Friday 2 March 2012

அன்புள்ள அன்னைக்கு ........!

பாலைவன என் பாதையில்
நீ


















வந்ததால் சோலைவனமாய் மாறியது,
முட்கள் நிறைந்த பாதையை
எல்லாம் அகற்றி விட்டு....
எனக்கு நடக்க கற்று தந்தாய்,
பொய்மை நிறைந்த பூவுலகில்
உண்மையை பேச சொன்னவளும்...
நீ என்றும் மனிதர்களை மட்டும்,
நேசிக்க கற்றுக்கொள் என்றாய் .........





விருப்பமுடன் உனக்கு
பிடித்ததை செய் என்றாய் ..........
நான் முதன்முதல் கைகோர்த்து
நடந்த உயிரும் நீ.....
என்னை உன் மார்பின் மீது போட்டு
தாலாட்டு கற்று தந்தவளும் நீ...!
சாப்பிடும் போது தலையில்
குட்டு வைப்பாய் ஒழுங்காய் சாப்பிடு என்று..!
மற்றவரிடம் என்னை விட்டுகொடுக்கா
உன் பேச்சு ........
கல்வி வயதில் பயில சென்றேன்
பிரிய மனம் இல்லாமல்,









உன் கண்களில் கண்ணீர் துளிகள்............
உன் தூக்கத்தையும்
சின்ன சின்ன சந்தோசத்தையும்
எனக்காக தொலைத்து விட்டு
என்ன பிடிக்கும் பிடிக்காது....
என்று ரசித்து விரும்பி......
செய்த என் அன்னையே...... ..!
இவற்றை எல்லாம் யான்
உணரும் நேரத்தில்,





















என்னை விட்டு சென்றதேனடி ......!
அதனால் முன் பிறப்பில்
நம்பிக்கை இல்லை எனக்கு....!
பாவத்தின் சம்பளம்,
இப்பிறவியில் கிடைக்கும்
என கேட்டிருக்கிறேன்...!
என்ன குற்றம் செய்தேன்.......!
நான் உன்னை பிரிய?.....??...

நன்றிகள்.