Saturday 31 May 2014

ஆரோக்கியத்திற்காகவும் நம் பெரியவர்கள் இப்பழக்க.!

நெற்றியில் பொட்டு வைப்பது என்பது அலங்காரத்திற்காகவும், ஆன்மிக காரணத்திற்காகவும் மட்டுமல்ல. ஆரோக்கியத்திற்காகவும். நெற்றியில் குங்குமம் வைப்பதால் என்ன நன்மை .............

நாகரிகமோகத்தில் நிகழும் தவறுகளில் ஒட்டுப்(Sticker) பொட்டு வைத்துக் கொள்வதும் ஒன்று. நெற்றியில் புருவமத்தியில் மூளையின் முன்புறமாக, பைனீயல் க்ளாண்ட் என்ற சுரப்பி அமைந்துள்ளது. இதை, யோக சாத்(ஸ்)திரத்தில் ஆக்ஞா சக்ர நிலையம் (ஸ்தானம்) என குறிப்பிட்டுள்ளனர். மூன்றாவது கண், ஞானக்கண் என்றும் இதற்குப் பெயருண்டு. சிவபெருமானுக்கு ஆக்ஞா சக்கரமே நெற்றிக்கண்ணாக இருப்பதைக் காணலாம்.


திபெத்தில் லாமாக்கள் ஞானக்கண் திறப்பது என்றொரு சடங்கு செய்கின்றனர். இதன் சிறப்பை உணர்வதற்காகவே நெற்றியில் குங்குமம் இடுகிறோம். பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் குங்குமம் வைக்க வேண்டும். உடல் முழுவதும் மின்காந்த சக்தி வெளிப்பட்டாலும், நெற்றியில் புருவமத்தியிலுள்ள நுண்ணிய பகுதியில் அதன் சக்தி அதிகமாக வெளிப்படுகிறது. 

இதன் காரணமாகத்தான், மன கடுமையாக (Mentally tough) வந்தாலோ, ஏதாவது ஒன்றை தீவிரமாக சிந்தித்தாலோ அந்த இடம் வேப்ப மடைந்து தலைகனம், தலைவலி போன்ற பிரச்னை உண்டாகிறது. இதை தவிர்த்து, குளிர்ச்சியை உண்டாக்கவே சந்தனம், குங்குமம் போன்றவற்றை நெற்றியில் இடுகிறோம். இதனால், உடல், மனோசக்தி வீணாகாமல் பாதுகாக்கப்படுகிறது. முகம் களையோடு பிரகாசமாகத் திகழ்கிறது.

பொட்டு வைப்பது என்பது அலங்காரத்திற்காகவும், ஆன்மிக காரணத்திற்காகவும் மட்டுமல்ல... ஆரோக்கியத்திற்காகவும் நம் பெரியவர்கள் இப்பழக்கத்தை ஏற்படுத்தினர்.
நன்றிகள்.

Thursday 29 May 2014

கருப்பை வீணாகி விட்டிருந்தால்.....!

கர்ப்பப்பை கட்டிகள்! பொதுவாக நிறைய பெண்களுக்கு முப்பத்தைந்து வயதிற்கு மேல் கர்ப்பப்பையில் கட்டிகள் தோன்றுகின்றன. முப்பத்தைந்து வயதிற்கு மேல் உள்ள நாறு பெண்களைச் சோதனை செய்து பார்த்தால் அதில் எண்பது சதம் பெண்களுக்குக் கருப்பையில் கட்டிகள் இருக்கும். இக் கட்டிகளில் இரு வகை உண்டு. பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலத்திற்கு அறிகுறியாகத் தோன்றும் கட்டிகள்.


அடுத்தது புற்றுநோய் கட்டிகள் (Cancer Tumors). முதலில் கர்பப்பையில் வரும் சாதாரணக் கட்டிகளைப் பற்றிப் பார்ப்போம். இந்தக் கர்பப்பைக் கட்டிகளால் உயிருக்கு ஏதும் ஆபத்து இல்லை. இந்தக் கட்டிகள் பிற்காலத்தில் புற்றுநோயாகவும் மாறாது என்பது மனத்திற்கு ஆறுதல் தான்.

இக்கட்டிகள் வந்ததற்கான அறிகுறிகள் என்னவென்றால் உடலும் முகமும் ஊதிவிடும். ஒரு சிலருக்கு இக்கட்டிகள் இருந்தாலும் இந்த பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. அவர்கள் கட்டியிருந்தாலும் எப்பொழுதும் போலவே இருப்பார்கள். ஆனால் மேற் சொன்ன அறிகுறிகள் இருப்பவர்களுக்கு அக்கட்டிகளை அறுவை சிகிட்சை செய்து அகற்றி விடவே மருத்துவர்கள் ஆலோசனைத் தருகிறார்கள்.

மற்றபடி அந்தக் கட்டிகளைப் போக்க எந்த மருந்தும் இல்லை. சாதாரண வலி நிவாரணி மருந்துக்களைத் தான் மருத்துவர்கள் கொடுக்கிறார்கள். அந்த மருந்துகளால் அந்த நேரத்தில் அறுதலே தவிர முழு நிவாரணம் கிடைக்காது. அப்படிக் கட்டியிருந்து அறுவை சிகிட்சை மேற்கொண்டு கட்டிகளை எடுத்துவிட முடிவு செய்தால் அவசியமாக கர்பப்பையை நுட்பமாய்ச் சோதித்து (scan) செய்து பார்த்துவிட்டு அறுவை சிகிட்சைக்கு ஒப்புக்கொள்வது நல்லது.

