ச்சி செய்து வரும் ஐரோப்பியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இன்சுலின் மருந்து விலங்கிலிருந்தும், சின்தடிக் முறையிலும் தான் தயாரிக்கப் படுகிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு இதைவிட மாற்று மருந்து ஏதும் இல்லை. 

இன்சுலின் மருந்து மாத்திரை வடிவிலோ, திரவ மருந்தாகவோ இன்னும் கண்டு பிடிக்க வில்லை. ஊசிமட்டுமே ஒரே வழியாகும்.

ஆனால் சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு காசுடசு பிக்டசு அதிக பலன்களைத் தருகிறது என தங்கள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆய்வுக் கட்டுரை-Pharmacology Study

தாவரத்தின் இலைகளிலிருந்து பெறப் படும் சாறு இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப் படுத்துவதோடு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆவலையும் படிப்படியாக்க் குறைக்கிறது. ANTI_Diabetic herb.

பல்லாண்டு பயிரான காசுடசு பிக்டசு தாவரத்தின் இலை சாப்பிட்டால் எத்தகைய பின் விளைவிகளும் ஏற்படுவது இல்லை என்று ஆராய்ச்சியில் நிரூபிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இன்சுலின் ஊசி போடுவது கட்டாயமில்லை என்ற நிலையில் சர்கரை நோயாளிகள் பயன் அடைவார்கள். 
நன்றிகள்.

Monday 27 May 2013

பொதுவாக கல்யாண வீடுகளில் திருமணம் முடிந்து மணமக்களை வாழ்த்திய பிறகு வெளியேறும் நபர்களுக்கு தேங்காயை தாம்பூலமாக தரும் காரணம் அறிவீர்களா?


இரண்டு காரணம்:

1. தேங்காய் - இங்கு தேங்காதே! வந்த வேலை முடிந்தது! கிளம்பிச்செல்! சொல்லாமல் சொல்லும் வழி!

2. நெடும் பயணம் நடந்து போகும் போது உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்து + நீர் இரண்டும் உள்ள உணவுப்பொருள்!

பொதுவாக கேட்ட காரியங்களுக்கு தாம்பூலம் கொடுக்கப் படுவதில்லை . 

தாம்ப்பூலத்தை கையில் சுமந்து வரும் பொது இவர்கள் நல்ல காரியத்திற்கு சென்று வருகிறார்கள் அறியும் வண்ணம் தாம்பூலம் வழங்கப்படுகிறது.

ஏன் தேங்காய் தரப்படுகிறது எனில் தேங்குதல் என்றால் தங்குதல் என்று பொருள்.தேங்காய் என்றால் இவ்விடத்தில் தங்கியிருக்காதே என்று பொருள். 

திருமண வீட்டில் நம் கையில் தேங்காயைக் கொடுத்து விட்டால் போய்வாருங்கள் என்று கூறுவதாகப் பொருள்" என சொல்லப்படுகிறது. 

ஆனால் போக்குவரத்திற்கு வாகனங்கள் இல்லாத காலகட்டத்தில் நடை பயண தூரம் அதிகமாக இருக்கும்.

தேங்காய் கொடுத்து அணிப்பினால் தேங்காயும் அதில் உள்ள நீரும் உணவாக அமையும்.

உபாதைகள் இல்லாத சுத்தமான நீர் மற்றும் தேங்காயை மென்று தின்னும் பொது அதில் உள்ள நார்சத்து செரிமானத்தை தரும். என்னும் நல் நோக்கத்திற்காகவே முன்னைய காலத்தில் தாம்பூலப்பை கொடுக்கப்பட்டது. 

ஆனால் இன்றோ ஞாபகார்த்த பரிசுப்பை என்ற பெயரில் மக்களின் அன்றாடத் தேவைகளிற்கு பிரயோசனமற்ற பொருட்களைக் கொடுப்பதால் வீடுகளில் அவை குப்பையாக தெங்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. 
நன்றிகள்.

Sunday 26 May 2013

தமிழனின் வரலாறு துல்லியமாக இதுவரை.................!

தமிழனின் வரலாறு என்னவென்று இதுவரை துல்லியமாக யாரும் சொல்லவில்லை. ஆங்கில மோகம் கொண்டு அலையும் இன்றைய மக்களுக்கு தன் தாய்மொழியின் அருமை அறவே மறந்துவிட்டது. தமிழ் மொழியின் தோற்றம் குறித்து எனக்கு தோன்றிய ஒரு சின்ன உதாரணம்.


திருக்குறள் – ஏன் என்றால், தமிழ் என்று சொன்ன உடனே நம்ம ஞாபகத்திற்கு வருவது அதுதானே.

திருக்குறள் கி.மு.31-ல் தமிழ்கடைசங்கத்தில்அரங்கேற்றபட்டது என்பது அனைவருக்கும் தெரிந்ததே ஆனால், நாம் யோசிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் கடைசங்கம் தான் தமிழின் கடைசி சங்கம். அந்த கடைசி சங்கத்தின் காலமே கி.மு.31 என்றால் இரண்டாம் மற்றும் முதல் சங்கம் எப்பொழுது தோன்றி இருக்கும்.?

திருவள்ளுவர் தொல்காப்பிய இலக்கணபடி திருக்குறள் இயற்றியுள்ளார். ஆனால், தொல்காப்பியரோ அகத்திய இலக்கணத்தை தழுவி தனது இலக்கணத்தை இயற்றியுள்ளார். அப்படியென்றால் அகத்தியர் எப்பொழுது தனது இலக்கணத்தை இயற்றிருப்பர். தமிழனின் இலக்கிய அறிவுக்கு இது ஒரு சான்று.

ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட மொழியில் நன்கு தேர்ந்த பிறகே இலக்கணத்தில் பழக முடியும், இவர்கள் இலக்கணத்தில் நன்கு பழகியவர் என்றால் அவர்கள் தமிழ் மொழியில் நன்கு பழகியிருக்க வேண்டும். அப்படி எனில் தமிழ் மொழி எப்பொழுது தோன்றி இருக்க வேண்டும் என்று நீங்களே யோசித்துப்பாருங்கள்.

இதில் இன்னும் முக்கியமானது என்னவெனில் தமிழ் மக்கள் எப்பொழுது தோன்றியிருப்பார்கள் என்பதே, ஏனெனில் ஒரு மக்கள் சமுதாயம் தான் மொழியை உருவாக்குவது. அவர்கள் மொழியை உருவாக்கியிருக் கின்றனர் என்றால் அவர்கள் தோன்றி பல ஆண்டுகள் கடந்து ஒரு நாகரீக முன்னேற்றம் அடைந்து அதன் பின்னரே மொழியை உருவாக்கியிருக் கின்றனர்.

நான் நெஞ்சை நிமிர்த்து சொல்வேன் தமிழன் என்று. 
நன்றிகள்.

Saturday 25 May 2013

ஆழ்ந்த இரங்கல்கள்.............!



மறைந்த பின்னணிப் பாடகர்  திரு சௌந்தரராஜன் அவர்களின் இழப்பால் துன்பத்தில் இருக்கும் அனைவரிற்கும் பட்டதும்சுட்டதும் இதழின் சார்பான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பழைய சோற்றில் இருக்கு................!

பழைய சோற்றில் இருக்கு சத்து


எரிவாயு அடுப்பும், சமையல் பாத்திரம் (cooker) சோறும் வந்தபின்னர் பழைய சோறு சாப்பிடுவதே நமக்க மறந்துவிட்டது. குழந்தைகளுக்க பழைய சோறு கொடுப்பதையே குற்றமாக கருதும் பெற்றோர்கள் பெருகிவிட்டனர். ஆனால் பழைய சோற்றில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அதிகமாக இருப்பதாக அமெரிக்காவில் இருந்து ஆராய்ச்சி செய்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் சென்று அங்க குடியேறிய நம்மவர்கள் சிலர். தங்களின் இளமைக்காலத்தில் சாப்பிட்ட உணவுகள் கண்டறிந்து நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டாராம். அப்போது அவர்களில் ஒரு சிலருக்கு பழைய சாதத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்யும் எண்ணம் வந்துள்ளது.

அதன் விளைவாக ஒரு குழுவாக அமைத்து ஆசாய்ச்சியில் இறங்கினர். அவர்கள் கண்டறிந்த தகவல்கள் அவர்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது முதல் நாள் சோற்றில் நீருற்றி மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் பி6, பி12 வைட்டமின்கள் ஏராளமாக இருந்துள்ளது.

உடலுக்கு குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் ட்ரில்லியன்ஸ் பாக்டீரியாக்கள் (Trillions Of Bacteria) (கவனியுங்கள் மில்லியன் அல்ல ட்ரில்லியன்) பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம். கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும் போது நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம்.

அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன எந்தக்காய்ச்சலும் நம்மை அணுகாது. காலை சிற்றுண்டியாக பழைய சாதத்தை சாப்பிடுவதால் உடல் இலகுவாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் லட்சக்கணக்கான நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் (bacteria) அதில் உருவாகின்றன.

மறுநாள் இதை சாப்பிடும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்துகிறது. இதிலிருந்து நார்ச்சத்து,மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது. ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு கொழுப்பு சத்து குறைந்துள்ளது. உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால் எந்த நோயும் அருகில் கூட வராது. இப்போதைய நிலையில் புழுங்கல் அரிசி(Raw rice)என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசி சாதத்தை ஒரு மண் சட்டியில் போட்டு சுத்தமான தண்ணீர் ஊற்றி மூடி வைத்து விட்டு மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து மோர் சிறிது சோர்த்து, சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிட்டால் போதும். ஆராய்ச்சியில் சொன்ன பலன்களை அனுபவிக்க முடியும். 
நன்றிகள்.

Friday 24 May 2013

வெறும் ஆறே மணித்தியாலங்களில் பூமியை..............!

வெறும் ஆறே மணித்தியாலங்களில் பூமியைச் சுற்றிவரக்கூடிய குழாய் தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கும் விஞ்ஞானிகள் ஈடுபட்டுவருகின்றனர். 

குழிகை வடிவில் உருவாக்கப்படவிருக்கும் ஒவ்வொரு கொள்கலனிலும் ஆறுபேர் உட்கார்ந்து பயணம் செய்யக் கூடியதாகவும், மணித்தியாலத்திற்கு சுமார் 6,500 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணிக்கக்கூடியதாகவும் இது அமைந்திருக்குமாம்.

சாதாரணமாக நியூயோர்க்கிலிருந்து பீசி(ஜி)ங்கிற்கு பயணிக்க இரண்டு மணித்தியாலங்கள் மட்டுமே எடுக்கும்.

நன்றிகள்.

பிரம்மிக்க வைக்கும் கூர்நுனிக் கோபுரம் (பிரமிட்).................!

பிரம்மிக்க வைக்கும் கூர்நுனிக் கோபுரம் அதிசயங்கள்.


உலக அதிசயங்களில் ஒன்றான பெரிய கூர்நுனிக் கோபுரம் (Great Pyramid) (pyro என்றால் நெருப்பு, amid என்றால் மையம்) என அழைக்கப்படும், சியாப் கூர்நுனிக் கோபுரம், எகிப்து நாட்டில் கெய்ரோ நகரத்திற்கு மேற்கே 15 கி.மீ தூரத்தில் 13 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 69 லட்சம் தொன் எடையும், (2 லிருந்து 15 தொன் எடை உள்ள 23 லட்சம் கற்களால்), 481 அடி உயரமும்,5 லட்சம் பேர்களால் சுமார் 50

ஆண்டு காலம், 500 மைல்களுக்கு அப்பால் உள்ள அசு(ஸ்)வான் மலையிலிருந்து கொண்டு வந்து நிர்மானித்திருக்கும் முறை அவர்களது கட்டிடக்கலை, பொறியியல் விஞ்ஞான அறிவு, கணிதப் புலமை, ஆத்ம தத்துவஞானம், ஆன்மிகச்சிந்தனை, மனித நேயம், தெய்வீக சக்தி, ஆழ்ந்த வானவியல் ஆகியவை, நமது 21ம் நூற்றாண்டு மனித குலத்தின் அறிவுக்கு சவால் விடும்வகையில் அமைந்துள்ளதோடு பிரம்மிப்பையும் ஊட்டுகின்றன.

உள்ளே உள்ள அரசரின் அறை, இந்த பாலைவனத்தின் நடுவிலும் ஆண்டு முழுவதும் கோடை காலத்திலும், குளிர் காலத்திலும் மாறாத (68*F) வெப்ப நிலையில் எந்தவித கருவியின் உதவியும் இல்லாமல் வைக்கப்பட்டுள்ளதும், வைக்கப்பட்டுள்ள 23 லட்சம் கற்களில் கற்களுக்கிடையே உள்ள நெருக்கம் காகிதப்படிமனே துல்லியமாக உள்ளதும், உள்ளே உள்ள தெய்வீக சக்தியின் ஆற்றலும் நம்மை பிரம்மிக்க வைக்கின்றன.

