Monday 23 January 2012

தமிழுள் தத்துவங்கள் .......

எட்டு(8/அ)*இரண்டு(2/உ)*ஆறு(6/ம்)= ஓம் = 96 தத்தவங்கள். ஓம் என்னும் சொல் அ+உ+ம் என்ற முன்று எழுத்துக்களால் ஆனது. " ஓம் " என்ற பிரணவம் 96 தத்துவத்துடன் விளங்கும். அ உ ம் என்ற எழுத்துக்களால் குறிக்கும் பெருக்குத் தொகை 8x 2 x 6 = 96. ஓம் என்பது பிரணவ மந்திரமாகும. 

இது அ + உ + ம் என்ற மூன்றெழுத்தின் இணைப்பே ‘ஓம்’. மனிதனின் உடலும் இறைவனின் இயற்கை வடிவான ஓங்கார வடிவத்துடன் அமைந்திருக்கிறது. மனித வடிவமும் அருள் வடிவம்தான்.ஓம் என்ற பிரணவன் "அ" என்பது எட்டும் "உ"என்பது இரண்டும் என்ற எண்களின் தமிழ் வடிவம்.

உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய்த்தாவது போல், உயிரும் உடலும் சேர்ந்ததுதான் மனித வாழ்வு. அவரவர் கையால் மனிதனின் உடல் எண் சாண்("அ" ) அளவுடையது. மனிதன் விடும் இரு("உ") வகை மூச்சுகள்.


(உள் மூச்சு வெளி மூச்சு)" உ ' எழுத்து குறிக்கும் மூச்சு உள் மூச்சு வெளி மூச்சு. " ம் ' ஆறு அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும் அத்துடன் " ஓம் " என்ற பிரணவம் 96 தத்துவத்துடன் விளங்கும்.

அ உ ம் என்ற எழுத்துக்களால் குறிக்கும் பெருக்கு தொகை 8x 2 x 6 = 96.இதனை சிலர் இப்படியும் கூறுவார்கள்:"அ" என்பது முதல்வனான சிவனையும் "உ" என்பது உமையவள் எனப்படும் சக்தியினையும், சிவனும் சக்தியும் இணைந்த சிவசக்தியினையும் குறிக்கும்.

நன்றிகள் தமிழ் தமிலானவள்