காரணம், கருப்பையில் உள்ள கட்டிகளை மட்டும் எடுத்துவிட்டு கருப்பையை எடுக்காமலேயும் விட்டுவிடலாம். ஆனால் சில நேரங்களில் கட்டிகளால் கருப்பையும் அழற்சிக்குள்ளாகி விடுகிறது. அப்படி கருப்பை வீணாகி விட்டிருந்தால் கருப்பையையும் எழுத்துவிடுவே நல்லது.

ஏன் நுட்பமாய்ச் சோதித்து பார்க்கவேண்டும் என்றால் சாதாரண எதிரொலி வரைபடம் (Echo grafik) கருபப்பை அழற்ச்சி தெரியாது. அப்படி கவனிக்காமல் கட்டியை மட்டும் எடுத்துவிட்டு கருப்பையை விட்டுவிட்டால் மீண்டும் கட்டிகள் தோன்ற வாய்ப்பும் உள்ளது. அழற்சியான கருபப்பையால் வலியும் முழுமையாகப் போகாது. நுட்பமாய்ச் சோதித்து பார்த்து கருப்பை நன்றாக இருக்கிறது என்று நிச்சயமாகத் தெரிந்தால் கட்டியை மட்டும் அறுவை சிகிட்சையின் மூலம் எடுத்துவிடலாம்.

தவிர... கருப்பையில் புற்றுநோய் கட்டிகள் இருந்தால் எந்த வித தாமதமும் இன்றி உடனடியாக அறுவைசிகிட்சை மூலம் கருபப்பையை எடுத்துவிடுவதே உயிருக்கு ஆபத்தில்லாம் இருக்கலாம். கருப்பப்பையில் மட்டுமல்லாமல் பெண்களின் வயிற்றில் மற்ற இடத்திலும் இக்கட்டிகள் தோன்றுகிறது. இதனால் பெரிய பாதிப்பு எதுவும் வருவதில்லை. இக்கட்டிகள் வரக்காரணம்... பெண்களுக்குப் பலமுறை கருச்சிதைவு செய்திருந்தால் இந்தப் பிரட்சனைகள் வரலாம்.

ஆனால் இதை மட்டும் காரணம் என்றும் சொல்ல முடியாது. கல்யாணமே செய்துக் கொள்ளாமல் தனிமையில் இருக்கும் சில பெண்களுக்கும் இந்தக் கருப்பைக் கட்டிகள் தோன்றியிருக்கிறது. அதனால் இக்கட்டிகள் வர சரியான காரணத்தைச் சொல்ல முடிவதில்லை. இந்தப் பிரட்சனைகளில் இருந்து தப்பிக்க பெண்கள் தங்களின் முப்பது வயதிற்கு மேல் ஆறு மாதத்திற்கு ஒரு முறை அவசியம் மருத்துவரிடம் சென்று தன்னைப் பரிசோதித்துக் கொள்வதே சாலச்சிறந்தது.
நன்றிகள்.

Wednesday 28 May 2014

வெங்காயச்சருகுகளால் மூடப்பட்டிருந்ததே......!

பொக்ரான் அணுகுண்டுச் சோதனையும்,சித்தர்களின் கண்டுபிடிப்பும்!!!

பொக்ரைனில் அணுகுண்டு வெடித்து பரிசோதனை செய்யப்பட்டபோது, இந்தியா கூறிய பிறகே உலக நாடுகளால் அறிய முடிந்தது. அமெரிக்கா போன்ற வல்லரசுகள் கூட ஆச்சரியப்பட்டன. எந்த ஒரு செயற்கைக்கோளாலும் (satellite) முன் கூட்டி அறிய முடியவில்லை. என்ன காரணம் தெரியுமா?.


அணுகுண்டைச் சுற்றி வெங்காயச்சருகுகளால் மூடப்பட்டிருந்ததே. வெங்காயச் சருகுகளுக்குள் எந்தவொரு கதிரியக்கமும் நுழைய முடியாது என்பதை கண்டு பிடித்துக் கொடுத்தவர் பதினெண் சித்தர்களில் ஒருவரான போகர் மகரிசி!
நன்றிகள்.

Monday 26 May 2014

நீரிழிவும் உருளைக் கிழங்கும்.....!

உருளைக் கிழங்கு நல்ல உணவா? நீரிழிவு உள்ளவர்களும் சாப்பிடலாமா
பெருமையடித்துக் கொண்டார் அந்தப் பெண்மணி.

"கிழங்கை இவருக்கு நான் கண்ணிலையும் காட்டிறதில்லை. பாவம் விருப்பம்தான் ஆளுக்கு. நான்தான் அவற்ரை வாயைக் கட்டிப் போட்டன்"

வழமையான வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக வந்தபோது அவருடைய இரத்த சீனியின் அளவு நல்ல கட்டுப்பாட்டில் இருப்பதாக திருப்தியடைந்து மகிழ்ச்சியுடன் பாராட்டினேன்.