இவை எல்லாத்தையும் விட ஆச்சரியத்தை அளிப்பவை இந்த கூர்நுனிக் கோபுரம் ஒரு பக்க அடிப்பாக நீளம் (760 அடி) 231.6 மீட்டர். இதன் அடிப்பாக சுற்றளவை( 4 * 2331.6 மீ), இதன் செங்குத்து உயரத்தின் இருமடங்கால் வகுத்தால் வருவது 3.142857 ( அதாவது p என்ற இந்த மதிப்பை 5000 ஆண்டுகளுக்கு முன்பே அறிந்து கூர்நுனிக் கோபுரம் நிர்மானித்தவர்கள் உபயோகப்படுத்தியுள்ளனர்)

இந்த கூர்நுனிக் கோபுரம் செங்குத்து உயரத்தை 100 கோடியால் பெருக்க வரும் எண் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் ஆகும்.

இந்த பெரிய கூர்நுனிக் கோபுரம் மையத்தில் ஒரு நேர்கோடு வரைந்தால் அது பூமியில் உள் 5 கண்டங்களையும், கடல்களையும் இரு சம்பாதிகளாகப் பிரிக்கிறது. இதன் பொருள் இந்த பெரிய கூர்நுனிக் கோபுரம் பூமியின் கவர்ச்சி மையத்தில் கட்டப்பட்டுள்ளதே.

அரை வினாடி நேரத்தில் பூமி கடக்கும் தூரத்தின் 1000 த்தில் ஒரு பாகத்தை இந்த கூர்நுனிக் கோபுரம் ஒரு பக்க அடிப்பாக நீளமாக அமைத்துள்ளனர். இதற்கு பூமியின் சுழற்சி, வேகம், அளவு ஆகியவற்றை முன்னரே நன்கு அறிந்திருக்க வேண்டும்.

இந்த கூர்நுனிக் கோபுரம் முக்கோணப் பரப்பு அந்த முக்கோணத்தின் உயரத்தின் வர்க்கத்துக்குச் சரி சமமாக அமைந்துள்ளது. 
நன்றிகள்.

Wednesday 22 May 2013

கோடையைக் குளிர்ச்சியாக்க..............!

கோடையை குளிர்ச்சியாக்க நுங்கு சாப்பிடுங்க!!!


இயற்கையாய் படைக்கப்பட்ட அனைத்தும் நமக்கு அளிக்கப்பட்ட வரம் என்றே சொல்ல வேண்டும். இயற்கையானது காலத்திற்கு ஏற்ப உணவுகளை அளிப்பதில் ஆற்றல் மிக்கது. கோடை காலம் வந்துவிட்டாலே நமக்கு நியாபகம் வருவது நுங்கு தான்.

கோடை காலத்தில் உடலுக்கு குளுமை தரக்கூடியதில் நுங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் கால்சியல், எரியம் (phosphorus), உயிர்ச்சத்து பி வளாகம் (Vitamin B Complex), தையாமின், ரிபோஃப்ளோவின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

குளிர்ச்சி நிறைந்த நுங்கு

கோடையின் வெம்மையை கட்டுப்படுத்துவதில் நுங்கு சிறந்த உணவுப் பொருளாகும். இது குளிர்ச்சி தருவதோடு வைட்டமின் பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலுக்கு ஆரோக்கியத்திற்கு ஏற்றது. நுங்கை வெட்டினால் மூன்று அல்லது நான்கு நுங்குகள் தனித்தனியாக கிடைக்கும் அதனை அப்படியே விரலால் எடுத்து சாப்பிடலாம். இளம் நுங்கினை அப்படியே சாப்பிட வேண்டும்.

ஒருசிலர் மேல்தோல் துவர்ப்பாக இருக்கிறது என்பதற்காக அதனை நீக்கிவிட்டு வெறும் சதையை மட்டுமே சாப்பிடுவார்கள். இதனால் சத்துக்கள் முழுமையாக கிடைக்க வாய்ப்பில்லை. சிறு குழந்தைகளுக்கு செரிமான நேரமாகும் என்பதால் நசுக்கிக் கொடுக்கவேண்டும். முற்றிய நுங்கு, பெரியவர்களுக்கே செரிமானம் ஆகாது எனவே இளம் நுங்கே உண்பதற்கு ஏற்றது.

பதநீரும் நுங்கும்

அம்மை நோயால் அவதிப்படுபவர்கள் இளம் நுங்கை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி ஏற்படும். குடலில் உள்ள சிறு புண்களையும் ஆற்றும். பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் சுவை மிகுந்தது. பனை மட்டையில் பதநீர் ஊற்றி இதனுடன் நுங்கை எடுத்துப்போட்டு குடித்தால் அதன் ருசியே தனிதான்.

எப்படிப்பட்ட கோடை வெப்பத்திலும் இந்த பானம் தாகத்தை தீர்க்கும் குடலுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியை ஏற்படுத்தும். கோடையில் வேர்குரு தொல்லையினால் அவதிப்படுபவர்கள் நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர வேர்க்குரு நீங்கும். தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிசல் நீங்கும்.
நன்றிகள்.

Tuesday 21 May 2013

விரைவில் வரவுள்ளது சூரிய சம்பந்தமான சாயம்..............!

விரைவில் வரவுள்ளது சூரிய சம்பந்தமான சாயம் (solar, paint) சுண்ணாம்பு போல சுவரில் அடிக்கலாம் வீட்டுக்கு வீடு மின்உற்பத்தி நடக்கும்!

சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சூரிய சம்பந்தமான பலகங்களை (solar Panel) திரவ வடிவில் உருவாக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. தரையிலும் சுவரிலும் சூரிய சம்பந்தமான பலகம் சாயத்தை அடித்தால் வீட்டுக்கு வீடு, தரைக்கு தரை, சுவருக்கு சுவர் மின்உற்பத்தி நடக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.


உலகம் முழுவதும் சூரிய சம்பந்தமான மின் உற்பத்தி திட்டங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அனல், நீர்மின் திட்டங்களில் மின்உற்பத்தி குறையும் பகுதிகளில் சூரிய சம்பந்தமான மின் உற்பத்தியில் அரசுகள் கவனம் செலுத்தி வருகின்றன.

மக்களும் அரசுகளும் இதில் சற்று தயக்கம் காட்டுவதற்கு காரணம்.. சூரிய சம்பந்தமான பலகங்கள் அமைப்பதற்கு ஆகும் அதிகப்படியான செலவு.

வருங்காலத்தில் சூரிய சம்பந்தமான பலகத்துக்கு அதிகம் செலவிட அவசியம் இல்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இதுபற்றி அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள பஃபல்லோ பல்கலைக்கழக மின் பொறியியல் (Electrical Engineering) துறை பேராசிரியரும் ஆராய்ச்சியாளருமான கியாவ்கியாங் கான் கூறியதாவது: ஒளி ஆற்றலை மின்சாரமாக மாற்றும் திறன் பெற்ற சூரிய கலங்களின் தொகுப்புதான் சூரிய சம்பந்தமான பலகம் எனப்படுகிறது.

பொதுவாக பாலி கிரிசு(ஸ்)டலைன் சிலிகானை கொண்டுதான் இந்த பலகம் உருவாக்கப்படுகிறது. மெலிதான படச்சுருள் (Film) போல பலகம் தயாரிப்பதென்றால் அமார்பசு(ஸ்) (Amarpas) சிலிகான் அல்லது காட்மியம் டெல்யூரைடு பயன்படுத்தப்படுகிறது.

இந்த இரண்டு வகையுமே அதிக செலவு ஏற்படுத்தக் கூடியவை. குறைந்த செலவிலான சூரிய சம்பந்தமான பலகங்களை உருவாக்கும் முயற்சி உலகம் முழுக்க நடக்கிறது.

அந்த வகையில் பிளாசுமோனிக் (Plasmonic) தன்மை கொண்ட கரிம (Organic) வகை பொருட்களை மாக பயன்படுத்தினால் அதிக மின்உற்பத்தி செய்ய முடியும். செலவும் குறைவு என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், இது திரவ வடிவில் இருப்பதால் பயன்படுத்துவதும் எளிது. திரவ வடிவில் இருக்கும் சூரிய சம்பந்தமான பலகத்தை சுவர், தரை என எந்த பகுதியிலும் சாயம் போல எளிதில் பூச முடியும்.

வெளிச்சம் கிடைக்கும் எல்லா இடத்திலும் இந்த சாயம் அடித்தால் மின்உற்பத்தியும் அதிகளவில் நடக்கும்.

இது மட்டுமின்றி ஒரே நேரத்தில் பல பிரதிகள் எடுக்க உபயோகப்படும் மைபூசிய காகிதத்தை (carbon) அடிப்படையாக கொண்ட சிறு மூலக்கூறுகள், பாலிமர்கள் (Polymers) ஆகியவற்றை பயன்படுத்தி படச்சுருள் வகை சூரிய சம்பந்தமான பலகம் உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளோம். 

இவற்றையும் குறைந்த செலவில் தயாரிக்க முடியும். இவ்வாறு கியாவ்கியாங் கான் கூறினார். 
நன்றிகள். 



Monday 20 May 2013

மனித தோல் பற்றிய தகவல்கள்.............!

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்பன்னர் என அழைக்கலாம் உடலின் மேற்புறம் முழுவதும் போர்வையாக அமைந்துள்ளது. இவ்வமைப்பு உடலின் உள்ளுறுப்புகளைப் பாதுகாக்கிறது. உடலில் நீர் ஆவியாதலைத் தடுக்கிறது.


உடலின் வெப்பத்தைப் பாதுகாக்கிறது. உடலுக்கு வைட்டமின் D தயாரித்தளிக்கிறது. தொடு உணர்ச்சி, வலியறிதலில், வெப்பமறிதலில் போன்ற உணர்வுகளை உடலுக்கு உணர்த்துகிறது. இவ்விதம் பலதரப்பட்ட பணிகளைச் செய்வதால் தோலை 'பலதொழில் விற்பன்னர் எனலாம்.

மேல்தோலானது கை(ஹை)ப்போடெர்மிசு(ஸ்) (கீடெர்மிஸ்) எனும் செல்š பரப்பின் மீது அமைந்துள்ளது. கை(ஹை)ப்போடெர்மிசு(ஸ்), தோலை அடியில் உள்ள எலும்பு, தசைகளுடன் இணைக்கும். மேலும் தோலின் நரம்புகளையும் இரத்தக் குழல்களையும் பெற்றிருக்கும்.

தோலில் டெர்மிசு(ஸ்) , எபிடெர்மிசு(ஸ்) (மேடெர்மிஸ்) என இருமுக்கிய திசுக்கள் உண்டு. டெர்மிசு இணைப்புத் திசுவிலிருந்து தோன்றும். இத்திசுவே தோலுக்கான அடிப்படை வலுவைத்தரும். இப்பகுதியில் நரம்பு முடிவுகள் , ரோமங்களின் அடிப்பகுதிகள், மென்மைத் தசைகள் மற்றும் சுரப்பிகள் உள்ளன 

டெர்மிசு பகுதி இரண்டு அடுக்கு கொண்டது. அவை மேற்புற பாப்பில்லரி அடுக்கு கீழ்ப்புற ரெட்டிகுலார் அடுக்கு ஆகும். ரெட்டிகுலார் அடுக்கு டெர்மிசின் முக்கிய பகுதியாகும். இப்பகுதி அடர்த்தியான தன்மையுடன் கீழ்டெர்மிசுடன் தொடர்பு கொண்டிருக்கும்

தோலானது தடித்தோ அல்லது மென்ம்மையனதகவோ இருக்கலாம். தடித்த தோலில் மேற்குறிப்பிட்ட ஐந்து அடுக்குகளும் உண்டு. உடல்பரப்பு மென்மையான தோல் கொண்டது. தொடர்ந்து உராய்வு உள்ள இடங்களில் தோலில்த் தடிப்பு ஏற்ப்படும் . இதில் கார்னியம் அடுக்கு, பல அடுக்கு செல்களை கொண்டிருக்கும்.

நிறமிகள் தோலின் நிறத்தை உண்டாக்குகின்றன. கார்னியம் அடுக்கின் அடர்த்தி, அடியில் உள்ள இரத்த ஓட்டம் போன்றவைகளும் நிறமளிக்கலாம். நிறமானது மெலனின் நிறமிகளால் தோன்றும் . இந்நிறமி தோல், ரோமம், கண்கள் போன்ற பகுதிகளுக்கு நிறமளிக்கும். சூரியன், உதா கதிர்களிலிருந்து உடலைப் பாதுகாக்கும்.                                                                                            
நன்றிகள். 
                                                                                                                                                                                                   

ஆமணக்கின் மருத்துவ பயன்கள்............!



