Wednesday 22 February 2012

தோப்புக்கரணம் போடுவது ஏன்?

தோப்புக்கரணம் போடுவது ஒரு காலத்தில் பாடசாலைகளில் மிகச் சாதாரணமான நிகழ்வு. தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வராவிட்டாலும், ஆசிரியர்கள் மாணவர்களை தோப்புக்கரணம் போடவைப்பார்கள்.

பரீட்சை நேரத்தில் பக்தி அதிகரித்து சில மாணவர்கள் பிள்ளையார் முன்பு தோப்புக்கரணம் போடுவதும் உண்டு. ஆனால் இப்ப்போது தோப்புக்கரணம் போடுவதை அதிகமாகக் காணமுடிவதில்லை.அந்தப்பழக்கம் படிப்படியாகக் குறைந்து முற்றிலும் மறைந்துவிட்டது என்றே கூறலாம்.

கடவுளின் முன்பு தோப்புகரணம் போடுபவர்கள் கூடமுளுமையாக போடுவதில்லை. காதுமடல்களைப் பிடிப்பதுமில்லை. அவசர உலகத்தில் தோப்புக்கரணம் கூட "அவசரக்காரண மாக மாறிவிட்டது.

ஆனால் தொப்புக்கரணத்தின் மகிமையை அமெரிக்கர்கள் புரிந்துகொண்டனர். தொப்புக்கரணத்தை ஆராய்ந்தநிபுணர்கள், இந்த எளிய உடற்பயிற்சியின் மூலம் மூளையின் செல்களும், நியூரான்களும் புத்துணர்ச்சி அடைகின்றன எனக் கண்டுபிடித்துள்ளனர்.

தோப்புக்கரணம் போடும்போது காதுகளைப் பிடித்துக் கொள்வதால். முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. இதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளில் சக்தி வாய்ந்த மாற்றங்கள் நிகழ்கின்றன. இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழும்போது. மூளையின் இரு பகுதிகளும் பலன் அடைகின்றன.

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை கருவியின் உதவி கொண்டு ஆராய்ந்துள்ளனர். அதில் மூலையில் நியூரான்களின் செயல்பாடுகள் அதிகரிப்பதை கண்டுபிடித்துள்ளனர். மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைகின்றன.

மூளைக்கு தகவல் அனுப்பும் காரணிகளும் வலுப்பெறுகின்றன. "ஆட்டிசம்"போன்ற மன இறுக்கம் சம்பந்தப்பட்ட நோய்களுக்குக்கூட தொப்புக்கரணத்தை அமெரிக்க வைத்தியர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

தொப்புக்காரணப் பயிற்சியை தினமும் மூன்று நிமிடங்கள் செய்தால். வியக்கத்தக்க மாற்றங்களைக் காணலாம் எனவும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர். எனவே விநாயகர்வழிபாட்டில் தோப்புக்கரணம் இடம்பெறுவது உடல்நலத்திற்கு ஏற்றது என்பது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.


செய்யும் முறை

நிமிர்ந்து நின்றபடி இடது கையால் வலது காதையும் வலது கையால் இடது காதையும் பிடித்தபடி பாதங்களை முழுமையாக நிலத்தில் பதித்தபடி உட்காந்து எழுவது ஒரு தோப்புக்கரணம் ஆகும்.

இரு கால்களுக்கும் நடுவே உங்கள் தோள்பட்டை நீளம் இடைவெளி விட்டு நிற்க வேண்டும்.

இடது கையால் வலது காதுமடலை பிடிக்கவும். கட்டைவிரல் வெளியேயும் ஆள்காட்டி விரல் உட்பக்கம் இருக்குமாறு இருவிரலால் பிடிக்க வேண்டும்.

அதே போல் வலது கையால் இடது காதை பிடிக்க வேண்டும். வலது கை கண்டிப்பாக இடது கையின் மேல் இருக்க வேண்டும்.

தலை நேராய் பார்த்த படியே முச்சு காற்றை விட்ட படியே உட்கார வேண்டும். சிரமம் இல்லாமல் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் உட்கார வேண்டும்.

முச்சை இழுத்துக்கொண்டே எழவேண்டும். வேகமாய் செய்யக் கூடாது பொறுமையாக செய்ய வேண்டும். முதுகுதண்டு நேராக இருக்க வேண்டும்.

நன்றிகள்.