Saturday 26 May 2012

சமமான இரண்டு நிலைகள்.......................!

மனித வாழ்வில் அனைவருக்கும் சமமான இரண்டு நிலைகள் எவை தெரியுமா?












வருவதும் போவதும் இரண்டு- இன்பமும், துன்பமும்.

வந்தால் போகாதது இரண்டு- புகழும், பழியும்.

போனால் வராதது இரண்டு- மானமும், உயிரும்.

தானாக வருவது இரண்டு- இளமையும், முதுமையும்.

உடன் வருவது இரண்டு- புண்ணியமும், பாவமும்.

அடக்க முடியாதது இரண்டு- ஆசையும், துக்கமும்.

தவிர்க்க முடியாதது இரண்டு- பசியும், தாகமும்.

பிரிக்க முடியாதது இரண்டு- பந்தமும், பாசமும்.

இழிவைத் தருவது இரண்டு- பொறாமையும், கோபமும்.

அனைவருக்கும் சமமாவது இரண்டு- பிறப்பும், இறப்பும்.

இவையாவும் அனைவருக்கும் சமமாகும்.

நன்றிகள்.