ஆமணக்கின் இலை, வேர், விதை, நெய் ஆகியவை ஆயுர்வேத மருத்துவத்தில் பல வழிகளில் பயன்படுகின்றன. ஆமணக்கு யூஃபோர்பியேசி என்ற ஒற்றைப் பூவிதழ் வட்டத்தையுடைய இரு விதையிலைக் குடும்பத்தைச் சார்ந்தது. ஏறக்குறைய இந்தியா, இலங்கை முழுவதும் பரவிக் காணப்படுகிறது. இதை, ஆமணக்கு என்றும் சிற்றாமணக்கு என்றும் கூறுவர்.

இலை

சிற்றாமணக்கின் இலையையும், கீழா நெல்லி இலையையும் ஒரே அளவு எடுத்து அரைத்து எலுமிச்சங்காய் அளவு மூன்று நாள் காலையில் மட்டும் கொடுத்து நான்காம் நாள் மூன்று அல்லது நான்கு முறை வயிறு போவதற்குரிய அளவு சிவதைப் பொடி கொடுக்கக் காமாலை குணமாகும்.

இலைகளைச் சிறுக நறுக்கிச் சிற்றாமணக்கு நெய்விட்டு வதக்கிச் சூட்டுடன், வலியுடன் கூடிய கீல் வாய்வுகளுக்கும், வீக்கங்களுக்கும் ஒற்றடம் கொடுக்கலாம். ஆமணக்கின் இலையைச் சிற்றாமணக்கு எண்ணெய் தடவி, அனலில் வாட்டி மார்பில் வைத்துக் கட்டினால் பால் பெருகும்.

ஆமணக்கின் இலையை விளக்கெண்ணெய் தடவி அனலில் வதக்கிக் கட்டிகளில் வைத்துக் கட்ட அவை பழுத்து உடையும். வெளி மூலம், இரத்த மூலம் மற்றும் ரத்தம் கசியும் புண்களில் ஆமணக்கு இலையை அரைத்து பூசி வர இரத்தக் கசிவு மறையும். ரணம் ஆறும். சரும வியாதிகள், நரம்பு வலிகள், வீக்கம், தசை வலி, போன்றவற்றில் ஆமணக்கு இலையை அனலில் வாட்டி கட்டி வர நல்ல பலன் தெரியும்.

வேர்

ஆமணக்கின் வேரைக் குடிநீர் செய்து அதில் சிறிது பூநீறு சேர்த்து மூன்று அல்லது, ஐந்து நாள்களுக்குக் காலை, மாலை ஆகிய இரு நேரங்களில் உட்கொண்டால் பக்கச்சூலை குணமாகும். வளிக் குற்றத்தைத் தன்னிலைப்படுத்தச் செய்யும் குடிநீர்களிலும், தைலங்களிலும் ஆமணக்கின் வேரைச் சேர்ப்பது வழக்கம். பல் வலி, ஈறு வலி, ஈறில் இரத்தம் கசிதல் போன்றவற்றில் ஆமணக்கு இலை மற்றும் குச்சியை மென்று சாப்பிட ரத்தக் கசிவு மறையும். ஈறுகள் பலம் பெறும்.

விதை

ஆமணக்கின் விதையை மேல்தோல் நீக்கிக் காரசாரம் வைத்துத் துவையல் செய்து கழற்றிக் காயளவு கொடுத்தால் மலச்சிக்கல் நீங்கும். விதையை ஓடு நீக்கி அரைத்துக் கட்டிகளின் மேல் பற்றிட அவை பழுத்து உடையும். கன்று ஈனாத எருமைப் பாலில் ஆமணக்கின் பருப்பை இழைத்துக் கண்களில் தீட்டினால் மறுநாள் பீளை போகும். பின்னர்க் கண்கள் மிகவும் தூய்மையாக இருக்கும்.

எண்ணெய்

ஆமணக்கின் விதையிலிருந்து நெய் இருவகையாக எடுக்கப்படும். அவை பச்சை எண்ணெய், ஊற்றினை எண்ணெய் என்பனவாகும். தினசரி காலை, மாலை இரு வேளை மூன்று மி.லி. அளவு உள்ளுக்கு கொடுக்க நரம்புத் தளர்ச்சி, பக்கவாதம், மலக்கட்டு, மூட்டுவலி போன்றவை மறையும்.

குடல் இறக்கம் (hernia), வயிற்றுப் பூச்சிகள், சமிபாட்டுக் கோளாறு, போன்றவற்றிற்கும் மூன்று மில்லி எண்ணெய்யை தினசரி காலை மாலை உள்ளுக்கு கொடுக்கலாம். சிறுநீர் கோளாறுகள், எரிச்சல், சிறுநீர் பாதையில் எரிச்சல் போன்றவற்றிலும் விளக்கெண்ணையை உள்ளுக்கு கொடுக்கலாம்.

தீராத மூட்டு வலி, மூட்டு பிடிப்பு, மூட்டு வாதம், எலும்பு தேய்வு, மூட்டு வீக்கம் போன்றவற்றிற்கும் 2 – 3 மி. லி. தினசரி எண்ணெய்யை உள்ளுக்கு கொடுக்கலாம். வீக்கம், உடல் வலி, போன்றவற்றிலும் விளக்கெண்ணையை உள்ளுக்கு கொடுக்க நல்ல பலன் தெரியும்.

பச்சை எண்ணெய்

ஆமணக்கு விதைகளை உலர்த்தி ஓடுகளை நீக்கி, எந்திரத்தின் மூலமாய்ப் பருப்புகடிள அழுத்திப் பிழியும் எண்ணெய், பச்சை எண்ணெய் எனப்படும்.

ஊற்றின எண்ணெய்

ஓர் அகன்ற பாத்திரத்தில் நான்கு பங்கு நீர் விட்டு, அதில் ஆமணக்குப் பருப்புகளை இடித்து, ஒரு பங்கு சேர்த்து, தீயில் எரிக்க நெய் கக்கி நீரின் மீது மிதக்கும். இதை அகப்பையால் எடுத்து, வேறு பாத்திரத்தில் சேர்த்து, அதில் கலந்துள்ள நீரை, அனலில் வைத்து போக்கும் முறையே ஊற்றின எண்ணெய் எனப்படும். இதில் நீருக்குப் பதிலாக, இளநீர் சேர்த்துக் காய்ச்சி எடுக்கும் எண்ணெய் குற்றமற்றதும், உடலுக்கு மிகுந்த நன்மை பயப்பதுமாகும்.

இதைக் கைக்குழந்தை, இளவயதுடையவர்கள் சூல் கொண்டவர்கள், பிள்ளை பெற்றவர், சீதக் குருதிப் பேதியால் வருந்துபவர் முதலானோர்க்கு அச்சமின்றி வயிறு கழியக் கொடுக்கலாம். தற்போது இம்முறை வழக்கொழிந்து வருகிறது.

மலக்கட்டு உள்ளவர்கள் ஆமணக்கெண்ணையை மல வாயின் உட்புறத்தில் தடவ மலம் இளகி வெளிப்படும் வயிற்று வலியினால் அவதியுறும் குழந்தைகளுக்கு அடிவயிற்றிலும், பெரியவர்களுக்கு தொப்புளைச் சுற்றிலும் ஆமணக்கெண்ணையைத் தடவி, ஒற்றடம் இட வயிற்று வலி குறைந்து, மலம் வெளிப்படும்.

உடம்பில் மேல்தோல் உராய்ந்து, எரிச்சல் ஏற்பட்டால் அவ்விடத்தில் விளக்கெண்ணையைத் தடவ எரிச்சல் நீங்கி முன்பிருந்த நிலையை அடையும். கண்கள் மருந்துகளின் வேகத்தாலும், தூசுகள் விழுவதாலும் அருகிச் சிவந்தால் ஆமணக்கெண்ணையும், தாய்ப்பாலும் சேர்த்துக் குழைத்துக் கண்ணிலிடச் சிவப்பு மாறிக் குணமாகும்.

முலைக்காம்பு புண், வெடிப்பு இவற்றிற்கு இதைத் தடவி வரலாம். முக்கூட்டு நெய்யில் இதுவும் ஒன்று. பலவகையான உள், வெளிப் பயன்பாடுகளில் பயன்படுத்தப்படும் எண்ணெய் முறைகளில் ஆமணக்கெண்ணெய் சேர்க்கப்படுகிறது.

ஆமணக்கு எண்ணெய்

ஆமணக்கு எண்ணெய்யை 5 மி.லி. வீதம் காலையும், மாலையும் உட்கொண்டு வர வாதம், நரம்பு வலி, தசை வலி, முக வாதம் போன்றவற்றிற்கு பயன் தரும்.உள்ளுக்கு 5 மி.லி. வீதம் உட்கொள்ள சமிபாட்டுக் கோளாறுகள் சீராகும். குடல் இறக்கம் பிரச்சனை குறையும்.
நன்றிகள்.

Saturday 18 May 2013

பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள்................!

பெருங்காயத்தை நாம் பெரும்பாலும் சமையலில் நறுமணம் ஊட்டக்கூடிய பொருளாகவே பயன்படுத்துகிறோம், ஆனால் இதற்கென்று பிரத்யேகமான மருத்துவப் பயன்கள் உண்டு.


பெருங்காயம்,வெப்பத்தை(உஷ்ணத்தைத்) தரக்கூடியது,உணவை செரிப்பிக்கிறது,சுவையை அதிகப்படுத்துகிறது. இது கூர்மையானதும் ஊடுருவும் தன்மையுமுடையதாகும், இது வாதத்தையும், கபத்தையும் கண்டிக்கிறது, பித்தத்தை உயர்த்துகிறது. இது வயிறு உப்பல், கிருமி ஆகியவைகளின் சிகிச்சைக்கும் குடற் புழுவகற்றியாகவும் பயன்படும். 

உபயோகங்கள்:

இது ஒரு நல்ல வாய்வகற்றி ; உணவுப் பொருள்களைச் சீரணம் செய்வதில் உதவி செய்கிறது. இது அதிகமாக வாத நோய்களில் உபயோகிக்கப்படுகிறது.

இது வழக்கமான அதாவது எப்போதும் உள்ள இருமலுக்கு கோழையகற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், நீரேற்றத்தையும்-சவ்வுகளின் வீக்கத்தையும், காசத்தையும் நீக்குகிறது. 

சுவாச நோயில் இசிவகற்றியாகவும், வயிற்றில் ஏற்படும் பாதிப்புகட்கும், குடற் கிருமிகளை வெளிப்படுத்தவும் பயனுடையதாகிறது. 

இது, குடலின் உப்புதலை குறைக்கிறது. இதன் சிறப்புச் செய்கையினால் வலி உள்ள மாதவிடாயின்போது இரத்தப்போக்கினை அதிகமாக்குவதற்காகக் கொடுக்கப்படுகிறது. 

நரம்புத் தளர்ச்சியால் ஏற்படும் மூர்ச்சை நோயிலும், வலிப்பு நோயிலும், இது சம்பந்தமான நரம்புக் கோளாறுகளிலும் மிகவும் பயனுடையதாகிறது. 

பிரசவத்திற்குப் பிறகு நஞ்சக் கொடியை வெளியேற்ற கொடுக்கப்படுகிறது. இதை ( பெருங்காயத்தை ) எண்ணெயில் கரைய வைத்துக் காயங்கட்கு மேலே பூசுவதற்கும், காது நோய்களில் பழக்கமான நேர் மருந்தாகக் காது வலியைக் குறைக்க பயன்படுகிறது.

இதைப் பொரித்து உபயோகப்படுத்தலே நலம். பச்சையாக உபயோகித்தால் வாந்தியுண்டாகும். 

இதை நீர் விட்டு உரைத்து மார்பின் மீது பற்றிட குழந்தைகட்கு உண்டாகும் கக்குவான் குணப்படும். 

பிரசவத்தின் பின், அழுக்கை வெளிப்படுத்தக் காயத்தைப் பொரித்து, வெள்ளைப் பூண்டு, பனை வெல்லத்துடன் சேர்த்துக் காலையில் கொடுக்கலாம்.

கோழி முட்டை மஞ்சட் கருவுடன் காயத்தைக் கூட்டிக் கொடுக்க வறட்டிருமல், பக்க வலி நீங்கும். எண்ணெயிலிட்டுக் காய்ச்சி காதுக்கிட, காது வலி தீரும்.
நன்றிகள்.

என்றும் இளமையோடு வாழ எளிய வழி.....................!

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், வெப்பம் (உஷ்ணம்), காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது.

வெப்பத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.


ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள்.

கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை எல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும்.

எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்

கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் வெப்பம் (உஷ்ணம்), வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...

"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.-

காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிசமாகும்.
நன்றிகள்.

Friday 17 May 2013

பிரசவம் வலி நிறைந்த...........!

பிரசவம் என்பது அற்புதம். வலி நிறைந்த ஒரு பயணம் இது. ஆனாலும், வலிகளைத் தாங்கிக்கொண்டு பெற்றெடுத்த குழந்தையின் முகத்தைப் பார்த்தவுடன் பட்ட வேதனை எல்லாம் தாயானவளுக்குப் பறந்தோடிவிடும். 

உதிரமும் பனிக்குட நீருமாக அந்தச் சிசு வெளியே வருகையில், உடல் வலி மறந்து உலகத்தின் அதிசிறந்த படைப்பாளியாக ஆகிவிட்ட நெகிழ்வில் பெற்ற வயிறு சிலிர்க்கும்.

ஆனால், இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்குப் பிரசவங்கள் அறுவைச் சிகிச்சை மூலமே நடைபெறுகின்றன. வலியையும் வாகை சூடிய நெகிழ்வையும் ஒருசேர உணர இன்றைய காலகட்டத்தில் எத்தனை தாய்களால் முடிகிறது?


இயற்கையான சுகப்பிரசவம் நிகழ வாய்ப்பு இருக்கும் நிலையிலும்கூட அறுவைச் சிகிச்சை செய்யச் சொல்லும் வற்புறுத்தல்கள் மருத்துவர்கள், கர்ப்பிணிகள் என இரு தரப்பிலுமே மிகுதியாகிவிட்டன.

சுகப்பிரசவம் நடப்பதில் பிரச்னை என்று வந்தால் மட்டுமே அறுவைச் சிகிச்சைக்குப் போக வேண்டும் என்கிற புரிதல் அனைத்து தாய்மார்களுக்கும் உருவாக வேண்டும்.

அதற்கான ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் இங்கே விளக்குகிறார்கள் 

1 கருத்தரிப்பதற்கு முன் கலந்தாய்வு . . .

திருமணமாகி கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே கணவன் - மனைவி இருவரும் மருத்துவரிடம் ஒரு கலந்தாய்வுக்குச் செல்வது நல்லது.

இந்தக் கலந்தாய்வில் பெண் மற்றும் அவரது கணவரின் குடும்பச் சூழல், குடும்ப வரலாறு ஆகியவற்றை மருத்துவர் தெரிந்துகொள்வதோடு, தம்பதியில் யாருக்கேனும் ஏதேனும் பரம்பரை நோயோ, பெண்ணுக்கு உடல் வளர்ச்சியைப் பாதிக்கும் கழுத்தில் உள்ள சுரப்பி (thyroid), சர்க்கரை நோய், இதய நோய், ஈரல் அழற்சிபறை பி (hepatitis), ரத்த அழுத்தம், வலிப்பு நோய், எச்.ஐ. வி (HIV). போன்ற நோய்களோ இருக்கின்றனவா என்பதையும் கண்டறிவார்.

உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பிரசவத்துக்கு ஒரு தம்பதி தயாராக இது உதவும்.

2 உணவை விரும்பு . . .

கருவுற்ற நாளில் இருந்து தொடர்ந்து வாந்தி, மயக்கம் இருக்கலாம். சிலருக்கு உடலில் நீர்ச் சத்து குறைந்து எடை குறையலாம். சுகப்பிரசவத்துக்கு தாயின் உடல்நிலை இன்றியமையாதது. அதேபோல், குழந்தையின் எடை 3 முதல் 3.5 கி.கி. வரை இருந்தால்தான் குழந்தையின் தலை வெளியே வர ஏதுவாக இருக்கும். இதனால், உணவு விசயத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது அவசியம்.

3 எதைச் சாப்பிடலாம் . . .

முதல் மூன்று மாதங்களில் மசக்கை காரணமாக உணவை மனம் வெறுக்கும். இந்த நாட்களில்தான் உணவில் பெண்கள் கவனம் செலுத்த வேண்டும். திட உணவு எடுத்துக்கொள்ள முடியாத சூழலில் பழச்சாறு போன்ற திரவ உணவுகளையேனும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இத்தகைய சமயங்களில்பெண்கள் உணவை வெறுத்தால், அதுவே ஊட்டச் சத்துக் குறைவை உருவாக்கி ரத்த சோகைக்கு வழிவகுத்து, குழந்தையின் ஆரோக்கியத்தையும் தாயின் உடல் - மன வலிமையையும் குறைத்துவிடும்.

ஆகவே, தொடக்கத்தில் இருந்தே நல்ல ஊட்டச் சத்து மிக்க உணவை எடுத்துக்கொள்வது அவசியம். நீர்ச் சத்துக்கு இளநீர், வாந்தியை எதிர்கொள்ள மாதுளை, இரும்புச் சத்துக்குப் பேரீச்சை ஆகியவை இந்த நாட்களில் பேருதவி செய்யும். 4-வது மாதத்தில் இருந்து இரும்புச் சத்து மிக்க கீரை, காய்கள் மற்றும் பழங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஏனெனில், உடலில் இரும்புச் சத்தின் அளவு குறைந்தால் இரத்த சிவப்பணுவினுடையதை எண்ணிக்கை அளவும் குறையும். இந்த இரத்த சிவப்பணுவின் உடலின் பிற பாகங்களுக்கு பிராண வாயுவை எடுத்துச் செல்ல உதவுகிறது. இதன் அளவு குறையும்போது குழந்தைக்கும் தேவையான பிராண வாயு கிடைக்காமல் மூச்சுத் திணறல் ஏற்படும்.

இதனால் போதிய இரும்புச் சத்து உள்ள உணவுகளையோ, மாத்திரைகளையோ எடுத்துக்கொள்வது தேவையாகிறது. நார்ச் சத்துக்கள் நிரம்பியுள்ள காய்கறிகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால், மலச்சிக்கல் பிரச்னையை முறியடிக்க முடியும். கீரை, ஓட்சு(ஸ்), புதினா, உலர் திராட்சை, கொத்தமல்லி, பேரீச்சை போன்ற உணவுப் பொருட்களில் இரும்புச் சத்து அதிகம் இருக்கிறது.

கொண்டைக்கடலை, ராச்(ஜ்)மா, பயறு வகைகளில் சுண்ணாம்பு சத்து, புரதச் சத்து அதிகம் இருக்கிறது. உருளை,முள்ளங்கி போன்ற கிழங்கு (carrot), வேர்க்கடலை, பாதாம் பருப்பு வகைகளில் புரதம் இருக்கிறது. சர்க்கரைவள்ளிக்கிழங்கு, நூக்கோல் போன்றவற்றில் ஃபோலிக் அமிலம் அதிகம் இருக்கிறது.

அன்றாட உணவில் இவற்றைச் சமச்சீரான விகிதத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறைந்தது தினமும் இரண்டு முதல் மூன்று முகத்தல் அளவையலகு (litre) வரை தண்ணீர் குடித்தால், தாய்க்கு நல்லது. குறிப்பாக பனிக்குடத்துக்கு நல்லது!

4 குனி, வளை, நிமிர் . . .

சுகப்பிரசவத்திற்குப் பெண்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுப்பது மிக மிக முக்கியமான ஒன்று. இது கையில் வளையல் அணிவது போன்ற செயல்பாடுதான்.

சிறிய அளவுள்ள வளையல் பெரிய மணிக்கட்டு உள்ள கையில் எப்படி நுழையாதோ, அதுபோல இடுப்பு எலும்பு சிறியதாக இருந்து குழந்தையின் தலை பெரியதாக இருந்தால், குழந்தையின் தலை வெளியே வராமல் மாட்டிக்கொள்ளும்.

பெண்கள் கருவுற்ற காலத்தில் இருந்து குனிந்து வீட்டைச் சுத்தம் செய்வது, அமர்ந்து துணி துவைப்பது போன்ற வீட்டு வேலைகளில் ஈடுபடுவது நல்லது.

அமர்ந்தே வேலை செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்கள் தினமும் கட்டாயம் நடைப்பயிற்சி செய்தே ஆக வேண்டும். மேலும், உடற்பயிற்சி செய்யும்போது எண்டோர்ஃபின் என்கிற வளரூக்கி (Hormone) சுரக்கும்.

இதனால், உடல் தசைகள் வலுப்பெற்று, குழந்தை சரியான நிலையில் இருக்கும். பெண்களின் பிறப்புறுப்பு நல்ல நெகிழ்வுத் தன்மையுடன் இருக்கும். பிரசவமும் சுலபமாகும். தினமும் காலையில், முக்கால் மணி நேரம் மூச்சு இரைக்காதவாறு மெதுவாக நடக்கலாம்.

5 சரியான எடை . . .

கர்ப்பமாக இருக்கும்போது பெண்களின் எடை 10 முதல் 12 கிலோ வரை கூடலாம். ஆனால், சில பெண்களுக்கு 15 கிலோவுக்கும் அதிகமாக எடை கூடும். இவர்களுக்கு இரட்டைக் குழந்தையாக இருக்கலாம் அல்லது குழந்தையின் எடை அதிகமாக இருக்கலாம்.

இவை இரண்டுமே இல்லை என்றால் உடலின் எந்தப் பகுதியிலோ நீர் கோத்திருக்கிறது என அர்த்தம். இதனால், கர்ப்பிணிகளின் கால் வீங்கிக் காணப்படும். பொதுவாகவே கர்ப்பிணிகளுக்கு கால் வீக்கம் இருப்பது இயல்புதான்.

ஆனால், இந்த வீக்கம் கணுக்காலுக்குக் கீழே மட்டும் இருக்கும். அதுவும் நன்றாகத் தூங்கி எழுந்ததும் சரியாகிவிடும். அப்படி இல்லாமல் கணுக்காலைத் தாண்டியும் வீக்கம் இருந்தால் உப்பு அதிகமாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

சிறுநீர்ப் பரிசோதனை மூலம் உப்பின் அளவைக் கண்டறிந்து, அதைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும். இத்துடன் ரத்த அழுத்தம் அளவுக்கு அதிகமாகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் பேறுகாலத்தின்போது வலிப்பு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற பிரச்னைகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துக் குணப்படுத்த வேண்டியது அவசியம்.

6 படுக்கையும் உறக்கமும் . . .

கர்ப்பிணிகள் முதல் நான்கு மாதங்கள் மல்லாந்த நிலையில் படுக்கலாம். ஆனால், அதற்குப் பிறகு இடதுபுறமாக ஒருக்களித்துப் படுப்பதே தாய்-சேய் இருவருக்கும் சாலச்சிறந்தது. இரவில் எட்டு மணி நேரத் தூக்கமும், பகலில் ஒரு மணி நேரத் தூக்கமும் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியம். முதல் மூன்று மாதமும் கடைசி ஒரு மாதமும் தாம்பத்யத்தைத் தவிர்ப்பது நலம்.

7 ஒரே மருத்துவர் . . .

பொதுவாக முதல் 28 வாரங்களுக்கு மாதம் ஒரு முறையும் அதற்குப் பிறகு 28 முதல் 36 வாரங்கள் வரை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையும் 36-வது வாரம் முதல் பிரசவம் வரை வாரம் ஒரு முறையும் மருத்துவரிடம் பரிசோதனைக்குச் செல்ல வேண்டும். ஆரம்பத்தில் இருந்தே ஒரே மருத்துவரை அணுகுவது நல்லது. நம் உடல்நிலையைப் பற்றிய அனைத்து விவரங்களும் தெளிவாகத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ற சிகிச்சையை அளிக்க மருத்துவருக்கு எளிதாக இருக்கும்.

8 தவறாத மருந்துகள் . . .

தாய், சேய் இருவருக்கும் தசைகளைக் கடினமாக இறுகச் செய்யும் நோய் (tetanus) தொற்றுநோய் ஏற்படாமல் இருக்க நான்கு வார இடைவெளியில் இரண்டு தடவையாக ரண ச(ஜ)ன்னி ஊசி போடவேண்டும். ஃபோலிக் அமில மாத்திரைகளை திருமணமான முதலே பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.

ஏனெனில், இது கர்ப்ப காலத்தில் குழந்தைக்கு ஏற்படக் கூடிய சில பிறவிக் குறைபாடுகளைத் தடுக்கும். ரத்தசோகை பாதிப்பு உடையவர்களுக்கு இரும்புச் சத்து மாத்திரை அல்லது ஊசி தேவைப்படலாம். தவிர, அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப தேவைப்படும் மருந்துகளை மருத்துவர் பரிந்துரைக்கலாம். இந்த மருந்துகளைத் தவறாமல் எடுத்துக்கொள்வது முக்கியம்.

