Saturday 20 July 2013


புகைபிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுதலை வேண்டுமா? மிகவும் அதிமிக முக்கியமான மருத்துவ குணம் கொண்ட உலர் திராட்சை;(முந்திரி வத்தல் புகை பிடிப்பவர்களை அதன் பாதிப்பில் இருந்தும் அந்த பழக்கத்தில் இருந்தும் காப்பாற்றும் அறுமருந்து ஆம் புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோடினை உலர்திராட்சை கரைத்து விடுகிறது.

மேலும் புகைபிடிக்க மனதுக்கு தோன்றும் முன்பு சில உலர்திராட்சைகளை சாப்பிடும் பொழுது அதன் இனிப்பு கரைசல் புகைப்பிடிக்க தூண்டும் உணரவை கட்டுப்படுத்து கிறது, இது சீனாவில் பிரபலம் நமக்கு காசு கொடுத்தால் மட்டுமே நல்ல மருத்துவத்தை சொல்லும் சில சிறந்த நாட்டு மருத்துவர்கள் கூட இந்த உண்மையை சொல்வதில்லை.

இந்த மருத்துவத்தை தலைவன் (master) பெங்க் மும்பை வந்த போது எனக்கு சொன்னது, நான் பலரிடம் சொல்லி அதற்கான பலனும் பார்த்திருக்கிறேன், இதை நீங்களும் உங்கள் உயிரான உறவுகளிடம் சொல்லி புகைபழக்கத்தை ஒழிக்க உடனிருங்கள்.

மதுபழக்கமும் போய்விடும் அதற்கும் எளிய மருத்துவம் இருக்கிறது, அதை தெரிந்தவர்களிடம் மட்டும் சொல்லி வருகிறேன் i) ஏன் உலர் திராட்சை புகைபிடிக்கும் பழக்கத்தை விரட்டும் மருந்தாக சீனர்கள் பயன்படுத்துகிறார்கள்?

முதலில் உலர் திராட்சையில் உள்ள வேதிப்பொருள் ரசாயனம் (Chemistry) படித்தவர்கள் படிக்காதவர்கள் அனைவருக்கும் புரிவது போன்று.

1. பக்குவபடுத்தப்படாதநார்சத்து, புரதம்(curde protein and curde fiber) இரண்டும் இதில் உள்ளது, இவை இரண்டும் உமிழ் நீரில் உள்ள வேதிப்பொருளோடு கலக்கும் போது அதி வீரியமுடம் இரத்தத்தில் கலந்து தங்களது பணியை செய்ய ஆரம்பிக்கும் அடுத்து முக்கியமான ஒரு வேதிப்போருள் இயற்கை வேதி சலவை நார்சத்து (natural detergent fiber) இது நமது உடலிலும் உள்ளது.

உமிழ் நீரில் ஆனால் தற்போது நாம் அதிகமாக எண்ணெய் மற்றும் கொழுப்பு மிகுந்த உணவை உட்கொள்ளும் காரணத்தால் இவை தனது பணியை வேகமாக செய்ய முடிவதில்லை, இதன் பணி, உணவு குழாய் மற்றும காற்றுக்குழாய்களில் படித்து இருக்கும் தேவையற்ற பொருட்களை கரைத்து அதை உடலுக்கு தேவையான புரதமாக மாற்றி மீதம் உள்ளவற்றை கரைத்து சிறுநீர் மற்றும் வியற்வை மூலம் வெளியேற்றுவது தான்.

இதே பணியைதான் திராட்சையில் உள்ள இயற்கை சலைவைப் புரதம் செய்கிறது, உமிழ் நீருடன் தீராட்சை குழவையாக (பல்ப்) மாறிய உடன் இரத்தத்தில் கலந்து நூரையீரலில் படிந்து இருக்கும் தாரை மெல்ல கரைக்கும் பணியில் ஈடுபடுகிறது, தார் மட்டுமல்லாமல் நிகொடின் போன்ற தேவையற்ற பொருட்களை கரைக்க உமிழ் நீருக்கு மிகபெரும் உதவி செய்கிறது.

pH = −log10[H3O+] இதன் பி எச் விகிதம் இப்படி இருப்பதால் உடலில் பணியாற்றும் வேகமும் அதிகமாகிறது, மேலும் சிவப்பணுக்களில் எளிதாக தங்கி நுரையீரல் மற்றும் இதர பகுதிகளுக்கு விரைவாக செல்கிறது.(அதிகமாக எழுதினால் குழப்பம் ஏற்படும் என்பதற்காக வேதி மாற்றங்களை எழுத வில்லை,) (கெமிஸ்டரி பரித்தவர்கள் அக்ஸ்லெட்ரிக்Oxaloacetic acid ஆசிட் ஃபுன்மரிக் (Fumaric acid) ஆசிட்டாக மாற்றும் வேதி வினையை பார்க்கவும்)

ii) அடுத்து புகை பழக்கத்தை எப்படி கட்டுப்படுத்துகிறது இதற்கு உலர் திராட்சையில் உள்ள மற்றொரு வேதிப்பொருள் பினொல் மற்றும் டன்னின் இவை இரண்டும் திராட்சை போதை பானமான மதுவில் (In wine)சேர்க்கப்படும் முக்கிய பொருளாகும் இயற்கையாக திராட்சையில் உள்ள டன்னின் உமிழ் நீருடன் சேரும் போது தேன் போன்ற ஒரு மாற்றத்திற்கு உட்படுகிறது.

இந்த டன்னின் வேதிப்பொருள் கிரியா ஊக்கியாக மாறி ந்யூரான்கள் வழியாக மூளையை சென்றடைகிறது. அப்போது மந்த உணர்வு ஏற்படும் அந்த மந்த உணர்வானது புகைபிடிக்கவேண்டும் என்ற எண்ணத்தை மாற்றும் அபரீத சக்தி கொண்டது.
நன்றிகள்.