Tuesday 7 August 2012

எறும்புகள் ஏன்............!

எறும்புகள் ஏன் வரிசையாகப் போகின்றன..?!

எறும்புகள் ஒருவிதமான வேதிப்பொருளைச் சுரக்கின்றன. இந்த வேதிப்பொருளைக் கொண்டு தேய்த்து வரைந்த கோட்டில் மட்டுமே எறும்புகள் செல்வதால் தான் அவை வரிசையாகச் செல்கின்றன. 

சமூகமாகக்கூடி வாழும் தேனீக்களுக்கும், எறும்புகளுக்கும் வாசளைகளை அறிந்துகொள்வதற்கான திறமை மிகவும் அதிகம். ஒரே கூட்டின் உறுப்பினர்களான எறும்புகள், ஒன்றை ஒன்று வாசனையை வைத்துத்தான் அடையாளம் காண்கின்றன.

சரியான வாசனை இல்லாத எறும்பை மற்ற எறும்புகள் தங்கள் வசிப்பிடத்தில் அனுமதிப்பத்ல்லை. வாசனையை இனங்காணும் இந்த அறிவு, அவற்றிற்கு உணவு தேடுவதற்காகத்தான் பெரிதும் உடவுகின்றன.

சாரண எறும்புகள் உணவு இருக்கும் இடத்தை தேடிக் கண்டிபிடித்தவுடன் கூட்டுக்குத் திரும்புகின்றன. திரும்பும்போது இவை சும்மா திரும்பாது. வழி முழுவதும் வேதிப்பொருளைக் கசியவிட்டுக்கொண்டுதான் வரும்.

இந்த வேதிப்பொருளின் பெயர் பெரோமோன் எறும்புகளின் வயிற்ரின் பெரோமோன் சுறக்கிறது. இதுதான் மற்ற எறும்புகளுக்கு வழிகாட்டுகிறது. எறும்புகள் வாசனையையும், சுவையையும் தங்களின் ஒரே உறுப்பால்தான் அறிந்துகொள்கின்றன.

வண்ணத்துப் பூச்சிகள், தேனீக்கள் ஆகியவையும் தங்கள் உடலில் சுரக்கும் வேதிப்பொருளைப் பயன்படுத்தி தங்களுக்குள் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்கின்றன. சில இனத்தைச் சேர்ந்த எறும்புகள் அடையாளங்களை நினைவு வைத்துக்கொண்டுதான் வழி கண்டுபிடிக்கின்றன.

அவ்வகையான எறும்புகள் சுற்றுப் பகுதியில் ஓடியலைந்து தேடித்தான் உணவைக் கண்டுபிடிக்கும். இவளவு சிறிய எறும்பு எவளவு செய்கிறது பார்த்திர்களா.

படைபினங்களில் சிறந்த படைப்பு மனித படைப்பு தான் அப்போது நாம் செய்யவேண்டிய நல்ல விசயங்கள் நிறைய இருக்கிறது.

மனிதகுலம் உணவைச் செமிப்பதிலை, நிலத்தடி நீரைச் சேமிப்பதில்லை, கழிவுகளை உரியமுறையில் அகற்றுவதில்லை என்று நீண்ட பட்டியலை  கூறலாம், நாம் எவற்றைக் கூறினாலும் எந்த ஒரு மனித இனமும் "தனிமனித ஒழுக்கத்தை"ப் பேணாதவரை உலகில் எந்தவொரு உதாரணத்தைச் சொல்லி மாற்றங்களை ஏற்படுத்த முடியாது.

நன்றிகள்.