9 கூடாது... கூடாது... கூடவே கூடாது . . .

வயிறு பெரிதாக பெரிதாக அதிக எடையைத் தூக்குவது, ஓடுவது, குடத்தை இடுப்பில் வைப்பது, நாற்காலியின் மீது ஏறுவது போன்ற கடுமையான செயல்களில் ஈடுபடவே கூடாது. தரையில் கால்களை நன்றாக ஊன்றி நடக்க வேண்டும்.

கால்களைத் தொங்கப் போட்டபடி உட்காரக் கூடாது. அடிக்கடி கால்களை நீட்டி, மடக்க வேண்டும். அதிக நேரம் ஒரே இடத்தில் உட்காரக் கூடாது. ஒரே மாதிரியான வேலைகளைத் தவிர்க்க வேண்டும். உடல் முழுவதுக்கும் அசைவு கொடுக்கக் கூடிய பல்வேறு வேலைகளில் ஈடுபட வேண்டும்.

இதனால் உடலில் தசைப்பிடிப்பு, கால்கள் மரத்துப்போதல் போன்றவை ஏற்படாமல் இருக்கும். ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். மேற்கத்திய கழிப்பறைகளைப் (Western toilet) பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

இப்போதைய பெண்கள் பிரசவத்தின்போது காலை மடக்கவே மிகவும் கடினப்படுகின்றனர். இந்திய கழிப்பறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் கால்களை எளிதாக நீட்டி, மடக்க முடியும். நொறுக்குத் தீனிகளை அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது. தேவையற்ற பிரச்னைகளில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நலம். இது மனச் சங்கடங்களைத் தவிர்க்க உதவும்.

10 அகமே சுகம் . . .

தாயின் உடல்நலன் எவ்வளவு முக்கியமோ மனநலனும் அவ்வளவு முக்கியம் சுகப்பிரசவத்துக்கு. இன்றைய காலகட்டத்தில் சுகப்பிரசவத்துக்கு மிகப் பெரிய எதிரி பெண்களுக்குப் பிரசவ வலி மீது உருவாகி இருக்கும் பயம்.

இந்தப் பயத்தை எதிர்கொள்வதற்கு தாயும் தன்னளவில் தயாராக வேண்டும்!.

குடும்ப உறுப்பினர்களும் தாயைத் தயாராக்க வேண்டும். 'இது ஒரு பிரச்னையே இல்லை; உனக்கு எதுவென்றாலும் உதவ நாங்கள் எல்லோரும் இருக்கிறோம்’ என்று ஒவ்வொரு கட்டத்திலும் தாய்க்கு நம்பிக்கை அளிக்க குடும்பத்தினர் தவறக் கூடாது.

தாயின் மனநிலையை எப்போதும் சந்தோசமாக வைத்துக்கொள்ள வேண்டும்!.

தாயும் நல்ல உணவைப் போலவே நல்ல இசை, நல்ல புத்தகங்கள் என மனதை இதமாக வைத்துக்கொள்ளும் விசயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

கூடுமானவரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தவிர்த்தல் நலம். தியானம் மனதை ஒருமுகப்படுத்த உதவுவதோடு தேவையில்லாத பயம் - கவலைகளை நீக்கி பிரசவத்தைத் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள உதவும்.
நன்றிகள்.

Thursday 16 May 2013

வானம் பாடி பறவைகள்...........!


தரிசல் நிலங்கள், ஆற்றுப் படுகைகள்,வயல் வெளிகள் இவற்றில் ஈர மண்ணில் மாட்டுக் குள்ம்பினால் ஏற்பட்ட குழி அல்லது இயற்கையிலேயே உள்ள சிறிய பள்ளம் இவற்றில் காய்ந்த வேர் இலை சரகுகளைக் கொண்டு கிண்ணம் போன்ற தனது கூட்டினை அமைக்கும் வானம்பாடி. ஆமாம், இது பாடுவது எப்போது ?

சாதாரணமாக மாசிமாதம் (பிப்ரவரி) முதல் ஆடிமாதம் (ஜுலை) வரையிலான நாட்களில் ஆண் வானம்பாடி தான் உட்கார்ந்திருக்கும் கல்லிலிருந்தோ அல்லது செடியிலிருந்தோ செங்குத்தாக மேலே பறந்து கண்ணுக் கெட்டாத தூரத்தை அடையும்.

பின் தன் இறக்கைகளை மெதுவாக அடித்துக் கொண்டு ஒரே இடத்தில் இருந்தபடி தன் அழகான குரலில் சிறிது நேரம் இசை எழுப்பும். அவ்வாறு இசை எழுப்புவது சில சமயம் ஐந்து நிமிடங்களுக்குக் கூட நிகழும்.

பின் தன் இறக்கைகளை மடித்துக் கொண்டு ஒரு கல் விழுவது போல செங்குத்தாக கீழே பல மீட்டர் தூரம் இறங்கி தன் இறக்கைகளை விரித்துக் கொண்டு மீண்டும் சிறிது நேரம் இசை எழுப்பும்.

இவ்வாறு இரண்டு மூன்று மட்டங்களில் பாடி முடித்தபின் வானம்பாடி முன்பு உட்கார்ந்து இருந்த இடத்தினை வந்தடையும்.

இந்த இசைக் கச்சேரி வாழ்க்கைத் துணை கிடைக்கும் வரை தொடரும். இப்படி வானத்தில் இசை எழுப்பி துணை தேடுவதை ஒரு ஆண் குருவி மட்டடுமின்றி பல ஆண் குருவிகள் போட்டி போட்டுக் கொண்டு செய்வதும் உண்டு.

முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவந்தபின், தாய் தந்தை ஆகிய இரு பறவைகளுமே அவற்றுக்கு உணவளிப்பதில் பங்கேற்கும்.

நம் நாட்டில் கணப்படும் வானம்பாடிகளில், மூன்று முக்கிய வகைகள் உண்டு. அவை கொண்டைகொண்ட வானம்பாடி (Crested lark), ஆகாசத்து வானம்பாடி (Skylark),சாம்பல் தலை வானம் பாடி (Ashy crowned finch lark) என்பவையாகும். 
நன்றிகள்.

Tuesday 14 May 2013

சுவையான குடிநீரைப் பெற............!

சுத்தமான குடிநீரை இயற்கை முறையில் பெற வேண்டுமா?



''சுமார் 100 ரூபாய்க்குள் ஆரோக்கியமான, சுவையான குடிநீரைப் பெற முடியும். மூன்று மண் பானைகளை வாங்குங்கள். ஆனால், அவற்றை விசேடமாக வடிவமைக்கச் சொல்லிக் கேட்டு வாங்குங்கள்.

மண் பானையைச் செய்யும்போதே இரண்டு பானைகளில் தலைமுடி அளவுக்கு நுண்ணிய துளையை ஏற்படுத்தித் தரச் சொல்லுங்கள். பானையைத் தயாரித்த பின்பு அப்படித் துளையிட முடியாது. உடைந்துவிடும். 

மூன்றாவது பானையில் குழாய் இணைப்பு வைக்கச் சொல்லுங்கள். குழாய் இணைப்பு வைத்த பானையின் மேல் துளையிடப்பட்ட இரண்டு பானைகளையும் அடுக்கிவையுங்கள். நடுப் பானையில் தேங்காய் சிரட்டையை எரியவைத்துப் பொடித்தோ அல்லது கரித் துண்டுகளாகவோ சுமார் ஒன்றரை கப் அளவுக்கு நிரப்பிக்கொள்ளுங்கள்.

மேல் பானையில் சுமார் 20 கூழாங்கற்களை நிரப்புங்கள். இப்போது, மேல் பானையில் கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரை மெதுவாக ஊற்றி நிரப்புங்கள். இரவில் தண்ணீர் ஊற்றினால், விடிந்த பின்பு அடிப்பானையில் குடிநீர் சேகரமாகிவிடும். 

ஃப்ளோரைடு உள்ளிட்ட நச்சுக் கனிமங்களை அகற்றி சுமார் 250 டி.டி.எசு (ஸ்ஸு)க்குக் கீழே இருக்கும் தெள்ள தெளிவாக (Crystal Clear) குடிநீர் இது. 

குடிக்கும்போது ஏதாவது ஒரு சுவை (flevour) வேண்டும் என்பவர்கள், தேங்காய் சிரட்டைக்குப் பதில் எலுமிச்சை அல்லது ஆரஞ்சுப் பழத் தோல்களைக் காயவைத்து எரித்து அந்தக் கரித்தூளை நிரப்பலாம். கரித்தூளையும் கூழாங்கற்களையும் 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றுவது அவசியம்.

தர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஃப்ளோரைடு தன்மை அதிகம் இருக்கும் தண்ணீரைக்கூட இந்த முறையில் சுத்தமான குடிநீராக மாற்றிக் குடிக்கிறார்கள். 

ஆனால், கடல் நீர் ஊடுருவிய நிலத்தடி நீர் மற்றும் தொழிற்சாலை இரசாயனக் கழிவுகள் கலந்த நீரை இந்த முறையில் சுத்தம் செய்ய முடியாது.
நன்றிகள்.

Monday 13 May 2013

புதுவிதமான பறக்கும் மகிழுந்தினை............!

புதுவிதமான பறக்கும் மகிழுந்தினை அமெரிக்காவை சேர்ந்த கார்ல் டயட்ரிச் என்பவர் தயாரித்துள்ளார். இந்த மகிழுந்து விண்ணில் பறக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. இந்த பறக்கும் மகிழுந்து திட்டம் இன்னும் 5 ஆண்டுகளில் சாத்தியமாகும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


இது 2 இருக்கைகள் மட்டுமே கொண்டது. மிகவும் எடை குறைந்த விமானம் போன்றது. மணிக்கு 185 கி.மீட்டர் வேகத்தில் செல்லும். 800 கி.மீட்டர் தூரம் செல்ல செலவாகும் எரிபொருள் நிரப்பும் கொள்ளும் கலம் (Tank) அமைக்கப்பட்டுள்ளது. விண்ணில் பறக்கும்போது அவற்றின் இறக்கைகள் விரியும். அதே நேரத்தில் சாலையில் இறங்கி மகிழுந்து ஆக மாறும்போது அவை மடங்கி சக்கரங்களாக வடிவம் பெறும். இந்த நிகழ்வு 15 வினாடிகளில் நடைபெறும்.

வானூர்தி பொறியாளர் (Aeronautical engineer), மசாசூட்சு(ஸ்) தொழில் நுட்பக் கழக அறிஞர்கள் ஒன்று சேர்ந்து இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். அவர்கள் பல ஆண்டுகள் ஆய்வு செய்து பறக்கும் மகிழுந்தை உருவாக்கி உள்ளனர்.அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக பறக்கும் மகிழுந்து சோதனை செய்து பார்க்கப்பட்டது. அதில் முதல் கட்ட வெற்றி கிடைத்துள்ளது. இதுவரை 28 தடவை பறக்கும் மகிழுந்து விண்ணில் பறந்துள்ளது. 28 தடவையும் அது வெற்றிகரமாக பறந்துள்ளது.

இதை ஓட்ட 20 மணி நேரம் மட்டும் பயிற்சி பெற்றால் போதும். புதுவகையான இம்மகிழுந்து இன்னும் 5 ஆண்டுகளில் அமெரிக்க சாலையில் ஓடுவதை காணமுடியும்.

இந்த பறக்கும் மகிழுந்து, வடிவில் மிகவும் சிறியதாக உள்ளது. 2 பேர் மட்டுமே இதில் பயணம் செய்ய முடியும். பறக்க வேண்டாம் என்று நினைத்தால், சாதாரண மகிழுந்து போல சாலையில் ஓட்டிச் செல்லலாம். சாலையில் சென்று கொண்டிருக்கும்போது ஏதாவது பிரச்சினை என்றாலோ, போக்குவரத்து நெருக்கடி என்றாலோ, வீதியில் சென்றபடியே விண்ணில் தாவி ஏறி பறந்து விட முடியும். எனவே இந்தக் குட்டி மகிழுந்தை, மகிழுந்து போலவும், விமானம் போலவும் விருப்பத்துக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ள முடியும்.

       

இந்தக் குட்டி மகிழுந்தில் 4 சக்கரம் உண்டு. விண்ணில் இருந்து சாலையில் இறங்கும் போது விமானம் போலவே முன் பக்க வண்டிச் சக்கரத்தின் இரும்பு (அ) ரப்பர்க் கட்டு (tyre) உரசியபடி தரை இறங்கும். அந்தச் சமயத்தில் அதில் இணைக்கப்பட்டுள்ள இறக்கைகள் தானாக மடங்கி கொள்ளும். மீண்டும் விண்ணில் பறக்க நினைத்து இயக்கினால், இறக்கைகள் விரிந்து உதவும். இந்த மாற்றத்துக்கு வெறும் 30 வினாடிகளே தேவைப்படும் என்று பறக்கும் மகிழுந்தை உருவாக்கிய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்னும் சில சோதனைகள் செய்து இதை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
நன்றிகள்.

