Wednesday 13 November 2013

எந்த ஒன்றையும் நமக்கு தெரிந்த மொழியில்.....!

மின்னணுவியல் என்றதும் ஏதோ யாரும் சுலபமாக அறிந்து கொள்ள முடியாதது போலவும் அதிகம் படித்தவர்கள் மட்டுமே அதை கையாள முடியும் என்ற ஒரு தவறான கருத்து இங்கு உண்டு அது முற்றிலும் தவறானதாகும் . 

எந்த ஒரு கண்டுபிடிப்பும் இயற்கையை அதில் நிகழும் மாற்றங்களை கூர்ந்து கவனிக்கும் போது உருவாக்கப் பட்டவை தான் உதாரணத்திற்கு நிறைய சம்பவங்களை சொல்லலாம் அதில் ஒன்று நியுட்டன் ஆப்பிள் மரத்தடியில் படுத்திருக்கும் பொழுது ஆப்பிள் கீழே விழுவதை வைத்து ஈர்ப்பு விசையை கண்டு பிடித்த சம்பவம் நினைவிருக்கும்.

இயற்கையை ஆழ்ந்து கவனிக்கும் போது நிகழ்ந்த கண்டுபிடிப்பு. அது போலத்தான் எல்லா கண்டு பிடிப்புகளும் நிகழ்த்தப் பட்டது. எல்லா கண்டு பிடிப்பிற்க்கும் சிந்தனை சக்தி தான் அடிப்படை . 

கண்டுபிடிப்புகளை இரண்டு வகைப் படுத்தலாம். ஒன்று புதிய கண்டுபிடிப்பு ( invention )இன்னொன்று ஏற்கனவே இருப்பதை மிகைப்படுத்தி அல்லது அது தொடர்புடைய வேறு ஒன்றை கண்டு பிடிப்பது (implement ). இந்த இரு வகைகளில் இந்தியாவில் பெரும்பாலும் இரண்டாம் வகை தான் அதிகம் நிகழ்த்தப் பட்டிருக்கிறது.

புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப் படாததிற்கும் . இருப்பதை மாற்றம் செய்து புதிய பொருளை உருவாக்கவும் எனக்கு தெரிந்து அந்த கண்டு பிடிப்புகளின் அடிப்படையை சரியாக புரிந்து கொள்ளாததும் . அது தொடர்பான விளக்கங்கள் தாய் மொழியில் தெளிவாக இல்லாததும் தான் காரணம்.

எந்த ஒன்றையும் நமக்கு தெரிந்த மொழியில் தெளிவாக புரிந்து கொண்டோமேயானால் மற்ற நாடுகளைவிட வேகமாக நாமும் முன்னேற முடியும் . புதிய புதிய கண்டுபிடிப்புகளை நாமும் நிகழ்த்த முடியும் .

சரி இந்த எல்லா கண்டுபிடிப்புகளும் இயங்க அவசியமான மின்சாரம் எப்படி கண்டு பிடிக்கப் பட்டிருக்கும் என்பதை பார்ப்போம். நாம் சிறு வயதில் சீட்டுக்கட்டுகளை ஒவ்வொன்றாக நீளமாக அடுக்கி வைத்து ஒன்றை தட்டி விட்டால் அனைத்து சீட்டுகளும் விழுவதை பார்த்திருப்போம் சிறு வயதில் இதை ஒரு விளையாட்டாக எல்லோரும் விளையாடி இருப்போம்.

இது ஒரு சாதாரணமான சம்பவம் என்றாலும் அதில் ஒரு அறிவியல் பூர்வமான உண்மை ஒளிந்திருக்கிறது. என்னவென்றால் சீட்டு கட்டு வரிசையில் ஒரு சீட்டை தட்டும் போது அது இன்னொன்றை தள்ளி விடுகிறது இப்படி வரிசையாக அடுக்கப் பட்ட சீட்டு அத்தனையிலும் நிகழும் அதேபோலத்தான் ஒரு மின் கடத்தியில் ( உலோகம் / கம்பி என்று கூட நினைவில் வையுங்கள் ) சீட்டுக் கட்டுக்களை போன்று அதில் உள்ள அணுக்கள் வரிசையாக அடுக்கப் பட்டிருக்கும். அதில் உள்ள ஒரு அணுவை தூண்டும் போது அது மற்றொன்றை தூண்டி இறுதியில் உள்ள கடைசி அணு வரை சென்று முடிவடைகிறது. 

