Sunday 1 January 2012

கல்வியின் சிறப்பு...................!


இன்றைய உலகின் இன்றியமையாத ஒன்றாகத் திகழ்வது யாதெனில் கல்வியே ஆகும்.எந்த ஒரு சமூகத்தினரும் இக்கல்வியைக் கற்பதில் இருந்து விலகிச்செல்வது இன்றைய நவீன உலகில் மிகவும் அரிதாகக் காணப்படுகிறது.

ஏனெனில் கல்வியின் சிறப்பை அனைத்து சமூகங்களும் புரிந்துள்ளன. இதனால்தான் இன்று கல்வியானது மனிதனின் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது.

கல்வியின் சிறப்பைப் பற்றிக் கூறும்போது கல்வி கற்றவன் எந்த இடத்திற்குச் சென்றாலும் அவன் பிறசமூகத்தால் மதிக்கப்படுகின்றான். இதற்குக் காரணம் அவன் கற்ற கல்வியே.

கற்றவனுக்கு தனது ஊரும், நாடும் அல்லாமல் எந்தஊரும், நாடும் தனது; ஊராகவும், நாடாகவும் கொள்ளமுடிகிறது. இப்படி கல்விகற்றவனின் சிறப்பு இருக்க.

ஒருவன் மரணிக்கும்வரை கல்விகற்காமல் இருந்து காலத்தைக் கழிப்பதுமிகவும் சிரமமானதாகும். இதனையே திருவள்ளுவர் மிகவும் அழகாக வர்ணித்திருக்கிறார்.

"யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால் ஏன் ஒருவன் சாந்துணையும் கல்லாதவாறு" எனக்குறிப்பிடுகிறார்.

ஒருவன் தான் எவ்வளவு கல்வி கற்றாலும் அதனைச் செயல்வடிவில் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவன் கற்ற கல்வியின் பயன் அவனுக்குக் கிடைக்கும்.

இல்லையேல் அவன் கற்ற கல்வியின் பயன் ஒன்றும் இல்லாமல் போய்விடும்.இதனையும் திருவள்ளுவர் தனது திருக்குறளின் கல்வி என்ற அதிகாரத்தின் முதலாவது குறளில் தெளிவாகக் கூறுகிறார்.

"கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக" என்று கூறுவதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம். என்று சொல்லப்படுவதும், எழுத்து என்று சொல்லப்படுவதும்.

இவை இரண்டினையும் அறிந்தோர் சிறப்பு மிக்கமக்களின் உயிர்களிற்கு கண் என்று சொல்லப்படுவர். இந்த அளவிற்கு கல்வியின் சிறப்பு எடுத்துரைக்கப் படுகின்றது.

"கண்ணுடையார் என்பவர் கற்றோர் முகத்து இரண்டு புண்ணுடையார் கல்லாதர்" கற்றவரின் சிறப்புப் பற்றிக் கூறும்போது ஒருவரின் முகத்திலுள்ள கண்ணானது கற்றவருக்குரிய அடையாளம் என்று சொல்லப்படுகிறது.

அதேகல்வி இல்லாதவரிற்கு முகத்தில் இரண்டு புண் இருப்பதாக குறிப்பிடப்படுகிறது. இதன்மூலம் கல்வியின் சிறப்பும். அதனைக் கற்றவனின் சிறப்பும் கூறப்படுகிறது.

கல்வி உடையவர்கள் அனைத்து மக்களிடமும் நன்றாகப் பழகிக் கொள்வதோடு மடுமல்லாமல் அவர்களுடன் சேர்ந்து சந்தோசமாக வாழ்வதையே விரும்புவார்கள். இவர்கள் பிரிகின்றபோது எப்போது இனி நாம் மீண்டும் சேர்வோம்!.

என்ற நினைவிலேயே பிரிகின்ற தன்மை கற்றவரிடம் இருக்க வேண்டும்.

மனிதன் ஆயுள் முவதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். கற்கமறுப்பவன் வாழமறுப்பவன் ஆகின்றான்.

கல்வி என்பது ஆய்வு கல்வி மூலம் சூழலை, அறிவை சமூகத்தை, பண்பாட்டை, மரபை ஆராய்ந்து கொள்ளலாம்."கல்விக்காக உயிர் கொடுத்தோர் என்றும் மரணிப்பதில்லை" மேற்கூறிய வாசகத்தை ஆராய்ந்தபோது கற்றவனின் சிறப்பைக் காணலாம்.

