Saturday 4 February 2012

ஆண்களின் சாமுத்ரிகா லட்சண...........!



1. தலை – ஆண்களின் தலையானது உயர்ந்தோ, பருத்தோ இருந்தால் செல்வம் உண்டு. பின்பகுதி புடைத்திருப்பின் அறிவு உண்டு. தலையின் நரம்புகள்
 புடைத்து இருப்பின் தரித்திரம்.






 2. நெற்றி – அகலமான, எடுப்பான, உயர்ந்த நெற் றி அமைந்திருப்பின் ஞானமும் செல்வமும் உ ண்டு. மிகச் சிறுத்திருப்பின் மூட னாவான். நெற்றியில் பல ரேகைகள் இருப்பின் யோகம் உண்டாகும். நெற்றியில் ரேகை இல்லா திருப்பின் ஆயுள் குறையும். நெற்றியில் வியர்வை வருமாயின் யோகமாம்.



 3. கண் – ஆண்களின் கண்கள் சிவந்து, விசாலமாக யானைக்கண் போல் இருந்தால் உலகை ஆள்வான். கோழி முட்டைக் கண்ணும், மிகச்சிறிய கண்ணும் இருப் பின் அறிவு, ஆற்றல் குறைவாக இருக் கும்.



 4. மூக்கு-உயரமாய், நீண்டு, கூரிய முனையோடு சிறிய நாசித் துவாரங்கள் கொண்ட மூக்கு உடையவர்கள் பணம், பதவி, புகழ் உடையவர்களாக இருப்பர். நுனிப் பகுதி தடித்தோ, நடுப்பகுதி உயர் ந்தோ, பெரிய அளவில் மூக்கு அமைந்திருப்பின் தரித்திரமாம்.



 5. வாய் – அழகான,சிறிய வாய் உடைய வர்கள் புத்தி, சக்தி, கருணை உடையவர்களாக, அறிஞர்களாக, பெரும்பதவியில் இருப்ப வர்களாக இருப்பர். அகன்றும், வெளியே பிதுங்கியும் உள்ள வாய் அதிகமாகப் பேசும். பிறர் செயலில் குற்றம் காணும்..





 6. உதடு – உதடு சிவந்திருப்பின் கௌரவம், அதிகாரம் யோகம் நிலைத்திருக்கும். கருத்து, உலர்ந்து, தடித்து இருப்பின் கபடம் நிறை ந்திருக்கும்.



 7. கழுத்து – ஆண்களின் கழுத்து பருத்தும், மத்திம உயரம் உடையதாகவும் இருப்பின் அதிர்ஷடமாம். மிக உயரமாகவோ, மிகக் குட்டையாகவோ, நரம்புகள் தெரியும்படியோ இருந்தால் வறுமையாம்.






 8. தோள் – தோள்கள் இரண்டும் உயர்ந்திருப்பின் செல்வம் உண்டு. தாழ் ந்திருந்தால் நீண்ட ஆயுள் உண்டு. சமமாக இருப்பின் அறிவு உண் டு. தோள்கள் இரண்டிலும் மயிர் அதிகம் இருந்தால் நினைத்த கா ரியம் முடியாது.




 9. நாக்கு – நீளமான நாக்கு இருப்பின் சிறந்த பேச்சாளர்களாக இருப்பர். நா க்கு நுனியில் அழியாத கருப்புப் புள்ளி கள் இருப்பின் சொன் ன சொல் பலி க்கும். நாக்கு சிவந்திருப்பின் அதிர்ஷ டமாம். கருத்தும், வெளுத்தும், உலர்ந் தும் இருப்பின் தரித்திரமாம். 




10. பல் – மெல்லிய ஒடுக்கமான பற்களை உடையவர்கள் கல்விமான் ஆவர். கூரிய பற்கள் இருப்பின் கோபம் அதிகம் வரும். வரிசை தவறி, ஒன்றுக்கு மேல் ஒன்று இருப்பின் தரித்திரமாம்.