கோவைக்காய் பற்றி சில துளிகள்........................!

சர்க்கரை நோயை கட்டு படுத்தும் கோவைக்காய் !!


நம்முடைய உணவுப் பழக்க முறைகளில் கூடுதல் கவனம் செலுத்தினால் நீரிழிவு நோய் வராமல் தப்பித்துக் கொள்ளலாம். சாதாரணமாக எல்லா காய்கறி அங்காடிகளிலும் தாராளமாகக் கிடைக்கக் கூடியதுதான் கோவைக்காய்.

நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் வைக்க நாம் சாப்பிட வேண்டி உணவு பற்றி பார்க்கிறோம். சர்க்கரை நோயை கோவக்காய் கட்டுப்படுத்துகிறது :

கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

நீரிழிவு நோய்யை உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகளால் இதைக் கட்டுப் படுத்த முடியும். சர்க்கரை நோய் கட்டுப் பாட்டுக்குள் இருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியாவிட்டால் அதைப் போன்ற ஆபத்தான நோய் வேறு எதுவுமில்லை.

நோயாளிகள் பாகற்காய், வேப்பிலைச்சாறு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அடிக்கடி சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு குறைந்துவிடுகிறது என்று சாப்பிட்ட பலர் கூறுகிறார்கள்.ஆனால் அது ரொம்ப ரொம்ப கடினம்.

சாப்பிடுவர்களின் முகத்தைப் பார்த்தால் அவர்கள் முகம் எத்தனை கோணத்தில் போகும் என்று பார்ப்பவருக்கு மட்டும் தான் தெரியும். இந்த நிலையில் கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கோவைக்காய் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைப் பரிசோதித்ததில் சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்து இருந்ததைக் கண்டுபிடித்தனர். தினமும் 50 கிராம் சமைத்த கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையும் என்று அந்த ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.

ரகம்- 2 சர்க்கரை நோயாளிகள் தினமும் கோவக்காயை சமைத்து சாப்பிட்டால் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். அனைத்துக் கடைகளிலும் மிக எளிதாகக் குறைந்த விலையில் கிடைக்கும் கோவக்காய் நார்ச்சத்து நிரம்பியது. அதை சமைத்தும் பச்சையாகவும் சாப்பிடலாம்.

கோவைக்காய் பற்றி சில துளிகள்

மருத்துவப் பயன்பாடுடைய தாவரமாகும். இக் கொடித் தாவரம் பற்றைக் காடுகள், வேலிகளில் வளர்கிறது. இதன் இலையின் பிளவு அமைப்பைக் கொண்டு மூவிரல் கோவை, ஐவிரல் கோவை என்ற பிரிவுகள் உண்டு. இதன் பூ வெள்ளை நிறமானதாகும். இலை, காய், தண்டு, வேர் என எல்லாப் பாகங்களும் மருத்துவ குணமுடையனவாகும்.

இலைக்கஞ்சியில் இதன் இலை சேர்க்கப்படுவதுண்டு.கொஞ்சமாய் துவர்ப்புச் சுவையுடைய இந்த கோவைக்காயில் பொரியல், வற்றல், கூட்டு, சாம்பார் செய்து உணவில் சேர்த்துக் கொள்வதுண்டு. மற்றும் கோவைக்காய் பச்சடி சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு.

நாக்கு சுவையை மட்டுமே கருதாமல் உடல் நலத்தையும் கருத்தில் எடுத்துக் கொண்டால் எல்லா உணவுகளுமே விருப்ப முடையதாகத்தான் ஆகும். இதனைப் பொதுவாக எல்லோருமே சாப்பிடலாம்.பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.

கோவைக்காயின் ச‌த்துக்க‌ள்:

உயிர்ச்சத்து (vitamin) ஏ 156 மைக்ரோ கிராம் (Micro gram), ஃபோலிக் அமிலம் (Folic acid), கால்சியம் (Calcium), எரியம் (phosphorus), இரும்பு ஆகிய தாதுப்பொருள்கள் உள்ளன.

கண்குளிர்ச்சியை உண்டாக்கும். இலைச்சாற்றுடன் வெண்ணெய் சேர்த்து சிரங்குகளுக்குப் பூசலாம். இதன் இலைச்சாற்றைப் பருகி வந்தால் நீரழிவு நோய் கட்டுப்படும். கொவ்வங்காய் கோரோசனை மாத்திரை செய்யப் பயன்படுகிறது. நாக்கில் உள்ள வெடிப்பு, நாக்குப் புண், வாய்ப்புண் நீங்கும்.

கோவக்காயில் வைட்டமின் ஏ சத்து உள்ளது. வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை சேர்த்துக்கலாம். இக்காய் கொஞ்சாம் சூடு. அதனால் உதடு வெடிப்பு, வயிற்றுப் புண் ஏற்ப்படும்.

ஆனால் நாம் நீரிழிவு நோய்யாளிக‌ள் நீர் மோர், எலுமிச்சை சாறு என்று எடுத்துக் கொள்ளுவ‌தால் இந்த‌ சூடு அதிக‌ம் ஏற்ப்ப‌டாது. ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம்.முக்கியமா முற்றின கோவைக்காய் வாங்ககூடாது.

பிஞ்சு காயா பார்த்து வாங்கணும். பிஞ்சு காய் இளம்பச்சை நிறத்தில் இருக்கும். இக்காய்யை நீரிழிவு நோயாளிகள் மட்டும் அல்லாமல் எல்லரும் சாப்பிட்டலாம்.
நன்றிகள்.

Sunday 12 May 2013

கழிவு நீரை பளிங்கு நீராக்கி...........!

கழிவு நீரை பளிங்கு நீராக்கி நீங்களும் வீட்டுத் தோட்டம் போடலாம்...!


வீட்டுத்தோட்டம் போட ஆசைதான், ஆனால் தண்ணீருக்கு எங்கு செல்வது? என்று மலைத்து நின்றுவிடுவோம். இனி அந்த கவலையை விடுங்கள். வீட்டில் இருந்து வெளியேறும் கழிவு நீரையே எளிய முறையில் சுத்தப்படுத்தி பயன்படுத்தால்.

இதோ அதற்கான தொழில்நுட்பம்...

வீட்டில் உள்ள குளியல் அறை, கழிவறை, சமையல் அறை ஆகியவற்றில் இருந்து வெளியே செல்லும் நீரில் ரசாயனங்கள் கலந்து இருக்கும். அவற்றை அப்படியே செடி, கொடிகளுக்குப் பாய்ச்சினால்... அவை பாதிப்படையும். 

அதேசமயம், இந்த நீரை எளிய முறையில் சுத்திகரித்துவிட முடியும். அதைப் பயன்படுத்தினால் செடி, கொடிகளுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது.

நீளம், அகலம், ஆழம் அனைத்தும் மூன்று அடி அளவுள்ள ஒரு சிமிட்டி (cement) தொட்டியின் வழியாக கழிவுநீர் செல்வது போல் அமைக்க வேண்டும். தொட்டியின் அடிபாகத்தில் தண்ணீர் வெளியேற துளை இருக்க வேண்டும்.

தொட்டியில் நீரை விடுவதற்கு முன்பு, மணல், கருங்கல் ச(ஜ)ல்லி போன்றவற்றை பாதி அளவுக்கு நிரப்பி, அதில் கல்வாழை, சேப்பங்கிழங்கு போன்றவற்றை நடவும்.

சல்லியில் உருவாகும் ஒருவித பாசியில் உள்ள பொருட்களைப்புளிக்க வைக்கும் அல்லது நோய் உண்டாக்கும் நுண் உயிரிகள் (bacteria) , குளியல் அறை நீரில் கலந்துள்ள பொசு(ஸ்)பேட் உப்பு (Phosphate salt), வெடியம் (sodium) என பல உப்புகளையும் தின்றுவிடும்.

கல்வாழை செடிகள் சுத்திகரிக்கப்பட்ட நீர் தொட்டியின் கீழ்ப் பகுதிக்குச் செல்ல உதவும். தொட்டியில் நீரை விட்ட ஒரு மணி நேரத்தில், சுத்திகரிக்கப்பட்ட நீர் வெளியே வரத் தொடங்கும். இப்படி சுத்திகரிக்கப்பட்ட நீரில் செடி, கொடிகள் நன்றாக வளரும்!
நன்றிகள்.

Saturday 11 May 2013

பறை ஒரு தமிழிசை...........!

பறை ஒரு தமிழிசைக் கருவியாகும். இது தோலால் ஆன மேளமாகும். 'பறை' என்ற சொல் பேச்சைக் குறிப்பதாகும். 'பேசு' எனப்பொருள்படும் 'அறை' என்ற சொல்லினின்று 'பறை' தோன்றியது. (நன்னூல் : 458). பேசுவதை இசைக்க வல்ல தாளக் கருவி 'பறை' எனப்பட்டது.


பன்னெடுங்கால வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள பறை, ஓர் இசைக் கருவி மட்டுமல்ல தொல்குடித் தமிழ்ச் சமூகத்தின் சொத்து. தோலிசைக் கருவிகளின் தாய். தமிழினத்தின் தொன்மையான அடையாளம்.

உழைக்கும் மக்களின் இசைக் களஞ்சியம். தமிழர் வாழ்வியலின் முகம். கற்காலத்தின் முதல் தகவல் தொடர்பு சாதனம். பறையடித்து தகவல் சொல்லுதல் பழங்காலத்தில் ஒரு முக்கிய தகவல் பரப்பு முறையாகவும், பறையரின் தொழிலாகவும் அமைந்தது.

பண்டைய காலத்தில் வாழ்ந்த தொல்குடித் தமிழர்களின் நிலவியல் பாகுபாட்டின் அடிப்படையிலும் 'பறை' பயன்படுத்தப்பட்ட வரலாறு உண்டு. 

குறிஞ்சிப்பறை, முல்லைப்பறை, மருதப்பறை, நெய்தற்பறை, பாலைப்பறை என ஐய்ந்திணைகளிலும் பறை முழக்கிய செய்திகள் காணக் கிடைக்கின்றன. 'பறை' என்ற சொல்லே இசைக் கருவியையும், செய்தி அறிவிக்கும் முறையையும் குறித்தது என தொல்காப்பியம் கூறுகிறது.

வரலாறு


பழங்காலத் தமிழர் வாழ்வியலில் செய்தியூடகம் என்று ஒன்று இல்லாதக் காலக்கட்டத்தில், ஒரு நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை, அறிவித்தல்களை, அரசக் கட்டளைகளை ஊர் ஊராகச் சென்று சொல்லுதல் "பறைதல்" என்றும், அவ்வாறு ஊர் ஊராகச் சென்று சொல்பவர் "பறையர்" என்பதும் காரணப்பெயர்களாகும்.

காலப்போக்கில் தமிழர் வாழ்வியலின் சாதிய வேறுப்பாடுகளின் அடிப்படையில் பறை, பறையர் எனும் தூயத் தமிழ் சொற்கள் தொழில் நிலையை குறிக்கும் பெயராக மாற்றம் பெற்றுள்ளன.

அதேவேளை ஊரூராகச் சென்று செய்திகள், அறிவித்தல்கள், அரச மற்றும் நிர்வாகக் கட்டளைகள் போன்றவற்றை பறைபவர் (சொல்பவர்), தற்போதைய தற்கால ஒலிப்பெருக்கி போன்ற சாதனங்கள் இல்லாத நிலையில் உரத்த குரலில் சத்தமிட்டே பறைய வேண்டியக் கட்டாயச் சூழல் இருந்திருக்கும் என்பதை இன்றையச் சூழ்நிலையில் எளிதாகப் புரிந்துக்கொள்ளலாம். 

அத்துடன் உரத்தக் குரலில் சத்தமாகப் பறைபவர் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஒரு கருவியின் துணைக்கொண்டு, அதனை ஓங்கி அடித்து ஒலியெழுப்பி, தான் கொண்டு வந்த செய்தியை, அல்லது அறிவித்தலை மக்களுக்குப் பறைவார்.

இதனால் காலப்போக்கில் "பறை" எனும் வினைச்சொல், பறையும் பொழுதும் மக்களை ஈர்ப்பதற்கு பயன்படுத்திய ஒலியெழுப்பிய கருவிக்கான பெயர் சொல்லாக நிலைத்துவிட்டது.

வாழ்வியல் கூறுகளுடன் பறை..