இப்படி தொடர்ச்சியாக செய்யும்போது நிகழும் அணுக்களின் ஓட்டத்தை தான் மின்சாரம் என்கிறார்கள். சிறு வயதில் மின்சாரம் எப்படி தயாரிக்கப் பட்டது என்பதை விளக்க ஒரு சம்பவத்தை சொல்வார்கள் அது ஒரு கம்பி சுருளின் அருகில் காந்தத்தை வைத்து தொடர்ச்சியாக அதை அசைப்பதன் மூலம் மின்சாரம் உண்டாவதாக நமக்கு விளக்கி இருப்பார்கள்.

கம்பி சுருளின் அருகில் காந்தத்தை அசைக்கும் போது அங்கு என்ன நிகழ்கிறது ?
 என்று பார்த்தோமே யானால் அந்த கம்பியில் உள்ள அணுக்கள் அந்த காந்தத்தின் மூலம் தூண்டப்படுகிறது அந்த அணுக்கள் நாம் பயன்படுத்தப் படும் பொருள்கள் வழியே தொடர்ச்சியாக கடந்து பயன் பாட்டை தருகிறது .

இதுபோல அந்த கம்பியில் உள்ள அணுக்களை தொடர்ச்சியாக தூண்டி விடுவதன்மூலம் தான் நாம் தொடர்ச்சியான மின்சாரத்தை பெற முடியும் அதை எப்படி செய்யலாம் என்று சிந்தித்து பார்த்தோமேயானால் அந்த காந்தத்தை கையில் வைத்து அசைப்பதற்கு பதிலாக அந்த காந்தத்தை ஒரு உருளையில் ஒட்டி வைத்து அந்த உருளையை சுழல செய்வதன் மூலம் தொடர்ச்சியாக அணுக்களை தூண்ட முடியும் அல்லவா?

சரி அந்த உருளையை இயற்க்கை காரணிகளை வைத்து எப்படி சுழல வைக்க முடியும் என்று பார்த்தால் அந்த உருளையில் இரண்டு மூன்று தடுப்புகளை வைத்து பாய்ந்து வரும் ஆற்றில் வைத்தல் நீர் பாய்ந்து வரும் வேகத்தில் அந்த தடுப்பில் நீர் பட்டு உருளை சுழலும் அப்போது உருளையில் உள்ள காந்தம் சுழன்று எதிரே உள்ள கம்பிச்சுருளில் தூண்டல் ஏற்ப்படும் பின்பு அதில் உள்ள அணுக்கள் தூண்டப் பட்டு மின்சாரம் கிடைக்கும் . 

இதே போன்று அச்சை சுழலவைக்கும் முறையில் தான் தற்போது பயன்படுத்தப் பட்டு வரும் 90 சதவிகித மின்சாரம் நீர் மின்நிலையங்கள் மூலமும், உருளையை காற்றின் மூலம் சுழலவைத்து காற்றாலையின் மூலமும், நீரை கொதிக்க வைத்து அதை ஆவியாக்கி அதை கலனில் அடைத்து வைத்து வேகமாக உருளையில் கொடுத்து சுழல வைப்பதன் மூலம் அனல் மின் நிலையங்கள் மற்றும் அணுமின் நிலையங்கள் மூலமும் பல வகையில் பலவகையில் மின்சாரம் பெறப் படுகிறது ஆனால் நீர் மின் நிலையம் முதல் அணு மின் நிலையம் வரை அடிப்படை என்ன வென்று பார்த்தால் கம்பியில் உள்ள அணுக்களை தூண்டுவது தான்.

இதை நீங்களே கூட வேறு வகைகளில் சுழல வைப்பது எப்படி என்று சிந்தித்து பார்க்கலாம் அவற்றை செயல் முறை படுத்தி மின்சாரம் தயாரிக்கலாம் . ஆனால் இவற்றில் இருந்து வித்யாசப் பட்டது இரண்டு மின் உற்பத்தி முறைகள் அவை சூரிய ஒளி மின் உற்பத்தி மற்றும் தற்போதைய நவீன கண்டு பிடிப்பான புளூம் பாக்சு(ஸ்) எனப்படும் ஐதரசன் எரிபொருள் கலங்கள் (hydrogen fuel cells) கொண்டு இயங்கும் கண்டு பிடிப்பு தான் தற்போதைய நவீன முறை இது மிகவும் எளிமையான மற்றும் தயாரிப்பு செலவு குறைந்த மின் உற்பத்தி முறை அதுவும் ஒரு எளிமையான முறை அதை வைத்து விண்வெளியில் பிராணவாயுவைக் கூட உற்பத்தி செய்ய முடியும்.
நன்றிகள்.