Saturday 19 October 2013

உயிர் வாழ்தலுக்கு 'வியர்வை'....!

கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், நமக்கு மிகச்சாதரணமாக வழிந்து விழும் 'வியர்வை' எனும் திரவம் உயிர் வாழ்தலுக்கு எவ்வளவு இன்றியமையாதது எனத் தெரிய வரும்..

நமது உடல் எனும் பொருள் உயிர் வாழ வேண்டுமானால் எப்பொழுதுமே ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் இருக்க வேண்டும். (சுமார்) 18-35 பாகை சென்டிக்ரேட் வெப்ப நிலையில் எந்த பிரச்சினையும் இல்லாமல் உடலால் இயங்க முடியும்.


அதை தாண்டியோ அல்லது குறைந்தோ போனால் உடலால் சீராக இயங்க முடியாது, நமது உடல் ஒரு தானியங்கி வெப்பநிலைமானி போல தான், எப்போதும் அது தன்னை தானே அளவெடுத்து கொள்கிறது, ஒரு வேளை உங்கள் உடல் மெதுவாக 40 பாகை சென்டிக்ரேடை தாண்டி செல்கிறதென்று தெரிந்து விட்டால், உங்கள் மூளை தன் காதலியின் தந்தையை பார்த்து விட்ட காதலன் போல உடனே உசாராகி கொள்ளும்.

இப்போது அது தன்னை மீண்டும் 30-35 பாகை சென்டிக்ரேட் வெப்ப நிலைக்கு கொண்டு வர வேண்டும் அதற்காக மூளை தன் கையில் எடுக்கும் அத்திவாரம் தான் 'வியர்வை,, உடலின் மேற்பரப்பில் தான் வியர்வை சுரப்பிகள் உள்ளன, உடல் சூடாக ஆரம்பித்தவுடன் இச்சுரப்பிகள் திரவ நிலையில் வியர்வைகளை வெளி விட ஆரம்பித்து விடுகின்றன.

வெளியே வரும் வியர்வை நீர் நமது உடலில் உள்ள சூட்டினை அது எடுத்து கொண்டு நீராவி ஆகிவிடும், எந்த அளவிற்கு நம் உடல் சூடாகிறதோ அந்த அளவுக்கு வியர்வை வெளியேறி உடல் சூட்டினை தான் எடுத்து கொண்டு உடலை குளிர்விக்கிறது.

இப்போது நீங்கள் குளிரான இடத்தில் மாட்டி கொண்டால் உங்கள் உடல் சூடு இறங்கி கொண்டே வரும், ஆனால் உங்கள் உடலுக்கு சூடு தேவை, அதற்காக உடல் செய்யும் தந்திரம் தான் 'வாயை அச்சு அடிக்க செய்வது' உடலை நடுங்க செய்வது, கையை உரச செய்வது, ஒரு 'துணை'யை தேட செய்வது, இதெல்லாம் செய்ததால் இதய துடிப்பு அதிகமாகும்.

இதய துடிப்பு அதிகமானால் ரத்த ஓட்டம் அதிகமாகும், ரத்த ஓட்டம் அதிகமானால் உராய்வினால் உடலுக்கு 'வெப்பம்' கிடைக்கும், ஏனென்றால் வெப்பம் இல்லாமல் உயிர் வாழ முடியாது.

வெப்பம் என்றால் என்ன தெரியுமா ? அணுக்களின் ஓயா அசைவு தான் வெப்பம்.
நன்றிகள்.