உருளைக்கிழங்கு கொடுக்காத தன்னுடைய கெட்டித்தனத்தால்தான் அவ்வாறு நடந்தது என பெரிய கடகத்தில் புகழைத் தன் தலையில் சுமந்து கொண்டார்.

நொட்டைச் சாப்பாடுகளைத் தவிர்த்து காய்கறி பழவகைளை அதிகம் சாப்பிட்டும், வாசிகசாலைத் திண்ணையில் குந்தியிருந்து அரட்டை அடிப்பதைத் துறந்து கடற்கரை வரை நடைப் பயிற்சி செய்தும் அவர் செய்த சுய முயற்சிகள் யாவும் அவளது பெருவாயால் தூர்வாரி மூடப்பட்டன.


"நிலத்திற்கு கீழே விளையுறதுகளை கண்ணிலையும் காட்டக் கூடாது என்று வைத்தியர் சொன்னதை நான் மறக்கிறதே இல்லை" என்றார் மற்றொருவர். கரட், உருளைக்கிழங்கு, வத்தாளை, கரணை, மரவெள்ளி, பனங்கிழங்கு, இவை யாவுமே நிலத்தின் கீழ் விளையும் கிழங்குகள்தான். ராபு, நோகோல், கரட், பீட்ரூட், இவையும் அவ்வாறுதான் மண்ணுள் விளைபவைதான்.

அந்த வைத்தியர் மண்ணுக்கு கீழ் போய் எவ்வளவு காலமோ தெரியாது. அந்தக் காலத்தில் இருந்த மருத்துவ மற்றும் விஞ்ஞான அறிவைக் கொண்டு அவர் சொல்லியிருக்கக் கூடும் அல்லது இவர் தவறாக அர்த்ப்படுத்தியிருப்பார். ஆனால் இன்றும் அப்படியா?

உருளைக் கிழங்கு

உலகில் மிக அதிகமாகப் பயிரிடப்படும் உணவு வகைகளில் உருளைக் கிழங்கு முன்னணியில் நிற்கிறது. பருவகால வேறுபாடுகளைக் கடந்து வருடம் பூராவும் உலகெங்கும் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதற்குக் காரணம் எல்லாத் திசைகளிலும் இது விளைவிக்கப்படுவதே ஆகும்.

தாவர வர்க்கத்தில் இது தக்காளி, கத்தரி, மிளகு போன்றவற்றின் இனத்தைச் சேர்ந்தது. சரியான பருவத்தில் இதை கிண்டி அறுவடை செய்யாது விட்டால் அது வளர்ந்து பூத்துக் காய்த்து தக்காளி போன்ற ஒரு பழத்தைத் தரும்.

அவ்வாறு பூத்துக் காய்ப்பதற்கு தேவையான சக்தியை வழங்குவதற்காக தனது கிழங்கில் சேர்த்து வைக்கிறது. ஆனால் நாம் கிழங்கு நல்ல பருவத்தில் இருக்கும்போது கிண்டி எடுப்பதால் அதன் வாழ்க்கைச் சக்கரம் பூர்த்தியடைவதைத் தடுக்கிறோம்.

உருளைக் கிழங்கின் போசாக்கு

உருளைக் கிழங்கு முக்கியமான ஒரு மாப் பொருள் உணவாகும். அரிசி, கோதுமை போன்றவையும் மாப்பொருள் உணவுகள்தான். சமைக்காத அரிசியில் 80 சதவிகிதமும், உருளைக்கிழங்கில் 20, வத்தாளையில் 20 மரவெள்ளி 38 சதவிகிதம் என மாப்பொருள் இருந்தபோதும் சமைத்தபின் இவற்றில் பெரு மாற்றங்கள் ஏற்படுகின்றன.

மாப்பொருள் உணவுகள் செரிமானமடைந்து குளுக்கோசாக குருதியில் கலந்து எமது உடலின் செயற்பாடுகளுக்கான சக்தியை வழங்கும். சக்தி கலோரி அலகுகளில் குறிப்பிடப்படுவதை அறிவீர்கள்.


சமைக்காத உருளைக் கிழங்கு 100 கிராமில் 70 கலோரிகள் இருக்கிறது. புழங்கல் அரிசியில் 77 கலோரிகள் உள்ளது. எனவே ஏறத்தாள சமஅளவே அரிசிலும் உருளைக் கிழங்கிலும் உள்ளது.

அதே நேரம் அவித்த உருளைக் கிழங்கில் 80ம், சுட்டதில் 85ம், மசித்ததில் 108ம்,  பொரித்தில் 150 கலோரிகளும் உண்டு. அதே போல அரிசியை அவித்து சோறாக்கும் போது அதன் கலோரி வலு அதிகமாகவே செய்யும். ஆனால் பொரிக்கும் போது அல்லது வெண்ணெய் (butter) போன்றவை சேர்ந்து மசியலாக்கும்போது உருளைக் கிழங்கின் கலோரி வலு அதீதமாகக் அதிகரிப்பதைக் மேலே கண்டிர்கள்

மாப்பொருளைப் பிரதானமாக இது வழங்குகின்ற போதும் இதில் விட்டமின் C மிக அதிகம் உண்டு. ஒரு குவளை அவித்த உருளைக் கிழங்கானது எமது தினசரி விட்டமின் C தேவையின் கால்வாசியை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றைத் தவிர உயிர்ச்சத்து B6,தாமிரம் (copper), பொட்டாசியம் (potassium), மாங்கனீசு (manganese) ஆகியவையும் தாராளமாகக் கிடைக்கின்றன. எனவே நல்ல உணவுதான்.

