Friday 9 November 2012

இத்தாலிய ரோட்டி பிறந்த கதை.........!


பீட்சா பிறந்த கதை தெரியுமா உங்களுக்கு ? பீட்சா, பிட்சா, பிசா, பிச்சா என பலவிதங்களில் அழைக்கப்படும் இத்தாலி ரோட்டி நாகரீக இளைஞர்களின் அடையாளங்களில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இன்று தமிழில் ஒரு திரைப்படம் கூட பீட்சா என்று வந்து விட்டது .

ஆனால் உண்மையில் இத்தாலி ரோட்டி ஏதோ இன்று நேற்று பிறந்த உணவல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கிரேக்கர்கள் இதனை உண்டு மகிழ்ந்திருக்கிறார்கள். ஆனால் இத்தாலி ராணியின் கடைக்கண் பார்வை கிட்டிய பிறகுதான் இதற்கு உலகப் புகழ் கிடைத்தது என்பது ஓர் சுவாரசியமான கதை.

1889ஆம் ஆண்டில், ஒருநாள் இத்தாலி ராணி மெர்கரிட்டா, தனது கணவர் ராக் உம்பர்டோவுடன் நகர்வலம் வந்துகொண்டிருந்தார். அப்போது ஏழைகள் பலரும் தட்டையான ரொட்டி ஒன்றை மிகவும் ரசித்து ருசித்து உண்பதை பார்த்தார்.

தானும் ஒரு ரொட்டியை வாங்கி சாப்பிட்டுப் பார்க்க, அப்படியே அதன் ருசியில் மனம் சொக்கிப் போனார் ராணி மெர்கரிட்டா. நன்று, நன்று ரொம்ப நன்னா இருக்கு, என்றபடியே அதனை அப்படியே அரண்மனைக்குள் அழைத்து வந்துவிட்டார்.

அரண்மனையின் தலைமை சமையல் கலைஞர் ரஃபேல், ஏழைகளின் இந்த எளிய உணவுக்கு மேலும் மெருகூட்டினார். சிவப்பு நிறத் தக்காளி, வெள்ளை நிற பாலாடைக் கட்டி, பச்சைத் துளசி போன்றவற்றை மேலே தூவி இத்தாலியின் தேசியக் கொடி போல இத்தாலி ரொட்டியை உருமாற்றி விட்டார். 

போதாக்குறைக்கு அதற்கு மெர்கரிட்டா இத்தாலி ரோட்டி என ராணியின் பெயரையும் வைத்து ராணியைக் குளிர வைத்துவிட்டார். இப்படி உள்ளூரில் பிரபலமான இத்தாலி ரோட்டி, இரண்டாம் உலகப் போருக்கு பின் உலகை சுற்ற ஆரம்பித்துவிட்டது. 

இத்தாலிக்குள் நுழைந்த அமெரிக்க மற்றும் அயிரோப்பிய படை வீரர்களை இத்தாலி ரோட்டி  சிறைபிடித்து விட்டது. ஒரு துண்டை வாயில் போட்டவுடனேயே அதன் சுவைக்கு அந்த வீரர்கள் அடிமையாகிவிட்டார்கள். பின்னர் போர் முடிந்ததும் நாடு திரும்பும் போது பிட்சாவையும் அவர்கள் தங்கள் நாடுகளுக்கு உடன் எடுத்துச் சென்றனர்.

அவ்வளவுதான் சர்வதேச தரத்திற்கு இத்தாலி ரோட்ட்டி உயர்ந்துவிட்டது. மாசி மாதம் 9ஆம் தேதியை உலக இத்தாலி ரோட்டி தினமாக கொண்டாடும் அளவுக்குஇத்தாலி ரோட்டி சர்வதேசத்தில் நட்சத்திர நாயனாகி விட்டது.

நன்றிகள்.