Thursday 25 October 2012


பசும்பாலிலுள்ள சிறந்த பகுதி உயிர்கொல்லி நோய்க்கு (Aids) மருந்து என ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு பசும்பாலிலுள்ள சிறந்த பகுதி உயிர்கொல்லி நோயை கட்டுப்படுத்துகிறது என அவுசுத்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பசும்பாலின் மருத்துவ குணம் தொடர்பாக அவுசுத்திரேலியாவின் மெல்பர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மரிட் க்ரம்சுகி தலைமையில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வுக்காக கர்ப்பமாக இருந்த பசுவின் உடலில் ஏச்ஐவி (HIV) புரதம் அடங்கிய மருந்து செலுத்தப்பட்டு ஆய்வு நடைபெற்றது. பசு கன்று ஈன்ற பிறகு சுரக்கும் கொலசு(ஸ்)ட்ரம் என்ற பாலில் அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. 

இது கன்றுகளை நோய்தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது. பசும்பாலில் உள்ள சிறந்த பகுதி உயிர்கொல்லி நோய்க்கு வைரசை தாக்கி அழிக்கும் பாக்டீரியாக்கள் அதிக அளவில் உள்ளதும் இவற்றால் நோய்த்தாக்குதலில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதும் உறுதியாகி உள்ளது என்று ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து தொடர் ஆய்வு நடந்து வருகிறது.உயிர்கொல்லி நோய் தாக்குதல் எந்த நிலையில் இருந்தால் பாலிலுள்ள சிறந்த பகுதி கட்டுப்படுத்துகிறது.

எவ்வளவு பசும்பாலிலுள்ள சிறந்த பகுதி தேவைப்படுகிறது என்பது குறித்து ஆய்வு முடிவில் தெரியவரும் என்று விஞ்ஞானிகள் கூறினர்.

நன்றிகள்.