Wednesday 17 October 2012

சமாதி அல்ல புராதன......... ...!

தாச்மகால், மும்தாசின் சமாதி அல்ல, புராதன சிவன் கோவில்தான்! – அதிர்ச்சித் தகவல்

காதல் மனைவி மும்தாச் நினைவாக மாமன்னர் சாசகானால் கட் டப்பட்ட நினைவுச்சமாதி தான் தாச்மகால் என்றுதான் நாம் எல்லோரும் நம்பிக்கொண்டு இருக்கின்றோம். ஆயினும் இது ஒரு பழைய சிவன்கோவில் என்கிற அதிரடி உண்மை வெளிச்சத்துக்கு வந்து உள்ள து.

தாச்மகால் விடயத்தில் முழு உலகமும் ஏமாற்றப்பட்டுள்ளது, தாச்மகால் மும்தாசின் சமாதி அல்ல, புராதன சிவன் கோவில் என்று ஆதாரங்களுடன் அடித்துக் கூறுகின்றார் பேராசிரியர் பி.என். ஓக். முன்பு தேசோ மகாலையா (தேஜோ மஹாலயா) என்கிற பெயரால் தாச் மகால் அழைக்கப் பெற்றது என்கிறார்.

செய்ப்பூர் ராசா செய் சிங்குக்கு சொந்தமாக இருந்த சிவாலயத்தை சாசக்கான் மன்னர் பிடுங்கிக்கொண்டார் என்றும் சாசக்கான் மன்னரின் சொந்த வாழ்க்கைக் குறிப்பான பாத்சா நாமாவில் ஆகராவில் மிகவும் அழகான மாளிகையை மும்தாசின் உடலை அடக்கம் செய்கின்றமைக்கு தேர்ந்தெடு த்தமை குறித்து குறிப்புக்கள் உள்ளன என்றும் பேராசிரியர் கூறுகின்றார்.

இச்சிவன்கோவிலை கையளிக்க சொல்லி சாசக்கான் மன்னரால் செய் சிங் ராசாவுக்கு அனுப் பப்பட்ட இரு ஆணைகள் இன்றும் பத்திரமாகவே உள்ளன என்கிறார் பேராசிரியர். கைப்பற்றிக் கொள்கின்ற கோயில்கள், பெரிய மாளிகைகள் ஆகியவற்றில் முகாலய மன்னர்கள் மற்றும் இராணிகள் ஆகியோரின் உடல்களை வழக்கமாக புதைத்து வந்திருக்கின்றனர் முகாலய மன்னர்கள், கூ(ஹு)மாயூன், அக்பர், எத்மத் உத்தவுலா, சப்தர் யங் ஆகியோரின் உடல்க ள் புகைக்கப்பட்ட இடங்கள் இத ற்கு சான்று என்கிறார் பேராசிரியர். 

தாச் மகால் என்கிற பெயரை எடுத்துக் கொள்கின்றபோது ஆப்கானிசு (ஸ்)த்தான் முதல் அல்சீரியா வரையான எந்தவொரு இசுலாமிய நாட்டிலும் மகால் என்கிற பெயர் எக்கட்டிடத்துக்கும் கிடையாது, மும்தாசின் முழுப் பெயர் மும்தாச் உல் யமானி என்பது. மும்தாச் நினைவாக சாசக்கான் சமாதி கட்டி இருப்பாரானால் மும்தாச் என்கிற பெயரில் இருந்துமும் என்பதை அப்புறப்படுத்தி விட்டு தாச் என்பதை மாத்திரம் நினைவுச் சின்னத்துக்கான பெயரில் ஏன் பயன்படுத்தி இருக்க வேண்டும்? என்று பேராசிரியர் ஒரு நியாயமான கேள்வியை கேட்கின்றார்.

தாச் மகாலின் உண்மையான வரலாற்றை மறைக்க பிற்காலத்தி ல் புனையப்பட்ட பொய்தான் சாசக்கான் –மும்தாச் காதல் கதை என்கின்றார். நியூயோர்க்கை சேர்ந்த பேராசிரியரான மார்வின் மில்லர் தாச் மகாலின் மாதிரிகளை எடுத்து கார்ப ன் மூலம் காலஅளவை முறைப்படி தாச் மகாலின் ஆயுளை கணித்தா ர். மில்லரின் கருத்துப்படி தாச் மகாலின் வயது 300 வருடங் களுக்கு மேல். இதையும் பேராசிரியர் ஓக் ஆதாரமாக சொல்கின்றார். ஐரோப்பிய நாட்டு சுற்றுலா பயணியான அல்பேர்ட் மாண்டேசுலோ என்பவர் 1638 ஆம் ஆண்டு அதாவது மும்தாச் இறந்து ஏழு ஆண்டுகளுக்கு பின் ஆக்ரா வந்திருந்தார். இவரது குறிப்புக்களில் ஆக்ரா பற்றி வியந்து எழுதப்பட்டு இருக்கின்றன, ஆனால் தாச் மகால் கட்டப்படுகின்றமை சம்பந்த மாக எக்குறிப்புக்களும் இடம் பெற்று இருக்கவில்லை.

ஆனால் மும்தாச்  இறந்து ஒரு வருடத்துக்குள் ஆங்கில பயணியான பீட்டர் மண்டி ஆக்ரா வந்தி ருந்தார். இவரது குறிப்புக்களில் தாச் மகாலின் கலை நயம் பற்றி வியந்து எழுதப்பட்டு இருக்கி ன்றது. ஆனால் இன்று சொல்லப்படுகின்ற வரலாற்றின்படி மும்தாச் இறந்து 20 வருடங்களுக்கு பிறகல்லவா தாச் மகால் கட்டப்பட்டு இருக்கின்றது? இவற்றையும் ஆதா ரங்களாக முன்வைக்கி ன்றார் பேராசிரியர் ஓக்.

தாச்  மகாலின் பெரும்பகுதி பொதுமக்களின் பாவனைக்கு இன்னமும் அனுமதிக்கப் படவில்லை, காரணம் கேட்டால் பாதுகாப்பு என்று சொல்லப்படுகின்றது, தாச் மகாலினுள் தலையில்லாத சிவன் சிலையும், இந்துக்கள் பூசைகளுக்கு பயன்படுத்துகின்ற பொருட்களும் இருக்கின்றன என்கிற பேராசிரியர் தாச் மகாலின் கட்டிட கலை நுட்பங்களை பார்க்கின்றபோதும் இது ஒரு இந்துக்கோவில் என்பது தெளிவாக தெரிகின்றது என்கிறார்.

பேராசிரியர் இவ்வளவு விபரங்களையும் தாச் மகால்–உண்மையான வரலாறு என்கிற தலைப்பில் புத்தகமாக எழுதி வெளியிட்டு இருக்கின்றார். ஆனால் அரசியல் காரணங்களுக்காக இவரது புத்தகம் இந்திரா காந்தி தலைமையிலான அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.

உண்மை இனியாவது வெளிவர வேண்டுமானால் அ(ஐ)க்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் சர்வதேச நிபுணர் கொண்ட குழுவால் தாச் மகாலில் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்கிறார் பேராசி ரியர்.

நன்றிகள்.