Sunday 13 October 2013

பாலூட்டிகளின் யுகத்தில் மனித இனத்தின் வளர்ச்சியாகும்.....!

”மனிதயுகம்” ஆங்கிலத்தில் கோ(ஹோ)லோசீன் ஏற்படுவதற்கு முன்னாட்களான சகாப்தம் (Holocene Era) என்று கூறுவார்கள்.

இந்தயுகம் பூமியின் நேர அட்டவணை (Time Table) படி நடக்கிறதா என்று தெரியாது.

பூமிக்கடிகாரம் தன்னுடைய காலப்பயணத்தில் 12-மணியை தொடும் போது இந்த பாலூட்டியுகம் துவங்குகிறது, 


இப்பாலூட்டி யுகத்தின் ஆரம்பத்திலேயே தொன்றிய இதை மனித யுகம் என்று கூறமுடியாது, எதிர்பாராத திடீர் துணையுகம் என்றுதான் கூறமுடியும், எப்படி குளிர் இரத்தப்பிராணிகளின் யுகத்தில் நெடு நாளைக்கு முன் வாழ்ந்து மறைந்த போன பெரு உடல் கொண்ட விலங்குகளின் (Dinosaur) திடீர் வளர்ச்சியோ அதே போல் பாலூட்டிகளின் யுகத்தில் மனித இனத்தின் வளர்ச்சியாகும்

குளிர் இரத்தப்பிராணிகளின் யுகத்தின் நீண்ட பயணத்திற்கு பிறகு தான் நெடு நாளைக்கு முன் வாழ்ந்து மறைந்த போன பெரு உடல் கொண்ட விலங்கின் யுகம் தோன்றியது, ஆனால் மனிதயுகம் பாலூட்டியுகத்தின் கால் பகுதியிலேயே தோன்றிவிட்டது.

மனிதர்களுக்கு நெடு நாளைக்கு முன் வாழ்ந்து மறைந்த போன பெரு உடல் கொண்ட விலங்குக்குமான ஒரே வேறுபாடு அவைகள் உடலால் பிராமண்டமான பலாசாலிகள், இந்த பூமி இதுவரை இப்படி ஒரு பலாசாலி உயிரினங்களை பார்த்ததுமில்லை, இனி பார்க்கப்போவதுமில்லை.

ஆனால் மனிதன் தன்னுடைய அரைகிலோ எடைகொண்ட மூளையில் சுமார் 600 கோடி மின்சுற்றுக்கள் (Circuits) பெற்றுள்ளான், இதில் 15 முதல் 20 மின்சுற்றுக்களின் செயல்பாடுகள் மூலம் சுமார் 13 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நெடு நாளைக்கு முன் வாழ்ந்து மறைந்த போன பெரு உடல் கொண்ட விலங்குகளை மீண்டும் உருவாக்கிக்காட்ட முடியும் என்ற நிலைக்கு முன்னேறிவிட்டான்.

சென்ற தொடரில் கூறியது போல் உணவிற்கான ஒரு சாதாரண சிந்தனை, அவனை பிரபஞ்சத்தின் எல்லையை தாண்டி வேறுபிரபஞ்சங்களையும் யூகிக்கும் வரை சென்றுவிட்டது. 

ஒரு புறம் மனிதன் இயற்கையை அழித்துக்கொண்டு இருந்தாலும், மறுபுறம் இயற்கையும் தன்னுடைய தன்மையை மாற்றிக்கொண்டு தான் இருக்கும்.

இயற்கை மாற்றம் என்பது பாம்பு தன் சட்டையை கழற்றுவதுபோன்று பாம்பின் சட்டையை கழட்டுவதால் பாம்பிற்கு எந்த பாதிப்பும் வராது, அது பாம்பை மேலும் இளைமையாக்குவதற்கு தான், அது போல் தான் பூமியும்.

16 கோடி ஆண்டுகளுக்கு முன்பு மோதிய விண்கற்கள் குறைந்த பட்சம் 60,000 அணுகுண்டுவெடித்தற்கு சமமானது என்று கூறுகின்றனர். ஆனால் மீண்டும் பூமி உயிரோட்டமுள்ள ஓர் கோளாக மாறி பாலூட்டிகள் யுகம் தோன்றியதே?
நன்றிகள்.