மிக முக்கியமாகக் குறிப்பட வேண்டியது அதிலுள்ள நார்ப்பொருள் ஆகும். ஒரு குவளை அவித்த உருளைக் கிழங்கில் சுமார் 2.93 கிராம் உள்ளது. அமெரிக்க விவசாய ஆய்வுத் திணைக்களமானது இதில் 60 ற்கு மேற்பட்ட தாவர இரசாயனங்கள் (phytochemicals) மற்றும் விட்டமின்கள் இருப்பதாக அறிவித்துள்ளது. இவற்றுள் உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒட்சிசன் எதிரிகளான (antioxidents, carotenoids, flavonoids)  போன்றவையும் அடங்குகின்றன.

இவற்றைத் தவிர இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய இரசாயனமான (kukoamines) உருளைக்கிழங்கில் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்காக உருளைக் கிழங்கைச் சாப்பிடுங்கள் என எந்த மருத்துவரும் சிபார்சு செய்ய மாட்டார்கள். ஏனெனில் எவ்வளவு சாப்பிட்டால் எவ்வளவு குறையும் அதன் பலன் எவ்வளவு நேரத்திற்கு நீடிக்கும் என்பது பற்றிய தெளிவான முடிவுகள் எதுவும் இதுவரை கிடையாது.

உருளைக் கிழங்கைச் சமைக்கும்போது நன்கு கழுவிய பின் தோல் நீக்காமல் சமைப்பது அவசியம். ஏனெனில் அதிலுள்ள நார்ப்பொருளில் பெரும்பகுதி அதிலேயே உள்ளது. விற்றமின்களும் தாதுப்பொருட்களும் அதில் அடங்கியுள்ளன.

உணவுகளில் மாப்பொருள் ஒப்பீடு

ஒரு முட்டையின் அளவுடைய அவித்த உருளைக்கிழங்கு, ஒரு மேசைக் கரண்டி சோறு, ஒரு மெல்லிய பாண் துண்டு ஒரு சிறிய நானில் (NAN) ¼ துண்டு, சோளம் செதில்கள் (corn flakes) இரு மேசைக் கரண்டி, ஆகியவற்றில் கிட்டத்தட்ட ஒரேயளவு மாப்பொருள் உண்டு.

பழங்களைப் பொறுத்தரையில் அவற்றில் மாப்பொருள் குறைவு. ஒவ்வொரு அப்பிள், ஆரஞ்சு பழம், பேரி இனக்காய் (pear), சிறிய வாழைப்பழம் ஆகியவற்றிலும் கிட்டத்தட்ட அதேயளவு மாப்பொருள் உண்டு. எனவேதான் நீரிழிவு உள்ளவர்களை மாப்பொருள் அதிகம் உள்ள உணவுகளைக் குறைத்து காய்கறி பழவகைகளை அதிகம் உண்ணும்படி சிபார்சு செய்யப்படுகிறது.


ஆனால் அதேநேரம் மாப்பொருள் உணவுகள் வேண்டாதவை அல்ல. எமது உடலுக்கு அவசியம் என்பதை மறக்கக் கூடாது. ஏனெனில் அவைதான் எமது இயக்கதிற்கு அவசியமான சக்தியைக் கொடுக்கின்றன. இது நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் பொருந்தும்.

நீரிழிவும் உருளைக் கிழங்கும்

உண்மையில் உருளைக் கிழங்கு நீரிழிவாளர்களுக்கு ஆகாத உணவா?

நீரிழிவு உள்ளவர்கள் மாப்பொருள் உணவுகளான சோறு, பாண், இடியப்பம் பிட்டு போன்றவற்றை உண்பதைப் போலவே உருளைக் கிழங்கையும் உண்ணலாம். ஆனால் அவற்றின் அளவுகளில் கவனம் எடுக்க வேண்டும். உருளைக் கிழங்கு எமது பிரதான உணவு அல்ல. நாம் அவற்றை பொதுவாக பிரதான உணவுகளான சோறு, இடியப்பம், பிட்டு, ரொட்டி (bread) போன்றவற்றுடன் கறியாக கலந்து உண்கிறோம்.

எனவே இரண்டையும் அளவு கணக்கின்றி உண்ணக் கூடாது. உருளைக் கிழங்கை அதிகம் எடுத்தால் அதற்கேற்ப பிரதான உணவின் அளவில் சற்றுக் குறைக்க வேண்டும்.

உருளைக் கிழங்கு சோறு இரண்டிலும் நார்ப்பொருள் உள்ள போதும் மேலும் அதிக நார்ப்பொருள் உள்ள காய்கறிகளை சேர்த்து உண்பது நல்லது. குருதியில் சீனியின் அளவு திடீரென அதிகரிப்பதை இது குறைக்கும். கீரை வகைகள், ஏனைய நார்த்தன்மையுள்ள காய்கறிகள் போன்றவை அவ்வாறு சேர்த்து உண்பதற்கு ஏற்றவையாகும் ஆனால் அதற்கு மேல் பயற்று இன வகை உணவுகளான பருப்பு, பயறு, கௌபீ, சோயா, கடலை, போஞ்சி, பயிற்றை போன்றவற்றை சேர்த்து உண்பது மேலாகும்.

