Tuesday 1 October 2013

"தமி" என்றால் தனித்துவமானது.....!

கேட்பதற்கே ஒரு கிளர்ச்சி ஊட்டும் சொல். மனதில் எதோ பல அலைகளை நாசுக்காக இட்டுச் செல்லும். அந்த அழுத்தத்தாலோ தெரியவில்லை சில தமிழருக்கு இதை பயன்படுத்த பிடிக்கவில்லை.


"தமி" என்றால் தனித்துவமானது என்று பொருள் படும் என்று சிலர் கூறுகிறார்கள். உலகில் தமிழரைத் தவிர வேறு யாராவது ‘தமிழ்‘ என்று சரியாக உச்சரித்தால் நிச்சயம் அவருக்கு ஒரு சிறந்த உச்சரிப்பாளர் என்ற பட்டம் கொடுக்கலாம். ஏன் என்று நினைக்கிறீர்களா ‘தமிழ்‘ என்ற சொல்லில் வரும் ழகரம் தான் காரணம்.

நாவின் நுனியை மேல் அண்ணத்தில் ஒரு அழுத்து அழுத்தித் தான் சொல்லலாம். இந்த “ழ” உச்சரிப்பு உலகிலேயே 3 மொழிகளில் தான் காணப்படுகிறது. தமிழ், மலையாளம், மண்டரின் இன மொழிகள் என்பன தான் அவையாகும்.

இங்கு மலையாளம் தமிழின் பிள்ளை போன்றது. இருந்தும் மலையாள பிரபல பாடகர் யேசுதாசி(ஸி)ற்க்கு ல, ள, ழ என்பவற்றை வேறுபிரிக்க சிரமப்படுவார். ”பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா” பாடலின் போது வைரமுத்துவுடன் சிறு கருத்து வேறுபட்டுக்கு உள்ளானார்.

மண்டரின் இன மொழிகள் வரும் “ழ” ஆனது தமிழில் வருவது போல் ழகர உச்சரிப்பு இல்லை. மற்ற எந்த மொழியிலும் இல்லை. எடுத்துக்காட்டாக உலகப்பொது மொழியாக கருதப்படும் ஆங்கிலத்தில் கூட “ழ” விற்கு “zha” என்று தான் பாவிக்கிறோம்.

சிறப்பு 'ழ'கரமே!

தமிழின் சிறப்பே 'ழ'கரம் என்பார்;
தமிழ் என்ற சொல்லிலே வருமே!

இந்த எழுத்து வராது சிலருக்கு;
இந்த எழுத்து 'ய'கரமாய் ஆகும்!

இந்த எழுத்து சரியாக வந்திட,
இந்தப் பயிற்சி அளித்திடுவர்!

அது: 'ஏழைக் கிழவன் வாழைப்
பழத்தில் வழுக்கி விழுந்தான்!'

கிழக்கு திசையில் பயணித்து,
பிழைக்கப் போகின்ற ஒருவன்,

மழை வந்ததால், ஓர் ஓரத்தில்
மழை படாது ஒதுங்கும் சமயம்,

வந்த பெரியவர் கேட்டதற்குத்
தந்த பதில்களைப் பாருங்கள்!

'எங்கே போறே?' - 'கெயக்க!'
'எதுக்குப் போறே?' - 'பொயக்க!'

'ஏன் ஒதுங்கறே ?' - 'மயக்கி!'
'இப்படிப் பேசறே?'- 'பயக்கம்!'
நன்றிகள்.