ஒரு மன்னன் எதிர்நாட்டுக்கு சென்று போர் புரியும் முன் அங்குள்ள போர் புரியவியலாத மக்களை வெளியேர வேண்ட,[1]
பெருகிவரும் புனலை அடைக்க,
உழவர் மக்களை அழைக்க,
போர்க்கெழுமாறு வீரர்களை அணிதிரட்ட,
வெற்றி தோல்வியை அறிவிக்க,
வயல்களில் உழவு வேலை செய்வோருக்கு ஊக்கமளிக்க,
விதைக்க,
அறுவடை செய்ய,
காடுகளில் விலங்குகளை விரட்ட,
மன்னரின் செய்திகளை மக்களுக்குத் தெரிவிக்க,
இயற்கை வழிபாட்டில்,
கூத்துகளில்,
விழாக்களில்,
இறப்பில்

எனப் பல்வேறு வாழ்வியல் கூறுகளுடன் 'பறை' இணைந்து இயங்கியுள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளன.

"பறை என்பது ஓடும் இசையை ஒழுங்கு பெற நிறுத்தி ஓர் அளவோடு சீரோடு, ஒத்த அழகோடு நடக்க, இசைக்கு நடை கற்பிக்கும் கருவி' என முனைவர் வளர்மதி தன்னுடைய "பறை' ஆய்வு நூலில் விளக்குகிறார்.

பறை ஆட்டம்.................................

பறை ஆட்டம் என்பது தமிழர்களின் பாரம்பரியமான நடனம் ஆகும். பறையாட்டம் உணர்ச்சி மிக்கது. மற்றும் எழுச்சி மிகுந்தது. அதிர்ந்தெழும் பறையின் ஓசைக்கேற்ப ஆடக்கூடியது என்பதால் பறையாட்டம் கிளர்ந்தெழும் உடல் அசைவுகளைக் கொண்டது.

ஆதி மனித சமூகம் தங்கள் கூடுதலுக்காகவும், தங்கள் குழுவுக்கு ஆபத்துக்களை உணர்த்தவும், விலங்குகளிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் எழுப்பிக் கொண்ட சத்தம் தான் பறையாட்டத்தின் மூலம் எனக் கருதப்படுகிறது.

ஆவேசம், மகிழ்ச்சி, உற்சாகம் என உணர்ச்சிகளை எழுப்பி, கேட்போரை ஒரே நேர்க்கோட்டில் இணைக்கும் சக்தி வாய்ந்தது இது.

பறையின் வகைகள்....

பறையின் இசையும், வடிவமும் நுணுக்கமாக வேறுபடுகிறது. அவற்றில் முக்கியமானவை வருமாறு; [3]

அரிப்பறை - அரித்தெழும் ஓசையையுடைய பறை.

அரிப்பறை மேகலை யாகி யார்த்தவே (சீவக சிந்தாமணி. 2688).

ஆறெறிப் பறை - வழிப்பறி செய்வோர் கொட்டும் பறை. திருக்குறள் - 1076

ஆறெறிபறையுஞ் சூறைச் சின்னமும் (சிலப்பதிகாரம். 12, 40).

உவகைப்பறை - மகிழ்ச்சியைக்குறிக்கும் பறை. (திவாகர நிகண்டு)
சாப்பறை - சாவில் அடிக்கப்படும் பறை. (திவாகர நிகண்டு)
சாக்காட்டுப் பறை - இறுதிச் சடங்கின் போது இசைக்கும் பறை.
வெட்டியான்பறை - சில விசேடகாலங்களிற் கொட்டும் பறை.
நெய்தற்பறை - நெய்தல் நிலத்துக்குரிய பறை.திருக்குறள்-1115
பம்பை - நெய்தனிலங்கட்குரிய பறை. (திவாகர நிகண்டு).

தழங்குரற் பம்பையிற் சாற்றி (சீவக சிந்தாமணி.40).

மீன்கோட்பறை - நெய்தனிலப் பறை. (இறை. 1, பக். 17.)
மருதநிலப்பறை - மருதநிலத்திற்குரிய பறை.
கல்லவடம் - ஒரு வகைப்பறை

கல்லவடமிட்டுத் திசைதொழு தாடியும் (தேவாரம். 576, 6).

குரவைப்பறை - குறிஞ்சிநிலத்துக்குரியது. குறிஞ்சிப்பறை = குறிஞ்சிநிலத்துக்குரிய தொண்டகப் பறை.
தடறு - தொண்டகப் பறை. (அக. நி.)
குறும்பறை - குறும்பறை யசைஇ (புறநானூறு. 67, 9)
கொடுகொட்டி - ஒரு வகைப்பறை

கொடுகொட்டி யாடலும் (சிலப்பதிகாரம். 6, 43), குடமுழவங் கொடு கொட்டி குழலு மோங்க (தேவாரம். 225, 2).


கோட்பறை - செய்திகளை நகரத் தார்க்குத் தெரிவிக்கும் பறை.
தமுக்கு - செய்தி தெரிவிக்க முழக்கும் ஒருகட் பறை.
நிசாளம் - ஒருகட் பறை. நிசாளந் துடுமை (சிலப். 3, 27, உரை).
சூசிகம் - ஒருவகைப் பறை. தகுதியெனக் கூறும் நெறி.
தக்கை - அகப்புறமுழவு மூன்றனுள் ஒன்றாகிய ஒருவகைப் பறை. (பிங்கல நிகண்டு); (சிலப்பதிகாரம். 3, 26, உரை.)
தடாரி - பம்பையென்னும் பறை. (பிங்கல நிகண்டு)
பறைத்தப்பட்டை, தண்ணம், தம்பட்டம், திடும், திண்டிமம், நாவாய்ப்பறை, திமிலை (சிலப்பதிகாரம். 3, 27, உரை)
தலைப்பறை - யானை முதலியவற்றின் முன்னே கொட்டும் பறை.
படலை - வாயகன்ற பறை. (சூடாமணி நிகண்டு)
பண்டாரமேளம் - அரச விளம்பரங் குறிக்கும் பறை.
பன்றிப்பறை - காட்டுப்பன்றிகளை வெருட்டக் கொட்டும் பறை. (பிங்கல நிகண்டு)
முரசம், வெருப்பறை - போர்ப் பறைகள்.

முரச மிடைப்புலத் திரங்க வாரமர் மயங்கிய ஞாட்பில் (புறநானூறு. 288).

பூசற்றண்ணுமை - பகைவருடன் போர்புரிதற்காக, வீரரை அழைத்தற்குக் கொட்டும் பறை. (நன்னூல்)
முருகியம் - குறிஞ்சிநிலத்தில் முருகனுக்குரிய வெறியாட்டுப் பறை. (தொல்காப்பியம். பொ. 18, உரை.)
வெறியாட்டுப்பறை - குறிஞ்சிநிலப் பறை.
வீராணம் - ஒருவகைப் பெரிய பறை.

வீராணம் வெற்றிமுரசு (திருப்புகழ். 264).

பஞ்சமாசத்தம் - சேகண்டி கைத்தாளம் காளம் என்றும் தத்தளி மத்தளி கரடிகை தாளம் காகளம் என்றும் இருவித மாகச் சொல்லும் ஐவகைப் பறை. 
நன்றிகள்.

Thursday 9 May 2013

இக்காலத் தமிழின் தேவைகள்............!

இக்காலத் தமிழின் தேவைகள் என்னென்ன?

9ஆவது உலகத் தமிழ் மாநாட்டினைக் கோவையில் நடத்தத் தமிழக அரசு முனைப்புடன் செயலாற்றி வருகிறது. இத்தகைய மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரை என்பது ஒரு சிறு பகுதியாகி, கலை - இலக்கிய நிகழ்ச்சிகள், அலங்கார வாகன அணிவகுப்பு, ஊர்வலம்.... உள்ளிட்ட பல்வேறு கூறுகள் முக்கியத்துவம் பெற்றுவிட்டன.

பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய இத்தகைய நிகழ்ச்சிகளால் மக்கள் பங்கேற்பு கூடலாம். சுற்றுலாவுக்குச் செல்வது போல் அவர்கள் புறப்பட்டு வரலாம். ஆனால், இத்தகைய மாநாட்டினால் தமிழுக்கு என்ன பயன் என்பது ஒரு கேள்விக் குறியே.

என் கண்ணோட்டத்தில் இக்காலத் தமிழின் தேவைகள் சிலவற்றைக் குறிப்பிடுகிறேன்.


1. தமிழக அரசின் அனைத்து இணையதளங்களையும் ஒருங்குறிக்கு மாற்றிட வேண்டும். ஒருங்குறியைத் தமிழக அரசு தன் அதிகாரபூர்வ குறியீட்டு முறையாக ஏற்க வேண்டும். அதற்கு உலக மொழிகள் பட்டியலில் உரிய இடங்களைப் பெறத் தொடர்ந்து முயல வேண்டும்.

2. தமிழக அரசு அலுவலகங்கள் அனைத்தையும் கணினிமயம் ஆக்க வேண்டும். அத்துடன் அந்தக் கணினிகளில் திறந்தமூல மென்பொருள்களின் பயன்பாட்டினை அதிகரிக்க வேண்டும். இவற்றைப் பயன்படுத்தும் வண்ணம்  இது குறித்த பயிற்சிப் பட்டறைகளை நடத்த வேண்டும்.

அதன் தொடர்ச்சியாகத் தமிழில் மென்பொருள்களை உருவாக்கிடவும் ஏற்கெனவே உள்ள மென்பொருள்களைத் தமிழில் பெயர்க்கவும் ஆயிரக்கணக்கான தன்னார்வக் குழுக்களை உருவாக்க வேண்டும்.

3. ஒலி பெயர்ப்பு முறைகளைத் தரப்படுத்த வேண்டும். சமசு(ஸ்)கிருதம், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, உருது........ எனப் பற்பல மொழிகளின் சொற்களைத் தமிழில் எழுதும் போது, எவ்வாறு எழுத வேண்டும் என்பதற்குப் பொதுவான நெறிமுறைகளை வகுத்திட வேண்டும்.

அதே போன்று தமிழிலிருந்து வேறு மொழிகளுக்கு ஒலிபெயர்க்கும் போது எவ்வாறு பெயர்க்க வேண்டும் என்பதற்கும் மொழிவாரியாக வழிகாட்டு நெறிமுறைளை வகுக்க வேண்டும்.

4. துறைவாரியாக, தொழில்வாரியாகப் புதிய கலைச்சொற்களை உருவாக்கி, ஒத்த தரத்துடன் நிலைநிறுத்த வேண்டும். சொற்களுக்கு வரிசை முறையை அளிக்க வேண்டும். புதிய சொல்லாக்கங்களை வெகுமக்களிடம் எடுத்துச் செல்ல, நீண்ட கால நோக்கில் திட்டங்களை வகுக்க வேண்டும்.

முதலில் அரசு அவற்றைத் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும். பிறகு பள்ளி / கல்லூரிகளின் பாடத் திட்டங்களில் இடம்பெறச் செய்ய வேண்டும். அரசு ஊழியர்கள், நற்றமிழில் எழுதுவதுடன் இவ்வாறுதான் பேச வேண்டும் என வலியுறுத்தலாம்.

எடுத்துக் காட்டிற்கு, பேருந்தில் நடத்துநர் 'டிக்கெட், டிக்கெட்' எனக் கூறாமல், 'பயணச் சீட்டு எடுங்கள்' எனக் கேட்க வழிகாட்ட வேண்டும். ஆசிரியர்களையும் இவ்வாறு பேசச் செய்யலாம். இதற்கென துறைவாரியாக அரசு ஊழியர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கலாம்.

5. CM, PM, CEO, CFO, BM, Oz, NZ, WI.......... என ஆங்கிலத்தில் எண்ணற்ற சுருக்கெழுத்துகள் உள்ளன. இவற்றை மொழிபெயர்க்கையில் தமிழில் நீளமாக எழுத வேண்டியிருக்கிறது. Chief Minister என்பதை ஆங்கிலத்தில் CM என்பர். ஆனால், தமிழில் முதல்வர் என்றே எழுத வேண்டியுள்ளது. இதனால் தலைப்பில் அதிக இடம் ஒதுக்க வேண்டியிருக்கிறது.

எனவே, புதிய சுருக்கெழுத்துகளைத் தமிழில் உருவாக்கி, நிலைநிறுத்த வேண்டும். தமிழக அரசு என்பதை மாத்திரைகளில் 'த/அ' என எழுதினர்; சென்னை மாநகராட்சி என்பதைச் 'செ/மா' என எழுதினர். இவ்வாறு, ஒவ்வொரு பதவிக்கும் இடத்திற்கும் முக்கிய நபர்களுக்கும் தமிழில் சுருக்கெழுத்துகளை உருவாக்க முயல வேண்டும். அவ்வாறே அடையாளக் குறிகளையும் பிரபலப்படுத்த வேண்டும்.

