Friday 20 September 2013

விருந்தும் கூடாது விரதமும் கூடாது.....!

வாட்டி வதைக்கும் குடலில் சீழ் வடியும் புண் நோய்க்கான தீர்வு! 

வயதில் பெரியவர்களாக இருப்பார்கள். சின்னக் குழந்தைகள் மாதிரி கையில் எப்போதும் ஈரட்டிகள் (Biscuits) மாதிரி ஏதாவது வைத்து, சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். கேட்டா குடலில் சீழ் வடியும் புண் என்று சொல்வார்கள்.

குடலில் சீழ் வடியும் புண் வந்தவர்கள் வயிறை காலியா விடக்கூடாது. அடிக்கடி கொஞ்சமா எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும். அதென்ன குடலில் சீழ் வடியும் புண்?

நம்ம வயிற்றுக்குள்ள, வயிற்றைப் பாதுகாக்க வழவழப்பான திரை அமைப்பு இருக்கு. செரிமான நீர் சுரந்து, உணவோடு சேர்ந்து செரிமானமாகும்.

சாப்பாட்டுல காரமோ, புளிப்போ, உப்போ அதிகமானா, அது அந்தத்திரை அமைப்பை சீண்டிப் பார்க்கும். இலகுவாக கிழிஞ்சால்கூட, நேரடியா வயிறு அல்லது குடலுக்குத்தான் பாதிப்பு.

இதன் காரணமா அடி வயித்துல வலி, புளிச்ச ஏப்பம், நெஞ்செரிச்சல், சாப்பிட்டது செரிக்காது அப்படியே தொண்டைலயே நிக்கிறது மாதிரி உணர்வு இதெல்லாம் இருக்கும். இதுதான் குடலில் சீழ் வடியும் புண்.

  
குடலில் சீழ் வடியும் புண் ஏன் வருது? முதல் காரணம் நேரங்கெட்ட நேரத்து சாப்பாடு, காலை உணவைத் தவிர்க்கிறது, மதிய சாப்பாட்டைத் தள்ளிப் போடறது, அடிக்கடி கோப்பி, தேநீர் குடிச்சு வயிற்றை நிரப்பறது.

சாதாரண தலைவலி, காய்ச்சல்னா உடனே மாத்திரை போடற பழக்கம் பலருக்கு உண்டு. இப்படி தானாவே எந்தப் பிரச்சினைக்கும் அடிக்கடி மாத்திரை சாப்பிடறவர்களுக்கும் கட்டாயம் குடலில் சீழ் வடியும் புண் வரும். ரொம்ப சக்தி வாய்ந்த நுண்ணுயிர் எதிரிகள் (Antibiotics) சாப்பிடறதும் காரணம்.

ஏதோ சுகமின்மைக்காக வைத்தியரை பார்க்கறோம். வைத்தியர் நுண்ணுயிர் எதிரிகள் எழுதிக் கொடுப்பார். நுண்ணுயிர் எதிரிகள் கொடுக்கின்றபோது, பி-காம்ப்ளக்சு(ஸூ)ம், லேக்டோ பேசிலசு(ஸூ)ம் கலந்த மாத்திரையும் அவசியம் கொடுக்கணும்.

இதை சில வைத்தியர் செய்யறதில்லை. வைத்தியர் எழுதிக் கொடுத்தாலும், 'சத்து மாத்திரை வேணாம்'னு சொல்லி நுண்ணுயிர் எதிரிகள் மட்டும் வாங்கிச் சாப்பிடுறவங்களும் இருக்காங்க. சில வகை மருந்துகளை சாப்பிடறப்ப, வயிறு வலி, நெஞ்சு எரிச்சல் வர்றதை உங்கள்ல பல பேர் உணர்ந்திருப்பார்கள் காரணம் இதுதான்.

அதிக கோப்பி, தேநீர், துரித உணவு பொருள்கள், சிகரெட், செயற்கையான பழச்சுவைகளைக் கொண்ட பானங்கள், ஊறுகாய், காரமான உணவுகள்... இதெல்லாமும் குடலில் சீழ் வடியும் புண்ணிற்கு காரணம்!

மூட்டுவலி போன்ற சில பிரச்சினைகளுக்கு காலங்காலமா மருந்து எடுத்துப்பாங்க சிலர். மாத்திரைகள் கொஞ்சம் வலுவானதாக இருக்கலாம். அதுக்கேத்தபடி சாப்பாடு இருக்கணும்.

தவறினா, குடலில் சீழ் வடியும் புண் போய் முடியலாம். அபூர்வமா சிலருக்கு பரம்பரையாகவும் குடலில் சீழ் வடியும் புண் பாதிக்கலாம். அடிக்கடி உணர்ச்சி வசப்படறவங்களுக்கு குடலில் சீழ் வடியும் புண் இருக்கும்.

எடை குறையறது, ரத்த சோகை, வாந்தி... இதெல்லாம்கூட குடலில் சீழ் வடியும் புண்ணின் அறிகுறிகளாக இருக்கலாம். எந்த அறிகுறியும் தினசரி தொடர்ந்தால் உடனே வைத்தியரை பார்க்கவேண்டும். குடலில் சீழ் வடியும் புண்ணை முழுமையா குணப்படுத்திடலாம்.

வந்ததைப் போக்க சிகிச்சைகள் உண்டு. வராமல் இருக்க...? சரியான நேரத்துக்கு சாப்பாடு, சரிவிகித சாப்பாடு இரண்டும் முக்கியம். கோபத்தைக் குறைக்கவேண்டும். குடலில் சீழ் வடியும் புண் வந்தவங்களுக்கான உதவிக்குறிப்புகள்... நார்ச்சத்து உள்ள உணவுகளைத் தவிர்க்கணும். குழைய வேக வைத்த அரிசி சாதம், அவல், பொரில கஞ்சி மாதிரி செய்து சாப்பிடலாம்.

கீரை, காய்கறிகளைக்கூட நல்லா வேக வச்சு, மசிச்சு, சாப்பிடணும். பாலுக்குப் பதில் மோர் அதிகம் சேர்த்துக்கலாம். வலுவான கோப்பி, தேநீர் வேண்டாம். அதிகமான தாளிப்பு, இனிப்புகள், பொரித்த உணவுகள், பாதி பழுத்தும் பழுக்காத பழங்கள், பச்சை காய்கறிகள் (வெங்காயம், வெள்ளரி உள்பட), இஞ்சி, கரம் மசாலா, காரமான கிரேவி- இதெல்லாம் அறவே தவிர்க்கணும்.

மூணு வேளை மூக்கைப் புடிக்க சாப்பிடாம, கொஞ்சமா, அடிக்கடி சாப்பிடலாம். எதையும் கடித்து, நன்கு மென்று பொறுமையா சாப்பிடணும். நீரிழிவு வந்தவங்களுக்கு சொல்ற மாதிரிதான் குடலில் சீழ் வடியும் புண் வந்தவங்களுக்கும்... விருந்தும் கூடாது... விரதமும் கூடாது.
நன்றிகள்.