முடிவில்லாத இந்த அறிவியல் பயணத்தில் பயணித்த மறக்க முடியாத மனிதர் கோவையைச் சேர்ந்த ஜி.டி. நாயுடு ஐயா அவர்கள்.பல்கலைக் கழகம் கூட முடிக்காதவர்.
மரக்கரியில் இயங்கிய பேருந்து (Bus)கோவை:
தமிழகத்தில் பேருந்து பயணம் அவ்வளவு அறிமுகமில்லாத காலத்தில் கோவையிலிருந்து உடுமலை வழியாக பழனிக்கு மரக்கரியை பயன்படுத்தி இயக்கப்படும் பேருந்து ஒன்றை கோவையைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி ஜி.டி.நாயுடு இயக்கியுள்ளார்.
கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஜிடி நாயுடு நினைவு இல்லத்தில் இந்த பேருந்து இன்றும் கூட இயங்கும் நிலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
முதலாவது பேர்ந்து; (first bus)
அதுபோக நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே தானியங்கி பயணச்சீட்டு (Automatic tickets), இயந்திரத்தைச் சூடேறாதுகுளிரச்சி செய்யும் ஒரு கருவி (Radiator vibration system) , பேருந்து வழித்தட கருவி (Bus routes, Equipment) என அதிசய இயந்திரங்களை கண்டறிந்து நவீன (On modern) பேருந்தை அறிமுகப்படுத்தி பெருமை சேர்த்தவர் கோவையை சேர்ந்த அறிவியல் மாமேதை ஜி.டி. நாயுடு.
மோட்டார் வாகனத்தில் மட்டுமல்லாது மிக குறைந்த விலையில் வானொலி (Radio)மற்றும் விவசாயத்துறையிலும் பல்வேறு அறிய கண்டுபிடிப்புகளை கண்டறிந்தவர்.
வாய்ப்பு கிடைத்தால் அவரின் கண்டுபிடிப்புகள் அடங்கிய அருங்காட்சியகத்திற்கு சென்று வாருங்கள்.
G.D. NAIDU CHARITIES,
President Hall, 734,
Avinashi Road,
Coimbatore - 641018.
INDIA
நம்மில் பலருக்கும் தெரியாத இந்த அற்புத விஞ்ஞானியை பாராட்ட இப்போது அவர் இல்லை .... ஆனால் இனியாவது ஒரு தமிழ் விஞ்ஞானியை மக்களுக்கு காட்டுவோம்.
நன்றிகள்.