6. தமிழில் வெளிவந்துள்ள அனைத்து நூல்களையும் மின்னணு வடிவில் மாற்றி, இணையத்தில் சேமிக்க வேண்டும் (காப்புரிமை உள்ளவற்றைத் தனியே வகைப்படுத்திச் சேமிக்கலாம். அவற்றை வாசிக்க மட்டும் கட்டணம் விதிக்கலாம்). அந்த நூல்களை ஒலி வடிவில் மாற்றிச் சேமிக்கவும் திட்டங்கள் வகுக்க வேண்டும். நூலகத்தைப் படிப்பதற்கு மட்டுமின்றி, கேட்பதற்கும் பார்ப்பதற்கும் வசதியானதாக மாற்றிட வேண்டும்.

7. தமிழில் உள்ள ஓலைச் சுவடிகள், பட்டயங்கள், கல்வெட்டுகள்... இன்னபிற தொல்லியல் சான்றுகள் அனைத்தையும் இணையத்தில் ஏற்றிட வேண்டும். தமிழின் அனைத்து வகை கலை - இலக்கிய - மரபுச் செல்வங்களையும் காத்திடத் தனித் துறை உருவாக்கப்பட வேண்டும். ஆவணக் காப்பகத்தைப் பெரிய அளவில் விரிவாக்க வேண்டும்.

8. தமிழகத்தில் உள்ள சிதிலம் அடைந்துள்ள, அடைந்து வருகிற கோயில்கள் அனைத்தையும் காத்திடச் சிறப்புத் திட்டங்களை வகுக்க வேண்டும். பெரிய கோயில்களை மட்டுமின்றி, பழைமை வாய்ந்த சிறிய கோயில்களையும் கவனிக்க வேண்டும். அவற்றினைப் புதுப்பித்து, தொடர்ச்சியாகத் தூய்மையும் அழகும் மரபும் பேண, ஊக்கமுள்ள குழுக்களை அமைக்க வேண்டும்.

9. தமிழில் பெயர் சூட்டும் வழக்கத்தை மக்களிடம் அதிகரிக்க வேண்டும். இதற்காக அவர்களுக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கலாம். முக்கியமாக, முதலெழுத்துகளையும் தமிழில் வைத்துக்கொள்ளும் வழக்கத்தை மீண்டும் கொணர வேண்டும்.

10. தமிழ் வரிவடிவங்களைச் சீரமைக்க வேண்டும். தமிழ் எழுத்துகளில் ங, ஞ வர்க்க எழுத்துகளில் பல பயன்பாட்டில் இல்லை. அதே நேரத்தில் அயல் மொழிகளில் உள்ள சில ஒலிகளை உச்சரிப்பதில் தமிழுக்குச் சிக்கல் இருக்கிறது. இந்தப் புதிய தேவைகளை நிறைவுசெய்ய, தமிழ் வரி வடிவங்களை மறுசீரமைக்கலாம். தேவையெனில் சில புதிய எழுத்துகளையும் ஓசைகளையும் அறிமுகப்படுத்தலாம்.

11. இக்காலச் சூழலுக்கு ஏற்ப இலக்கண விதிகளைத் திருத்த வேண்டும். முக்கியமாக அயல் மொழிச் சொற்களுடன் சேர்த்துத் தமிழ்ச் சொற்களை எழுதும்போது எவ்வகையில் புணர்ச்சி விதிகள் அமைய வேண்டும்? வட்டார வழக்குச் சொற்களை எழுதுகையில் பின்பற்ற வேண்டிய இலக்கண விதிகள்? பேச்சுத் தமிழில் கொச்சையாக எழுதுகையில் பின்பற்ற வேண்டிய விதிகள் ஆகியவற்றை ஆராய வேண்டும்.

12. தமிழர்கள் புலம்பெயர்ந்ததன் காரணமாக, உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நிலப் பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள். (பார்க்க: http://tinyurl.com/nlcbbo) தமிழரின் நிலங்கள், திணைகள், காலங்கள், தெய்வங்கள் உள்ளிட்ட பலவற்றில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. இவற்றைக் கூர்ந்து கவனித்து, புதிய இலக்கண நூல் ஒன்றினை உருவாக்க வேண்டியது, காலத்தின் கட்டாயம்.

13. பயன்பாட்டுத் தமிழ் என்ற பாடத்தில் கூடுதல் அம்சங்களைச் சேர்க்க வேண்டும். ஊடகம், மொழிபெயர்ப்பு, சொற்பொழிவு... உள்ளிட்ட சிலவற்றுடன் அறிவியல் - நுட்பங்களை மிக அதிக அளவில் சேர்க்க வேண்டும். அறிவியல் தமிழ் என்ற பதம், தமிழின் புதிய முகத்தினைக் காட்டக் கூடியது. அதையொட்டி, தமிழ் சார்ந்த வேலைவாய்ப்புகளை மிக அதிகமாக உருவாக்க வேண்டும்.

14. தமிழ் - தமிழ், தமிழ் - ஆங்கிலம், தமிழ் - இந்தி, தமிழ் - பிரெஞ்சு... ஆகிய அகராதிகளுடன் இன்னும் ஒரு 100 மொழிகளுக்காவது தமிழ் அகராதிகளை உருவாக்க வேண்டும். இந்திய மொழிகள் அனைத்திற்கும் தமிழ் அகராதிகளை உருவாக்க வேண்டும், அதே போன்று இதர ஐரோப்பிய, ஆப்பிரிக்க, ஆசிய மொழிகளுக்கும் அகராதிகளை உருவாக்க வேண்டும்.

இந்த மொழிகளுக்கான அறிஞர்களைக் கண்டறிந்து விரிவான திட்டமிடலுடன் இந்தப் பணியை நிறைவேற்ற வேண்டும். இத்தகைய முயற்சிகளின் மூலமாக அந்த நாடுகளிலிருந்து முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர்கள் தமிழகத்திற்கு வர வாய்ப்புண்டு.

அதே போன்று தமிழகத் தொழிலதிபர்களும் அங்கு செல்ல வாய்ப்பு உண்டு. தொழில் மட்டுமின்றி, கல்வி, கலை, மருத்துவம், ஆன்மீகம்.... போன்ற பல துறைகளில் பரிமாற்றங்கள் நிகழ, இந்த அகராதிப் பணிகள் பெரும் உதவி புரியும்.

15. தமிழகத்தின் இலக்கியம், ஓவியம், இசை, நடனம், சித்த மருத்துவம், ஆன்மீகம், யோகா.... உள்ளிட்ட பற்பல செவ்வியல் கூறுகளுக்கு உலகளாவிய சந்தையை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு புதிய முயற்சியும் உலகம் முழுவதையும் உடனே எட்டும் விதத்தில் வலைப் பின்னலை வலுவாக்க வேண்டும்.

16. தமிழகம் முழுவதும் அதிவேக இணைய இணைப்பினை உருவாக்கிட வேண்டும். கம்பியில்லா இணைய மண்டலமாகத் தமிழகத்தை மேம்படுத்த வேண்டும். அதனை இலவசமாகவும் அளிக்க வேண்டும். தமிழர் ஒவ்வொருவருக்கும் மின்னஞ்சல் முகவரி இருக்க வேண்டும். இந்த இலக்கினை கி.பி.2020க்குள் அடைய அரசு இலக்கு நிர்ணயிக்க வேண்டும்.

17. அனைத்து மொழிகளுக்குமான மொழிமாற்ற மென்பொருள்களை உருவாக்கத் தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் எந்த மொழியில் வரும் எந்தச் செய்தியையும் தமிழர்கள் உடனே தமிழிலேயே அறிய முடியும்.

18. செல்பேசிகளில் தமிழ்த் தட்டச்சினை ஒத்த தரத்துடன் நிலைநிறுத்த வேண்டும். அதன் மூலம் தமிழில் குறுஞ்செய்திகள் அனுப்ப ஊக்குவிக்க வேண்டும். செல்பேசி மூலமாகவே வங்கி, அரசு, தனியார் உள்ளிட்ட அனைத்துச் சேவைகளையும் தமிழில் பெற ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

19. பேருந்து, தொடர்வண்டி, மகிழுந்து உள்ளிட்ட வாகனங்களில் தானியங்கி தமிழ் அறிவிப்புகள் இடம்பெற வேண்டும். புவியிட அமைவு முறைப்படி (GPS - Global Positioning System) செயற்கைக்கோள் மூலமாக நாம் இருக்கும் இடத்தைத் தமிழில் எழுத்திலும் குரலிலும் அறிய வகை பிறக்க வேண்டும்.

செல்பேசிகளிலும் இந்த வசதியை அளிக்க வேண்டும். இதற்கேற்பத் தமிழக அரசே இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்துடன் இணைந்து, புதிய செயற்கைக் கோளை ஏவி, தமிழக நிலப் பரப்புகளைத் துல்லியமாகப் படம் பிடிக்க வேண்டும், இடப் பெயர்களை ஒலியிலும் எழுத்திலும் பதிய வேண்டும்; அரசு நினைத்தால் இன்னும் இரண்டே ஆண்டுகளில் இதை நிறைவேற்றிட முடியும்.

20. கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உள்ள தமிழ்த் துறைகளைத் தமிழ் மொழியியல் ஆய்வகம் என அழைத்திடல் வேண்டும். அங்கு உள்ளோர், மொழியின் பன்முகப் பரிமாணங்களைக் கூர்ந்து ஆராய்ந்து, ஆய்வறிக்கைகளை அளிக்க வேண்டும்.

அனைத்துப் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களும் இணையதளங்களையும் குழுமங்களையும் உருவாக்க வேண்டும். மாணவர்களுக்குத் தனியாகவும் ஆசிரியர்களுக்குத் தனியாகவும் இந்தக் குழுமங்கள் அமையலாம். இதில் பழைய மாணவர்களும் ஓய்வுபெற்ற ஆசிரியர்களும்கூட கலந்துகொள்ள வழிவகை காணலாம்.

21. கல்வியைப் பள்ளிகளிலும் கல்லூரிகளில் நேரில் சென்றுதான் கற்க வேண்டும் என்ற முறையை மாற்றிட வேண்டும். எந்தக் கல்வியையும் எந்த நேரத்திலும் எந்த இடத்திலிருந்தும் கற்கலாம் என்ற வசதியை அளிக்க வேண்டும். ஒரு கல்லூரியில் பேராசிரியர் எடுக்கும் பாடங்களை இதர கல்லூரிகளில் காண வழிவகை செய்ய வேண்டும்.

உலகின் இரு கோடிகளில் உள்ள ஆசிரியர்களும் மாணவர்களும் ஒற்றைச் சொடுக்கில் ஊடாட வேண்டும். இதற்கு http://openmentor.net போன்ற தளங்கள் உதவும். இது தொடர்பான எனது முந்தைய கட்டுரை, இதோ: http://tinyurl.com/kn7vlh

22. நேனோ தொழில்நுட்பம் உள்பட அனைத்து அறிவியல் - நுட்பங்கள் குறித்தும் தமிழில் கற்பிக்க ஏற்ற நூல்களை உடனுக்குடன் விரிவாக எழுத வேண்டும்.

23. எழுத்தினைக் குரலாக மாற்றுகின்ற மென்பொருளைத் தமிழில் விரைவில் மேம்படுத்த வேண்டும். ஒரே எழுத்தினைப் பல்லாயிரம் குரல்களில் கேட்கிற வாய்ப்பு, இதில் உள்ளது. முன்னுரிமைப் பணிகளின் பட்டியலைத் தயாரித்து, அதில் இதற்கு இடம் அளிக்க வேண்டும்.

24. தமிழரின் உணவு முறையை மேம்படுத்த வேண்டும். தமிழரின் பண்டைய உணவுகளை, வட்டார ரீதியான உணவுகளைப் புதிய முறையில், சரிவிகித உணவாக மீண்டும் அறிமுகப்படுதத வேண்டும். தமிழர்கள் உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்டு, கட்டான உடலமைப்பினைப் பெறும் வகையில் திட்டங்கள் வகுக்க வேண்டும். அப்படிச் செய்தால், இவற்றின் தாக்கம், மரபணுக்கள் ரீதியில் அடுத்தடுத்த தலைமுறைகளிலாவது வெளிப்படும்.

25. தமிழரின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்த வேண்டும். இது, மறைமுகமாக மொழியுடனும் தொடர்பு உடையது. தமிழ் என்பது மொழி மட்டும் இல்லை; பண்பாடு, கலை, அறிவியல், நுட்பங்கள்.... உள்ளிட்ட 360 பாகை கோணங்கள் உடைய கரு இது. இதனை அவ்வளவு ஆழமாகவும் விரிவாகவும் அணுகினால்தான் உறுதியான பயன்களை எதிர்பார்க்க முடியும்.
நன்றிகள்.