Wednesday 24 April 2013

தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்.............!

இன்று சித்திரை (ஏப்ரல்) 24 - தமிழுக்குச் சேவை செய்த சி (ஜி).யு. போப் அவர்களின் பிறந்த நாள். அமெரிக்காவில் பிறந்து கிறிசுத்தவ சமய போதகராக தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்கு சேவை செய்தவர்.


இறப்புக்கு பின் தனது கல்லறையில் ''இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்'' என்ற வரி இடம்பெற வேண்டும் என்று தனது உயிலில் கூறினார்.

ஒரு விளையாட்டாளரின் பிறந்த நாளைக் கொண்டாடும் மக்கள், இவரை மறந்து விட்டது ஏனோ?

உலகினில் இவர் மறைந்தாலும், தமிழுக்காக இவர் ஆற்றிய சேவை என்றும் மறையாது.. என்றுமே, நம் உள்ளங்களில் இவர் வாழ்வார்.
நன்றிகள்.