Tuesday 15 May 2012

உன் நினைவு ............!


பல நேரங்களில்
எதையெதையோ நினைக்கிறது
மனது..

நினைத்த எல்லாவற்றையும்
சில தருணத்தில்
மறந்தும் விடுகிறது...

மறந்த ஒன்றும் நினைவுகளின்
சாயலில் மண்டியிட்டு அழுகிறது..
அழுகின்ற விசயங்களை

தவிர்க்க துணிகின்ற நேரத்தில்,
மறந்தும் மறக்காமல்
வந்து விடுகிறது
உன் நினைவு...

நன்றிகள்.