Friday 31 August 2018

அவமானம் என்பது ஒருவித மூலதனம் ..........!.

அவமானமே மூலதனம்....

மன்னரின் அரசவை

ஒருவர் தான் ஆரம்பிக்க இருக்கும் கல்லூரிக்கு நிதி கேட்டு வருகிறார்.

அந்த மன்னர் இந்து என்றாலே கோபப் படுவர்.

நிதி தானே இந்தா என தன காலில் இருந்த காலணியை வந்தவர் மேல் வீசி எறிந்தார்.

எதிபாராத நிகழ்வால் நிலைகுலைந்தாலும். ஒருபக்கம்
அவமானம். மனதை துன்பப்படுத்தியது.

இருந்தாலும் ஒரு நல்லள விடயத்துக்காகத் தானே அவமானப்படுகின்றோம் என தேற்றிக்கொண்டு மன்னருக்கு நன்றி சொல்லி கிளம்பினார்.

மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை.

என்னடா நாம் அவமானபடுத்த முயன்றாலும் எதிரிலிருப்பவர் தன நோக்கத்தில் உறுதியாய் இருந்தால் என்ன செய்ய முடியும்.

மேலும் தன்மேல் நம்பிக்கை இல்லாதவர்கள்தான் அவமானத்தை உணர்ந்து மனக்கிளர்ச்சி அடைவார்கள்.

வெளியில் ஒரே சத்தம் அமைச்சரை அளித்த மன்னர் என்ன அங்கே என்றார்.

நீங்க எறிந்த காலணியை ஏலம் போடுகிறான் .
கல்லூரி கட்ட மன்னர் தந்த காலணி என்றே கூவுகின்றான் என்றார்.

எவ்வளவு போகிறது....

படு கேவலமாய் பத்து நாணயத்துக்கு மேல் ஏலம் போகவில்லை என்றார்.

அய்யய்யோ என்ன விலையானாலும் ஏலம் எடு.

அமைச்சரும் ஐம்பது லட்சம் கொடுத்து எடுத்தார்.

நிதி கேட்டு வந்தவர் மீண்டும் மன்னரிடம் வந்தார்.

மன்னா நீங்கள் போட்ட காலணி பாதிகட்டம் கட்ட கிடைத்து விட்டது.

அடுத்த காலணியை எப்போது போடுவீர்கள் என்றார் பாருங்கள்.

மன்னர் வந்தவரின் சாமர்த்தியத்தையும் சகிப்புத்தன்மையும் எண்ணி தாமே கல்லூரியை கட்டிக்கொடுத்தார்.

அவமானத்தை யாரோவர் அவமானமென உணர்கின்றார்களோ அவர்கள் ஒருநாளும் எதையும் வெற்றி கொள்ள முடியாது.

எப்போதும் நோக்கம் நிறைவேறுவதுதான் முக்கியம்.

மான அவமானங்களல்ல.....

நாம் செய்வது நல்லதாய் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு அவமானமும் வெறிக்கான படிக்கட்டுக்கள்.

என எண்ணுவோம்.

எந்தவொரு வளர்ச்சியையும் நீண்ட நாட்கள் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

                                                                                                                        நன்றிகள்.