அதாவது இக்கல்விக்காக உயிர்கொடுதோர் மரணிப்பதில்லை என்பது கல்வி கற்றவர் மரணித்து விடுவார், ஆனால் அவர் கற்ற, கற்பித்த கல்வி இந்த உலகம் அழியும்வரை அழியாது இருந்தே ஆகும்.

இதனையே கல்விக்காக உயிர் கொடுத்தோர் மரணிப்பதில்லை எனக்கூறப்படுகிறது. இதற்குச் சிறந்த உதாரணம் எந்த சமயமும் சாராமல் மனிதவாழ்வின் மேம்பாட்டிற்காக எழுதிய திருவள்ளுவர் இறந்துவிட்டார்.

ஆனால் அவரினால் எழுதப்பட்ட "திருக்குறள்" உலகின் அனைத்துப் பாகங்களிலும் பலமொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அழியாமல் இருப்பதே ஒரு எடுத்துக் காட்டாகும்.

"தான் இன்புறுவது உலகின் பிறர் கண்டு
காருமுருவர் கற்றந்தார்"

ஒருவன் தான் கற்ற கல்வியின் இன்பத்தை உணர்ந்தானாயின் அவன் மீண்டும் கற்பதையே விருபுவான்.

இது கல்வியின் பண்பாக கருதப்படுகிறது மாந்தர் தம் கரியனைத்தூரும் அறிவு என்பது வள்ளுவர் கண்ட வாழ்க்கை நெறியாகும். கல்வி மனித அடிப்படை உரிமைகளில் ஒன்று.

அறிவியற் கல்வி, சமூக அறிவியற்கல்வி, அழகியல் கல்வி ஆகிய மூன்றும் வாழ்க்கைக்கு அவசியமானவை. ஒவ்வொருவனுக்கும் பெருமையையும், புகழையும் தரக்கூடியது செல்வம் "கல்விச்செல்வமே"அன்றி வேறில்லை.

கல்வியோ தொழிலுக்கு வழிகாட்டுகிறது.  கல்வி என்பது வாழ்க்கை வாழ்வதற்காக உதவும் கருவியாகும்.வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதை இனங்கண்டு அதற்கேற்ப கற்க வேண்டும்.

வாழ்க்கையை நெறிப்படுத்தவும், மேம்படுத்தவும் கல்வியை பயன்படுத்த வேண்டும். கல்வி கற்றவர்களிடம் ஒழுக்கம், பண்பு, நேர்மை, நீதி இவைகள் அனைத்தும் ஒருங்கே அமைந்து காணப்பட வேண்டும்.

எனவே கல்வியானது ஒருமனிதனின் முக்கிய தேவையாக இருக்கிறது. எந்தவொரு சமூகமும் கல்வி இல்லாமல் இருப்பது இக்காலத்தைப் பொறுத்தவரை மிகவும் தாழ்வாகவும், இழிவாகவும் கருதப்படுகிறது.

எனவே இவ்வாறு பார்க்கும்போது கல்வியின் முக்கியத்துவத்தை நன்கு அறியமுடிகிறது. ஒருவன் கல்வியில் சிறந்து விளங்கினால் சமூகத்தில் எவ்வாறு மதிக்கப் படுகின்றான் என்பதை விளங்க முடியும்.

ஆனால் நாங்கள் கற்றவர்கள் என்று கூறிக்கொண்டு தமது கல்வியினை மற்றவர்களிற்கு கற்பிக்காமலும், அக்கல்வியினால் ஏற்படும் நன்மைகளை தனது சூழலிற்குப் பயன்படுத்தக் கூடிய எந்த முயற்சிலும் ஈடுபடாது .

தாங்கள் வசிக்கும் சூழலில் மிகப்பெரும் குழப்பங்களை ஏற்படுத்துவதோடு தலைக்கனத்துடன் எந்த ஒருநபரைக் கூட மதிப்பளியாது நடந்து கொள்வது கல்வியினால் தான் பெற்ற உயர்வை இழிவு படுத்தும் செயலாகும்.

இவாறு தனது கல்வியை துர்ப்பிரயோசனம் செய்யாது.கற்ற கல்விக்கு எற்ப ஒழுகி சிறந்த சமுதாயத்தை உருவாக்குவோம்.  

இவ்வாறு கல்வியை கற்று சமூகத்தில் சிறந்த மனிதனாக வாழ கல்வி உதவுகிறது. இப்படியான கல்வியின் சிறப்பை 2042 ஆண்டுகளிற்குமுன் திருக்குறள் மூலம் தெளிவாகக் கூறியிருக்கிறார் திருவள்ளுவர்.

(ஆய்விற்கு உதவிய அனைத்து இணையங்களிற்கும் நன்றிகள்)