இவற்றுடன் முட்டை, மீன், கொழுப்பற்ற இறைச்சி போன்றவற்றை தேவைக்கு ஏற்றளவு சேர்த்துக்கொள்ளலாம்.

சமைக்கும்போது எண்ணெய், நெய், வெண்ணெய் போன்றவற்றில் உருளைக் கிழங்கை வதக்கிச் சமைத்தல் நல்லதல்ல. ஏனெனில் அதன் கலோரி வலு அதிகரிக்கும். அது நீரிழிவு உடலில் உள்ள கொழுப்பு (cholesterol) அதீத எடை உள்ளவர்களுக்கு அவ்வாறே ஏற்றதல்ல.


பொரித்த உருளைக் கிழங்கின் கலோரி வலுவானது அவித்ததை விட இரண்டு மடங்கு அதிகம் என்பதை ஏற்கனவே கண்டோம். எனவே நீரிழிவாளர்கள் மட்டுமின்றி தமது ஆரோக்கியத்தில் அக்கறை உள்ள எவரும் அவற்றை தவிர்ப்பது நல்லது. அல்லது ஒரிரு துண்டுகள் என மட்டுப்படுத்திக் கொள்வது நல்லது

இன்றைய இளைய வயதினருக்கு ஏற்றவிதமாக பல உள்ளுர் வெளிநாட்டு உணவகங்கள் உருளைக்கிழங்கு சில்லு (potato chip) பரிமாறுகிறார்கள். இது எமது உருளைக் கிழங்கு பொரியலைப் போன்றதே. மிக அதிக கலோரி வலு கொண்டதாகும்.

உருளைக் கிழங்கில் பெரு விருப்பம் கொண்டவர்கள் நறுக்கப்பட்ட காய்கள், பழங்கள் முதலானவை கொண்டு பச்சையாக உண்ணும் ஒரு வகை உணவாகத் (salad) தயாரித்து உண்ணலாம். அவித்த உருளைக் கிழங்கு துண்டுகளுடன் அவித்த போஞ்சி கோவா, பச்சடி இலை (Salad Leaf) போன்றவை சேர்ந்த நறுக்கப்பட்ட காய்கள், பழங்கள் முதலானவை கொண்டு பச்சையாக உண்ணும் ஒரு வகை உணவு ஆரோக்கியமான உணவாகும்.

புதிய உருளைக் கிழங்கை ஒருபோதும் குளிர்சாதன பெட்டியில் வைக்கக் கூடாது. வைத்தால் அதிலுள்ள சீனிச் சத்து அதிகமாவதுடன் அதன் சுவையும் மணமும் கெட்டுவிடும். வெளியே பாதுகாக்கும் போதும் வெங்காயத்துடன் சேர்த்து வைக்கக் கூடாது. பேப்பர் பையில் சேமித்து வைப்பது நல்லது. சரியான முறையில் சேமித்தால் 2 மாதம் வரை கெடாது இருக்கும் என்கிறார்கள்

சமைத்த உருளைக் கிழங்கை நீண்ட நாட்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைத்தாலும் கெடாது இருக்கும் என்கிறார்கள் இல்லதரசிகள்.
நன்றிகள்.

Friday 16 May 2014

உருவாக்கத்தக்க கழிவிலிருந்து எரிபொருள்.....!

தமிழ் மாணவியின் இந்த அற்புதமான கண்டுபிடிப்புக்கு நீங்களும் ஒரு வாழ்த்து சொல்லுங்கள்!...

சென்னையைச் சேர்ந்த பொறியாளர் சித்ரா தியாகராசன் என்பவர் உருவாக்கத்தக்க (plastic) கழிவிலிருந்து எரிபொருள் தயாரிப்பதற்கான கருவியை வடிவமைத்துள்ளார். 10 கிலோ உருவாக்கத்தக்கதிலிருந்து 8 லிட்டர் டீசல் எரிபொருளைத் தயாரிக்கும் விதத்தில் இவரது கருவி உருவாக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டு முயற்சியில் உருவான இந்தக் கருவிக்கு காப்புரிமை கோரியுள்ளார் சித்ரா.

                                              

இதுகுறித்து சித்ரா கூறும்போது..பெட் பாட்டில்கள் தவிர மற்ற எல்லாவிதமான உருவாக்கத்தக்க கழிவுகளையும் இந்தக் கருவிக்குள் போட்டு குறிப்பிட்ட வெப்பநிலையில் சூடுபடுத்தும்போது கிடைக்கும் எரிபொருளை டீசலுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம் என்கிறார் சித்ரா....!.
நன்றிகள். 

Thursday 15 May 2014

கண்களைப் பாதுகாக்கும் காய்கறிகள்.....!

நம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப் பாதுகாக்கும் காய்கறிகள் அடங்கி உள்ளன. பச்சைக் காய்கறிகளில் உயிர்ச்சத்து ஏ மற்றும் உயிர்ச்சத்து சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளும் அடங்கி உள்ளன. இவை கண்களுக்கு மிகவும் நல்லது.