11. காது – காது மேல் செவி அகலமானால் முன் கோபம் இருக்கும். காது குறுகியிருப்பின் அதிர்ஷடமாம். மேல் செவி உள்ளே மடங்கியிருப்பின் கபட தாரி. 





12. கைகள் – நீளமான, சீரான பருமன் உடைய கைளை உடையவர்கள் சிறப்பாக வாழ்வர். முழங்கால் வரை கை நீண்டிருப்பின் அரசன் ஆவான். தடித்த, குட் டையான கைகளை உடையவர் களை நம்புதல் கூடாது. கைப் பிணைப்புகளில் மூட்டுகளில் ஓசை எழுப்பினால் தரித்திரமாம். கைகள் ஒன்றுக் கொன்று வித்தி யாசமாக இருப்பின் பாவிகளா க இருப்பர். கைகளில் நீண்ட ரோமங்கள் இருப் பின் செல்வந்தன் ஆவான். 


13.மணிக்கட்டு – மணிக்கட்டில் சதையிலிருந்து கெட்டியாக இருப் பின் அரசு பதவி கிட்டும். மணிக்கட்டு உயரமாக இருப்பின் நீண்ட ஆயுள் உண்டு. மணிக்கட்டுகள் உறிதியின்றி இருந்தாலும், மடக்கும்போது சப்தம் வந்தாலும் தரித்திரமாம்.


 14. விரல்கள் – கைவிரல்கள் நீளமாக இருந்தால் கலை ஆர்வம் அதிகம் இருக்கும். காம இச்சை அதிகம் உண்டு. விரல்களுக்கு மத்தியில் இடைவெளி இருந்தால் தரித்திரமாம். உள்ளங்கை அதிகப் பள்ளமாக இருந்தால் அற்ப ஆயுளாம். உள்ளங்கை சிவந்திருந்தால் தனவான் ஆவான். உள்ளங்கையின் நான்கு மூலைகளும் சமமான உயரத்தோடு தட்டையாக இருப்பின் அரசனா வான்.


 15. மார்பு – ஆணின் மார்பு விசாலமாகவும், சதைப் பிடிப்போடும் இருப்பின் அவன் புகழ் பெற்று விளங்குவான். கோணலாகவும், ஒன்றோடொன்று நெருங்கியும் இ ருப்பின் அற்பாயுளாம். ஆணின் மார்பகங் களில் உரோமம் இல்லாதிருப்பது ஆகாது. அதிகமான ரோமம் இருப்பின் இச்சை அதி கம் இருக்கும்.


 16. வயிறு – பானை போன்ற உருண்டையா ன வயிறு இருப்பின் செல்வம் இருக்கும். வயிறு தொங்கினால் மந்த நிலை உண் டாகும். ஒட்டிய வயிற்றைப் பெற்றவர்கள் குபேரனாய் இருப்பர். வயிற் றில் மடிப்புகள் இல்லாதிருப்பதே உத்தமம். 





17.முதுகு – சமமான முதுகைப் பெற்றவர் கள் எதிலும் வெற்றி பெறு வர். முதுகில் எலும்புகள் காணப்பட்டால் தரித்திரமா கும். 




18. கால்கள் – கால்கள் நீளமாக இருந்தால் அரசாங்க விருதுகள் பெறுவான். கால்கள் குட்டையாக இருப்பின் தரித்திரமாம். முழங்காலுக்கு மேலே உயரமாகவும், முழங்காலுக்குக் கீழே குட்டையாகவும் இருந்தால் நன்மைகள் பெருகும். 



19. கால்பாதம் – கால் விரல்கள் ஒன்றோ டொன்று நெருங்கி இருப்பின் புகழ் பெறு வான். பாதங்கள் சனதப் பிடிப்பின்றி அழகாக, அளவாக இருக்க வேண்டும். பாதங்களில் மேடு பள்ளம் இருந்தாலும், நகங்கள் கோணல்மாணலாக இருந்தாலும், விரல்கள் தனித் தனியே விலகியிருந்தாலும் வறுமை வாட்டும்.. 

நன்றிகள்.