Tuesday 5 June 2012

உடை நாகரீகம்.................!


உடை நாகரிகம் என்றால் என்ன ???
மாற்றான் தேசத்து நாகரிகத்தை சுவைக்கும் தமிழ் பெண்கள் சிலர் .....இருந்து ...பலர் !!!

உடை நாகரிகம் என்பது மனித உறுப்புகளை எதிர் பால் இனத்தவரின் இடமிருந்து ஈர்ப்பை குறைபதற்கே உடை நாகரிகம் வளர்ந்தது .. ஆனால் தற்பொழுது உள்ள தமிழ் பெண்கள் சிலர் ...சிலர் என்று கூறமுடியாது எண்ணிக்கை பலர் என்று சொன்னால் தகும் ... இன்று பள்ளி , கல்லூரி பெண்கள் முதல் குழந்தை பெற்ற பெண்கள் வரை இப்பொழுது நாகரீகம் (Fashion)என்று சொல்லிக்கொண்டு கணுக்காலில் இருந்து இடைவரை அணியும் தோல் அல்லது பருத்தி உறை'கள்(legging 's) அணிந்து வருகிறார்கள் ....

கணுக்காலில் இருந்து இடைவரை அணியும் தோல் அல்லது பருத்தி உறை'கள்(legging 's) நாகரீகம் என்றால் என்ன ??? அதாவது தமிழகத்தில் ஒரு காமெடி நடிகர் சொல்வார் ....." வரும் ஆனா வராது " என்பதை போல ஆடை அணிந்து இருப்பார்கள் ஆனால் ஆடை இல்லாததை போல் தான் தோற்றமளிக்கும்.


இந்த கணுக்காலில் இருந்து இடைவரை அணியும் தோல் அல்லது பருத்தி உறை'கள்(legging 's) நாகரீகம்....நாங்கள் இங்கு காட்டப்பட்ட படத்துக்கும் தற்பொழுது பெண்கள் அணியும் கணுக்காலில் இருந்து இடைவரை அணியும் தோல் அல்லது பருத்தி உறை'கள்(legging 's) பெரிதாக ஒன்றும் வித்தியாசம் இருக்காது.

ஓர் மொழியின் வார்த்தையாக சில தமிழ் வார்த்தைகளை நாம் பயன்படுத்தினால் முகத்தை சுளிப்பார்கள் தமிழர்களில் பலர் ...ஆனால் அதுவே ஆங்கிலத்தில் நூறு முறை பயன்படுத்தினாலும் அதற்க்கு முகத்தை காட்ட மாட்டார்கள் நம் மக்கள் பலர்....

உதாரணத்துக்கு வார்த்தை குண்டி (இருபிரிவுகளாக அமைந்திருக்கும் ஆசனவாய்ப் பகுதி) ...போன்றவை ....

நாம் ஒரு மொழியின் வார்த்தையாக இத்தகைய சொற்களை பயன்படுத்தினாலே முகம் சுளிக்கும் நபர்கள் ....
அத்தகைய உறுப்புகளை வாய் வழியாக சொல்ல மறுக்கும் பொழுது .. அப்படிப்பட்ட உறுப்புகள் நல்ல எடுப்பாக பலர் பார்வையில் படும் விதத்தில் சென்றால் மற்றவர்களின் முகம் சுளிக்க கூடும் என்பதை அறியாத இன்றைய தமிழக நாகரிக பெண்கள் ...

"பெண்கள் சுதந்திரம்" என்ற போர்வையில் ஆடை அணிந்தாலும் -அணியாதது போல் தோற்றம் அளிக்கும் கணுக்காலில் இருந்து இடைவரை அணியும் தோல் அல்லது பருத்தி உறை'கள்(legging's) உடையை பெரிதும் விரும்பி உபயோகித்து வருகின்றனர் ....இதை மதிப்பிற்குரிய பெண்கள் சிலர் சமுக நலன் கொண்டு உணராத பட்சத்தில் ........ "காலம் சர்வ நாசம்" "ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே"..............

அண்ணளவாக இற்றைக்கு நாற்பது ஆண்டுகளிற்கு முன்பு என நினைக்கின்றேன் "ஆனந்த விகடன்" என்னும் வாராந்த சஞ்சிகையில் ஆசிரியர் மணியன் அவர்களின் பயணத்தொடரில் இலங்கைக்கு முதன்முறையாக பயணம் செய்தபோது என்று நினைக்கின்றேன்.

தமிழர்களின் பிரதேசங்களிற்கு பயணத்தை முடித்து தாயத்தமிழகம் திரும்பியதும் இலங்கைத் தமிழ்ப் பெண்களின் உடையை விமர்சிக்கும் பொது மார்புக்குத் திரை (தாவணி) போடாத மங்கையரைக் கண்டேன் என்று எள்ளிநகையாடி அவரின் பாணியில் எழுதியதை வாசித்தது எனது மனதை புண்படுத்தியது அன்று.

அதேநிலை தாயத் தமிழகத்தில் தலைகாட்டியுள்ளது இன்று ஏனோருவரும் இந்தக் "கலாச்சார அழிவிற்கு" எதிராகக் குரல்கொடுக்க முன்வரவில்லை என்று எண்ணும்போது மனதுகனக்கிறது ஏனென்றால் ஒரு இனத்தின் "அடையாளங்கள்" மொழியும், உடைகளுமேயாகும்.

உரியவர்கள் நன்கு கவனத்தைச் செலுத்துமாறு மிகப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். முன்பெல்லாம் நாகரீகம் என்றால் விலங்கு நிலையில் இருந்து மாற்றமடைந்து மனிதர்களாக வாழ முற்பட்ட பொது தங்களது உடலின் அந்தரங்க உறுப்புக்களை அடுத்தவரிற்கு மறைப்பதற்காகவே உடைகளை அணியத்தொடங்கினர்.

ஆனால் இன்றோ உடலில் அந்தரங்க உறுப்புக்கள் எப்படி உள்ளதோ அதை அப்படியே பிரதிபலிக்கக் கூடியதாக உடலோடு ஒட்டியதாக அணிந்து உடை அணியாதது போன்ற தோற்றப்பாட்டை யாரார் காண்பிக்கிறார்களோ.


அதுவே நாகரீகத்தின் உச்சமாக உள்ளது. இது தமிழர்களது கலாச்சாரத்தை அழிவிற்கே இட்டுச்செல்லும். ஒரு தமிழ்ப் பெண்ணைக் கண்டால் "இருகை கூப்பி" வணக்கம் எனத் தாயின் உணர்வைக் கொண்டுவருவதாக எங்களது உடை அலங்காரம் அமைவதே "கலாச்சார அழிவிலிருந்து" எம்மினத்தைக் காக்கும், இல்லையேல் நிறையவே குற்றச்செயல்கள் பெருகுவதற்கான வாய்ப்பை நாங்களே ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்புக்கள் அதிகம்.
நன்றிகள்.