அகத்திக் கீரை, பசலைக் கீரை, முருங்கை, பொன்னாங்கன்னி, முளக்கீரை, அரக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, ஃபோலிக் அமிலம் மற்றும் உயிர்ச்சத்து பி-12 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. 


பச்சைக் காய்கறிகளுடன் நறுக்கப்பட்ட காய்கள், பழங்கள் முதலானவை கொண்டு பச்சையாக உண்ணும் ஒரு வகை உணவு salad மற்றும் எலுமிச்சை நம் பார்வையை பெரிதும் கூர்மையாக்குகிறது.

உயிர்ச்சத்து ஏயில் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கிய சத்து அடங்கியுள்ளது.

உயிர்ச்சத்து ஏ சத்து பற்றாக்குறையால் முதலில் தோன்றும் அறிகுறி மாலைக்கண் நோய். கேரட்டில் அதிகமான உயிர்ச்சத்து ஏ உள்ளது.

உயிர்ச்சத்து ஏ வாக நம் உடலில் மாற்றம் அடையும் பீட்டா கரோடின் மற்றும் அதிநிற பழங்களிலும், பச்சைக் காய்கறிகளிலும் உயிர்ச்சத்து ஏ உள்ளது.

தக்காளி, பசலை, ஈரல், முட்டை, நிறமயமான காய்கறிகள், கேரட், பப்பாளி மற்றும் பச்சை இலைகளில் உள்ளது.

உடலில் அதிகமாக சுரக்கும் கொடுடி முந்திரிப் பழச் சர்க்கரையினால் (glucose) கண்வில்லை (eye lens) சேதமடைவதிலிருந்து புரத அமிலங்கள் நம்மை காக்கின்றன.

இறைச்சி, மீன் மற்றும் பாலில் நமக்குத் தேவையான 8 முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளன.

அரிசி, பட்டாணி, போஞ்சி, அவரை, மொச்சை, துவரை, உளுந்து பயறு போன்றவற்றில் இறைச்சியில் உள்ள அளவுக்கு அமினோ அமிலங்கள் உள்ளன.
நன்றிகள்.

Tuesday 13 May 2014

நாம் உண்ணும் உணவு சரியானதுதானா.....!?

நாம் உண்ணும் உணவு சரியானதுதானா ? - கண்டுபிடிக்க ஒரு எளிய வழி
அதாவது எந்த உணவானாலும் உணவு உண்ணும்போதோ உண்ட பின்னோ உடனே தண்ணீர் தேவைப்பட்டால் அப்போது உண்ட உணவு உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு அல்ல என்றும் உடனே தண்ணீர் தேவைப்படவில்லை என்றால் அது உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு என்றும் அறிந்து கொள்ளலாம். .

ஒருவருக்குத் தண்ணீர்த் தாகம் எடுக்கிறது என்றால் அவர் உழைப்பின் காரணமாகவோ அல்லது வெய்யிலின் காரணமாகவோ அல்லது எதிர்பாராத செய்தியைக் கேட்டு நாக்கும் தொண்டையும் வரண்டு போனதாலோ அல்லது அதிகம் தொண்டை வரண்டுபோகுமளவு சப்தமாகப் பேசியதாலோ தான் இருக்கவேண்டும்.


விளையாடும்போதும் ஓடும்போதும் வேகமாக நடக்கும் போதுகூட தண்ணீர்த் தாகம் எடுக்கலாம். காரணம் அந்த நேரங்களில் நமது உடம்பில் உள்ள நீர்மட்டும் அதிகம் செலவாகிறது.

அப்படியல்லாமல் உண்ணும் உணவால் ஒருவருக்குத் தாகம் எடுக்கிறது என்றால் அந்த உணவை நமது உடம்பு சாதாரணமாக ஏற்றுக்கொள்வில்லை என்பது பொருள். அதன்காரணமாக தண்ணீரைக் குடித்து சரிசெய்து மேலும் அதே உணவை வயிற்றில் செலுத்துகிறோம்.

உடம்புக்குத் தண்ணீர் தேவை இல்லாதபோதும் உண்ட உணவு தண்ணீர் கேட்கிறது. அத்தகைய உணவு எதாகிலும் குறையவோ கூடவோ உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதே!

அடுப்பில் வைத்து எண்ணையின்றி வேகவைத்து சமைக்கப்படும் உணவுகள் குறைந்த தாகத்தையே உண்டுபண்ணும். அதாவது தாளிப்பின்றி குறைந்த உப்பு காரம் சேர்க்கப்படும் உணவுகள்.

எண்ணைகொண்டு தாளிக்கும் மற்றும் உப்பு காரம் நிறையச் சேர்க்கப்படும் உணவுகள் கூடுதல் தாகத்தை உண்டுபண்ணும்.

ஆனால் நெருப்பில் நேரடியாகவோ அல்லது காய்ச்சிய எண்ணையில் போட்டோ சுட்டெடுக்கப்படும் உணவு வகைகள் உடனே அதிகமான அளவு தண்ணீர் கேட்கும். காரணம் ஒவ்வொன்றும் அவற்றைச் சமைக்கும் முறைக்கேற்ப அதிகமான தண்ணீர் குடித்தால்தான் நமது செரிமான உறுப்புக்களால் செயல்பட முடிகிறது.

