Thursday 7 June 2012

இன்றைய மனிதனின் நிலை............!


ரூபாயை யாரும் ஒரு ஏழைக்கு அவ்வளவு எளிதில் தானமாகக் கொடுக்க மாட்டார்கள்! ஆனால் உணவுவிடுதிகளில் (Hotel)"சொற்ப இனாம்" (Tips) ஆக 50 ரூபாவைக் கொடுப்பார்கள்!

மூன்று நிமிடம் கடவுளை வணங்க பிடிக்காது! ஆனால் மூன்று மணித்தியாலம் சினிமாப் படம் பார்க்கப் பிடிக்கும்! முழு நேர வேலைக்குப் பின்னர் கூட உடற்பயிற்சிக்கு செல்வார்கள்!

ஆனால் வீட்டில் அப்பா அம்மாவுக்கு உதவக் கேட்டால் முடியாது என்பார்கள்! காதலர் தினத்திற்காக ஒரு வருடம் காத்திருந்து பரிசு வாங்குவார்கள்! ஆனால் அன்னையர் தினம் மட்டும் நினைவில் இருக்காது!

புகைப்படத்திலுள்ள சிறுவனுக்கு ஒரு ரொட்டித் துண்டைக் கூட கொடுக்க யாரும் இல்லை!

ஆனால் இந்த ஓவியம் வரையப்பட்ட முறையில் சோகம் இருக்கிறது என்பதற்காக இதனை ஒருவர் பத்து இலட்சம் ரூபாய்களுக்கு வாங்கிச் சென்றுள்ளார்!

இதுதான் இன்றைய மனிதனின் நிலை!

மனிதர்களை நினைக்கும்போது நூதனமாக உள்ளது அல்லவா? இது ஒன்றும் புகைப்படம் அல்ல, ஒரு ஒவியரால் வரையப்பட்ட ஓவியம்.

நன்றிகள்.