Sunday 20 October 2013

எதற்காக பற்கள் உயிரினங்களுக்கு....!

எதற்காக பற்கள் உயிரினங்களுக்கு தேவைப்பட்டது ? எதையும் சாப்பிடும் போது நன்றாக மென்று சாப்பிட வேண்டும் என்று சொல்லப்படுவதில் உள்ள விஞ்ஞானம் தான் என்ன ?

இதற்கு ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன், அமிலம் (Acid) என்பது இரும்பினை முழுவதுமாக கரைக்க கூடியது என்று வைத்து கொள்ளுங்கள், இப்போது ஒரு கிலோ எடையுள்ள ஒரு முழு இரும்பு துண்டினை ஒரு அமில தொட்டியில் போடுகிறேன், அமிலம் அவ்விரும்பு துண்டினை முழுவதுமாக கரைத்து முடிக்க ஒரு நாள் ஆகிறது. 

அனால் அதே இரும்பை நான் ஒரு கோடி சிறு துண்டுகளாக வெட்டி அதே தொட்டிக்குள் போடுகிறேன், இப்போது ஓரே நொடிக்குள் அந்த இரும்பு முழுவதுமாக கரைந்து விடும், அதாவது, நீங்கள் ஒரு பொருளை ஒரு திரவத்திற்க்குள் மூழ்கடித்தால், அப்பொருளின் மேற்பரப்பில் உள்ள அணுக்கள் (Surface atoms) மட்டுமே அத்திரவத்துடன் வினை (reaction) புரிகிறது.

ஒரே துண்டாக போடுவதை விட பல கோடி சிறு துண்டுகளாக போடுவது, மேற்பரப்பு அணுக்களின் விகிதத்தை (Surface atoms ratio) பல மடங்கு உயர்த்துகிறது, வினை புரியும் நேரம் சுருக்கப்படுகிறது. இதை தான் 'கைநெட்டிக்ஸ்' (Kinetics of reaction) என்று சொல்வார்கள்.


இப்போது நீங்கள் ஒரு சட்டி சோற்றினை உள்ளிறக்கி மெல்லாமல் முழுங்கினாலும், ஒரு கைப்பிடி சோற்றினை மென்று முழுங்கினாலும் உங்கள் உடம்பு ஒரே அளவு ஆற்றலை தான் எடுத்து கொள்ளும்.

நாம் உண்ணும் உணவு, நம் வயிற்றின் வழியாக கடந்து போகும் போதே தன்னால் முடிந்த அளவு ஆற்றலை இவ்வுடல் எடுத்து கொள்ள வேண்டும், வயிற்றில் இருக்கும் இருக்கும் உணவு கூட நமக்காக காத்திருக்காது.

'பற்கள்' உள்ளிரக்கப்படும் உணவினை சிறு சிறு துண்டுகளாக மாற்றி, அவைகளின் வினை புரியும் வேகத்தை அதிகப்படுத்தி (நாம் உள்ளிரக்குவதை கரைபபதற்கு வயித்துக்குள் இருக்கும் அமிலம் பெயர் தான் 'என்ஜைம்ஸ்' - Enzymes), பெருவாரியான ஆற்றலை ஒரு சோற்று பருக்கையில் இருந்து எடுத்து கொள்ளும் ஒரு உச்சகட்ட வேதியலுக்குரிய எதிர்வினையைத் தூண்டுகிறது.

இது எப்படி நம் முன்னோர்களுக்கு தெரிந்தது என்று தான் தெரியவில்லை,, நல்ல மென்னு சாப்டா தாம்ல ஒடம்புல சத்து பிடிக்கும் என்று ஒரு விஞ்ஞானம் அறியா என் பாட்டி பல முறை சொல்லி இருக்கிறார்.
நன்றிகள்.