இந்த இருவகைகளையும் ஒப்பிட்டுப்பார்த்தால் தண்ணீர்த் தாகத்தை அதிகப்படுத்தும் உணவுகள் எல்லாம் குறைந்த அளவிலிருந்து அதிகமான அளவு வரை நோய்களுக்குக் காரணமாக இருப்பதும் அப்படித் தாகத்தை உண்டுபண்ணாத உணவுகள் எல்லாம் நோய்களை உருவாக்குவது இல்லை என்பதோடு அநேக நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுவது உறுதிப்படும்.

அதற்குக் காரணம் இயற்கை உணவுகள் அனைத்தும் எளிதில் செரிக்கப் படுவதோடு அவற்றின் கழிவுப்பொருட்களும் எளிதில் வெளியேற்றப் படுகின்றன. அதேசமயம் சமைக்கப்படும் விதத்துக்கேற்ப சமையல் உணவுகள் எளிதில் செரிக்கப்படாமல் சிரமப்படுத்துவதோடு அவற்றின் கழிவுப் பொருட்களும் எளிதில் வெளியேறாமல் உடம்பிலேயே தங்கிப் பின் பல்வேறு நோய்கள் உருவாகக் காரணங்களாக மாறுகின்றன.

இயற்கை உணவுகள் தண்ணீரைச் சார்ந்து இருப்பது இல்லை.

பச்சையாக உண்ணக்கூடிய காய்கறிகள், கனிவகைகள், முளைக்கட்டிய தானியங்கள், பழச்சாறுகள், மூலிகைச் சாறுகள், இளநீர் போன்ற இயற்கை உணவுகள் தாகத்தை அதிகமாகத் தூண்டுவது இல்லை.

இனியாவது இவற்றை அதிகம் எடுத்துக்கொள்வோம்.
ஆரோக்கிய வாழ்வு வாழ்வோம் !
நன்றிகள்.

Monday 12 May 2014

ஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக.....!

ஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி.

இணைய உலகில் அசைக்க முடியாத அரசனாகத் திகழும் கூகுள் நிறுவனமானது தனது பயனர்களுக்காக தொடர்ந்தும் பல்வேறு புத்தம் புதிய வசதிகளை வழங்கி வருகின்றது.

தொடர்ச்சியாக தற்போது கூகிளின் வரைதல் (Google Drawing) எனும் வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது ஆவண (Document), அறிமுகம் செய்தல் (Presentation), இணையத்தளம் (Website) போன்றவற்றில் பயன்படுத்தக்கூடிய காவிகளை (Vector) அடிப்படையாகக் கொண்ட உருவங்கள், வரைபட (Chart) மற்றும் விளக்க வரைபடம் (Diagrams) போன்றவற்றினை வரைவதற்காக வசதியை தரும் பிரயோக (application) நீட்சி ஒன்றினை வெளியிட்டுள்ளது.

Google Drive உடன் இணைக்கபப்பட்டுள்ள இந்த பிரயோகம் ஆனது வரையப்படும் உருவங்களை இயல்பாகவே சேமித்து வைக்கக்கூடியதாகக் காணப்படுவதுடன் மீண்டும் அவற்றினை எந்தவொரு கணனி சாதனத்திலிருந்தும் பயன்படுத்தக் கூடியவாறு அமைந்துள்ளது.

மேலும் குரோம் உலாவிகளில் நிறுவி பயன்படுத்தக்கூடியவாறு உருவாகக்கப்பட்டுள்ள இந்த பிரயோகம் பல் பயனர்(Multiple User) இடைமுகத்தினை கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

          

நன்றிகள்.

Thursday 8 May 2014

காற்றில் மின்சாரத்தை செலுத்தலாம்.....!

காற்றில் மின்சாரத்தை செலுத்தலாம், இனி கொள்ளும் வரையில் நிரப்பு (charger) தேவையில்லை !



கொரியாவில் உள்ள நிறுவனத்தில் ஒன்று தாம் மின்சாரத்தை காற்றில் செலுத்த முடியும் என்பதனை கண்டுபிடித்துள்ளார்கள் என்று அறிவித்து பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளார்கள்.

இதன் அடிப்படையில் நீங்கள், இனி தொலைபேசி கொள்ளும் வரையில் நிரப்பு கையில் கொண்டு செல்லவேண்டிய அவசியமே இல்லை. குறித்த சாதனம் ஒரு கடையில் இருந்தால், நீங்கள் அக்கடைக்குள் சென்றால் அல்லது 5 மீட்டர் தொலைவில் இருந்தாலேயே உங்கள் கையடக்க தொலைபேசி (mobile phone) கொள்ளும் வரையில் நிரப்ப ஆரம்பித்துவிடும்.


இதற்கு நீங்கள் செய்யவேண்டியது ஒன்றுதான். உங்கள் கைபேசியில் கொள்ளும் வரையில் நிரப்ப செய்ய இருக்கும் இடத்தில் சிறிய (மிகச் சிறிய) கருவி ஒன்றை பொருத்துவது தான். அது இருப்பதே தெரியாது.

ஆனால் அந்த கருவியுடன் நான் , கைபேசி கொள்ளும் வரையில் நிரப்ப வசதியுள்ள கடைகளுக்கு அல்லது உணவகத்துக்குச் சென்றால், நமது கைபேசி உடனே கொள்ளும் வரையில் நிரப்பச் செய்ய ஆரம்பித்துவிடும்.

