Friday 16 May 2014

உருவாக்கத்தக்க கழிவிலிருந்து எரிபொருள்.....!

தமிழ் மாணவியின் இந்த அற்புதமான கண்டுபிடிப்புக்கு நீங்களும் ஒரு வாழ்த்து சொல்லுங்கள்!...

சென்னையைச் சேர்ந்த பொறியாளர் சித்ரா தியாகராசன் என்பவர் உருவாக்கத்தக்க (plastic) கழிவிலிருந்து எரிபொருள் தயாரிப்பதற்கான கருவியை வடிவமைத்துள்ளார். 10 கிலோ உருவாக்கத்தக்கதிலிருந்து 8 லிட்டர் டீசல் எரிபொருளைத் தயாரிக்கும் விதத்தில் இவரது கருவி உருவாக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டு முயற்சியில் உருவான இந்தக் கருவிக்கு காப்புரிமை கோரியுள்ளார் சித்ரா.

                                              

இதுகுறித்து சித்ரா கூறும்போது..பெட் பாட்டில்கள் தவிர மற்ற எல்லாவிதமான உருவாக்கத்தக்க கழிவுகளையும் இந்தக் கருவிக்குள் போட்டு குறிப்பிட்ட வெப்பநிலையில் சூடுபடுத்தும்போது கிடைக்கும் எரிபொருளை டீசலுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம் என்கிறார் சித்ரா....!.
நன்றிகள்.