Tuesday 25 February 2020

நம்முடைய மனம்தான் காரணம்...............!.

எந்த சின்ன விவகாரம் நமக்கு ஓர் நெருக்கடியாகி விடுகிறது. வாழ்க்கையில் எல்லாமே நமக்கு எதிராக இருப்பதைப்போல எண்ணத் தொடங்குகிறோம். 

கொஞ்சம் நிதானமாக யோசித்தால், நாம் பெரிதுபடுத்திய பல விவகாரங்கள் அற்ப விவகாரங்கள் என்பது புலனாகும். எதையும் சாதாரணமாக எடுத்துக்கொண்டால் வாழ்க்கை எளிமையாகி விடுகிறது. 

கவனம் செலுத்த வேண்டிய முக்கிய விவகாரங்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்ற மனோபாவம் வந்து வெற்றிப் பாதையை அமைத்துக்கொடுத்து விடும். 

சின்ன விவகாரங்களைச் சின்ன விவகாரங்களாக நாம் பார்க்க முடியாதபோது இனிய உறவுகளைக்கூட அவை பாதித்து விடுகின்றன. நாம் சிறு விவகாரங்களை அலட்சியப்படுத்தத் தொடங்கிவிட்டால், 

அவை சக்தி இழந்து செயலற்றுப் போய் விடுகின்றன. 

யோசித்துப் பார்த்தால் எல்லாமே சின்ன விவகாரங்கள்தான். 

ஒரு விவகாரத்தை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தே அதன் தன்மையும் அமையும். 

எல்லாவற்றுக்கும் நம்முடைய மனம்தான் காரணம். 

வாழ்க்கையில் ஏற்படுகின்ற பல இடர்ப்பாடுகளுக்கும் நம்முடைய தவறான மனோபாவங்களே காரணமாகின்றன.

                                                                                                                                     நன்றிகள்.