Monday 24 December 2012

ஆற்றுத் தண்ணீரைப் பயன் படுத்தி..........!


நாம் ஆறு ஓடும் தோட்டங்களுக்கு பக்கத்தில் இருப்பவர்கள் நீர் ஏற்றிகள் (பம்ப் செட்) வைத்து தங்கள் தோட்டங்களுக்கு தண்ணீர் இறைத்துக் கொள்வதைப் பார்க்கிறோம்.

அந்த ஆற்றுத் தண்ணீரைப் பயன் படுத்தி மின்சாரமும் நமது உபயோகத்திற்கு பயன் படுத்திக் கொள்ளலாம். இபாசி கப்பா என்கிற மின் ஆக்கி(generator) இதைச் செய்து தருகிறது.

இதில் தண்ணீரை விரைவு படுத்தித் தரும் ஒரு நீர் சிதற்றி(diffuser) அமைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் வேகமான தண்ணீர் டர்பைனுக்கு வந்து சுழலச் செய்து மின்சாரம் கிடைக்கிறது.

இதை வைத்து பெரிய அளவில் நம் தேவைகள் முழுவதும் பூர்த்தி செய்ய முடியா விட்டாலும் சில விளக்குகள் , கணினிகள் ,இணையத் தொடர்பு போன்ற வற்றை மின்சாரம் இல்லாத இடை வெளியில் பயன் படுத்திக் கொள்ளலாம்.

இந்த மின் ஆக்கியைப் பயன் படுத்த இதை தண்ணீரில் மூழ்கச் செய்து விட வேண்டும். தண்ணீரில் மூழ்கியிருந்த படியே இயங்கும்.

இந்த மின் ஆக்கி இயங்கும் போது காதை அடைக்கும் இரைச்சல் இல்லை வாடை தரும் வெளியேற்றங்கள் இல்லை. சுகமாய் இலகுவாய் இயங்கும். 
நன்றிகள்.