Wednesday 20 June 2012

ஓரெழுத்து ஒரு சொல்............!


நம் தமிழ் மொழியின் சிறப்புக்களில் ஒன்று..

ஆ - பசு

ஈ - பறக்கும் பூச்சி

ஊ - இறைச்சி

ஏ - அம்பு

ஐ - அழகு, தலைவன்

ஓ - வினா, மதகு(நீர் தங்கும் பலகை)

மா - பெரிய

மீ - மேலே

மு - மூப்பு

மே - அன்பு, மேன்மை

மை - கண்மை(அஞ்ஞனம்)

மோ - முகர்தல், மோத்தல்

தா - கொடு

தீ - நெருப்பு

தூ - வெண்மை

தே - தெய்வம்

தை - தைத்திங்கள்

சா - மரணம்,பேய்

சீ - இகழ்ச்சி, சீத்தல்

சே - எருது

சோ - மதில்

பா - பாட்டு,நிழல், அழகு

பூ - மலர்

பே - நுரை, அழகு

பை - பசுமை, கைப்பை

போ - செல், போதல்

நா - நாக்கு

நீ - நீ

நே - அன்பு, நேயம்

நை - வருந்து, நைதல்

நோ - நோய், வருத்தம்

கா - சோலை

கூ - பூமி

கை - கரம்

கோ - அரசன், இறைவன்

வா - வருக

வீ - பூ

வை - கூர்மை,வைத்தல்

வௌ - வவ்வுதல் (அ) கௌவுதல்

யா - ஒரு மரம்

நொ - துன்பம்

து - கொடு, உண், பிரிவு

நன்றிகள்.