Friday 14 September 2012

தமிழன் தான் உலகின் முதல் மாந்தன்........!

தமிழன் தான் உலகின் முதல் மாந்தன், தமிழ் தான் உலகின் முதல் மொழி என்று கூறிய மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் கூற்றுக்கு சான்றாக விளங்கும் நம் முதுமக்கள் உருவாக்கிய பல கல்திட்டைகளில் ஒன்றான பெருங்கற்கால கல்திட்டை ஒன்றைப் பற்றி திரு. ஒரிசா(ஸா) பாலு அவர்கள் என்னிடம் அடிக்கடி சொல்லி வந்தார்.

வண்டலூர் கண்டிகை அருகே அமைந்த மேலக்கோட்டையூர் மலைமீது உள்ள அந்த கல்திட்டையை காணக்கூடிய வாய்ப்பு நேற்றுதான் கிடைத்தது. 


என்னால் நேரடியாக பயணிக்க முடியாததால் எனது இளவல் என்னை அங்கு கூட்டிச் சென்றார்.

அற்புதமாக இருந்த அந்த கல்திட்டையை பற்றி திரு. பாலு அவர்கள் சொல்லிய சில தகவல்கள்:

பெருங்கற்கால நாகரிகத்தை சேர்ந்த அந்த கல்திட்டையின் வயது சுமார் 30000 ஆண்டுகள் முதல் 50000 ஆண்டுகள் இருக்கலாம்.

இந்த கல்திட்டையின் மற்றொரு சிறப்பு இது வானியல் ஆய்வுக்கும் பயன்பட்டது என்பதுதான்.

இது பற்றி மேலும் பல ஆய்வுகள் செய்தால் தமிழரின் தொன்மையை இந்த உலகிற்கு நாம் உணர்த்தலாம்.

வாழ்க தமிழ்.

நன்றிகள்.