Tuesday 24 January 2012

சொர்க்கமா..... நரகமா.....


அன்புக்கு எந்த அடிக்குறிப்பும் தேவையில்லை. அதுதான் அன்பின் அழகு சுதந்திரம்.வெறுப்பு ஒரு பந்தம்,சிறை.உங்கள் மீது திணிக்கப்படுவது.உலகமே வெறுப்பிலும்,அழிவிலும்,வன்முறையிலும்,போட்டியிலும்,பொறாமையிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.செயலாலோ,மனதாலோ ஒருவர் மற்றவரை கொன்று கொண்டிருக்கிறார்கள்.


அதனால்தான் சொர்க்கமாக இருக்க வேண்டிய இந்த உலகம் நரகமாக இறுக்கிறது.அன்பு செய்யுங்கள்.இந்த உலகம் மீண்டும் சொர்க்கமாக இருக்க வேண்டிய உலகம் நரகமாக இருக்கிறது.அன்பு செய்யுங்கள்.இந்த உலகம் மீண்டும் சொர்க்கமாகும்.


நேற்று யாராவது உங்களிடம் இனிமையாக நடந்து இருப்பார்கள்.அல்லது நாளை யாராவது இனிமையாகப் பேச உங்களை அழைத்திருக்கலாம்.இது அன்பே அன்று.இது வெறுப்பின் மறுபக்கம்.இத்தகைய அன்பு எந்த நேரத்திலும் வெறுப்பாக மாறலாம்.


ஒருவரை இலேசாக சுரண்டிப் பாருங்கள்.அன்பு மறைந்து வெறுப்பு வெளிப்பட்டுவிடும்.அதற்கு தோலின் ஆழம் கிடையாது உண்மையான அன்பிற்குப் பின்னணி கிடையாது.நேற்றோ,நாளையோ கிடையாது.அதைப்பகிர்ந்து கொள்ளக்காரணம் தேவையில்லை.


காலை வேளையில் பறவைகள் பாடுகின்றன.ஒருகுயில் அழைக்கிறது.காரனமிலாமல் தான்.இதயத்தில் நிறைந்த மகிழ்ச்சி ஒருபாடளாக வெடித்துப் பீரி டுகிறது.அப்படிப்பட்ட அன்பின் பரிமானத்திற்குள் நீங்கள் நுழைய முடியுமானால் அதுவே சொர்க்கம்.வெறுப்பு வெறுப்பையே உருவாக்கும்.அன்பே அன்பையே உருவாக்கும்.


சொர்க்கமும்,நரகமும் வேறெந்த உலகிலும் இல்லை. அனைத்தும் இவ்வுலகில்தான் நாங்கள்தான் அவற்றைத் தொலைத்துவிட்டு மாயையில் சிக்கித்தவிக்கிறோம் தொலைத்தவற்றை தேடுவதில் நேரத்தை வீணடிப்பதில் போக்காமல் இருக்கிற கணப்போழுதை சொர்க்கமாக அனுபவிப்பதற்கான அன்பைப் பகிர்ந்து நிகழ்காலத்தை சொர்க்கமாக்குவோம். அதுவே மனித வாழ்விற்கு மிகச்சிறந்தது.    

(நன்றிகள் ஜெயராஜன்)