மின்சாரம் செல்ல ஒரு ஊடகம் தேவை என்று சொல்லுவார்கள். காற்றில் மின்சாரம் செல்லாது என்பார்கள். ஆனால் வளர்ந்துவரும் இந்த நவீன உலகில் எதுவும் சாத்தியமே !.
நன்றிகள்.

Monday 5 May 2014

எடை குறைக்கச் செய்யும்......!

எடை குறைக்கச் செய்யும் இயற்கை மருந்து!

எடைக்குறைப்பு இன்று பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது. எடைக்குறைப்புக்கு கைக்கொடுக்கும் வீட்டு மருத்துவத்தில் எடை குறையச்செய்யும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் நிறைந்து காணப்படுகிறது. உங்கள் சமையலறை பொருட்களை பயனபடுத்தியே எடையைக் குறைக்கச் செய்யலாம்.

தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டையை தூளாக்கி நன்கு கொதிக்க வைத்த தண்ணீருடன் தேனையும் கலந்து குடிக்க வேண்டும்.


இதேபோல் இரவு தூங்குவதற்கு முன்பும் ஒரு கிண்ணம் (cup) தண்ணீரில் இலவங்கப்பட்டையின் தூளையும், தேனையும் கலந்து சாப்பிடலாம். இதை வழக்கமாக செய்து வந்தால் பருமனான உடல் கொண்டவர்கள் எளிதில் எடையை குறைத்து விடலாம்.

இதை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் கொழுப்புச்சத்து சேர்வது தடுக்கப்படுகிறது. ஒரு நபர் அதிக கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடாலும் கூட இந்த கலவையை எடுத்துக்கொள்ளலாம்.


வெதுவெதுப்பான தண்ணீரில் பாதி எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஒரு கரண்டி கலந்து சாப்பிட்டால் எடையை குறைக்க செய்யும். மேலும் இதை காலை வேளையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இது ஒருசிலருக்கே ஏற்றது. இதை சாப்பிட்ட பின்னர் காலை உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். இது தொடர்ந்து சாப்பிட்டால் கொழுப்பு சத்துக்களை எரித்து உடல் அமைப்புகளை சுத்தப்படுத்துகிறது.

மேலும் நீங்கள் ஏதேனும் சாப்பிட விரும்பினால் ஒரு குவளையில் எலுமிச்சை சாறு சேர்த்து மிளகு பொடி மற்றும் தேன் சேர்த்து குடிக்கலாம் அல்லது உப்பு சேர்த்துகொள்ளலாம்.. கண்டிப்பாக தேன் மற்றும் உப்பு அதிகமாக சேர்த்துக்கொள்ளகூடாது.


வெதுவெதுப்பான தண்ணீரில் ஆப்பிள் சாறு, காடி (vinegar) இரண்டையும் சேர்த்து விரும்பினால் மட்டுமே மேபிள் சாறு (Maple Syrup) சேர்த்து கொள்ளலாம். இதுவும் எடைக்குறைப்பு செயலை செய்கிறது. வீட்டு வைத்தியம் உங்கள் எடையை குறைக்கும் என்றாலும் உங்கள் உடல் அமைப்பை பொறுத்துதான் பல வேதியல் மாற்றங்களை நிகழ்த்துகிறது.

இன்றைய உலகில் ஆணும், பெண்ணும் குண்டு உடலை குறைக்க நடை பயிற்சி, உடற்பயிற்சின்னு உடல் வருத்தக்கிறாங்க.


இன்னொரு பக்கம் ஆறு வாரங்களில் அழகான ‘இடை’ ன்னு விளம்பரங்களை நம்பி மாத்திரை, லேகியம் வாங்கிச் சாப்பிட்டு,எப்படியாவது உடல் எடையை, குறைக்க பணத்தை தண்ணியா செலவழிக்கறதும் உண்டு.

ஆனா, இவ்வளவு சிரமம் இல்லாம, உடல் எடை குறைக்க முடியும். அது ஒரு காலத்துல கடிச்சி, ருசிச்ச சாப்பிட்ட இனிப்பான சமாச்சாரம்தான். அவுசுத்திரேலியா நாட்டில் இருக்கிற மெல்போர்ன் உணவு உயிர் தொழில்நுட்ப வல்லுனர் ஆங்குர் தேசாய் மற்றும் லா ட்ரோப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் சேர்ந்து ஒரு ஆய்வு செய்துள்ளனர்.

அதன்படி, குண்டான உடலை இளைக்கச் செய்வதில் கரும்பு முக்கிய பங்கு வகிக்கிறது. கரும்புச் சாற்றில் உள்ள ரசாயனங்கள், உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரையச் செய்கிறது. இதன் மூலம் உடல் எடை குறைகிறது. எடை குறைவதால் ஏற்படும் உடல் சோர்வையும் கரும்பு சாறு தடுக்கிறது. ரத்த அழுத்தத்தையும் இது கட்டுப்படுத்துகிறது.


உடலில் சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது. பயன்படுத்த தொடங்கிய 12 வாரங்களில் இதன் பலன் வெளிப்படையாக தெரிய வரும். பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தாமல், உடல் எடையை குறைக்க கரும்பு பயன்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
நன்றிகள்.