Friday 26 October 2012

காற்று பதனாக்கி பொருத்திய ஆடைகள்...!


காற்று பதனாக்கி (Air Conditioner) பொருத்தப்பட்ட ஆடைகள் அணிய ஆசையா.? புவி வெப்பமடைதல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு இன்றி தவித்துக்கொண்டிருக்கிறது மனித இனம்.

இந்த புவி வெப்படைதலின் விளைவாக உலகம் பாரிய அழிவுகளை சந்திக்க நேரிடும் என்பது விஞ்ஞானிகளின் ஒரு பக்க எச்சரிக்கையாக இருக்கிறது.

எது எப்படியோ உலகம் இருக்கும் வரை சவால்களுக்கு முகம் கொடுத்து மனித இனம் வாழ்ந்துதான் ஆகவேண்டும் என்கின்ற கட்டாயப்பாட்டுடன் இயற்கையின் எதிர்ப்புக்களுக்கு தற்காலிக தீர்வு கண்டு மனித இனம் தப்பி பிழைத்துக்கொண்டிருக்கிறது.

இன்றைய உலகம் நவீனமயப்படுத்தப்பட்டது. மின்சாரம் இல்லாமல் ஒரு நாள் கூட எம்மால் நிம்மதியாக வாழமுடியுமா?

நமக்கு இந்த பிரச்சினை ஆனால் மேலைத்தேய நாடுகளில் காற்று பதனாக்கி பிரச்சினை. காற்று பதனாக்கி இல்லாமல் அவர்களுக்கு வாழப்பிடிக்காது. 

தாம் வசிக்கும் வீடு.. வேலைபார்க்கும் அலுவலகம்- பயணிக்கும் வாகனம் என போகும் இடம் எல்லாம்காற்று பதனாக்கி தான். இது இப்படி இருக்க இயற்கையின் வரவை யாரால் தடுக்க முடியும்.

என்னதான் காற்று பதனாக்கியில் வாழ்ந்தாலும் உடல் என்பது வியர்க்கத்தானே செய்யும். ஆடைகளை கழைந்ததும் சிறிய வியர்வை வாடை அடிக்கத்தானே செய்கிறது இதுக்கெல்லாம் என்ன செய்வது?

சரி காற்று பதனாக்கி பொருத்தப்பட்ட ஆடைகள் அணிந்தால் இதற்கு கொஞ்சம் தீர்வாக அமையும் அல்லவா?

என்ன ஆடைக்குள் காற்று பதனாக்கியா என நீங்கள் நினைக்கலாம். இப்படி நீங்கள் நினைத்தால் நாங்கெல்லாம் எவளவோ பண்ணிட்டம் இதைச் சீர்செய்ய மாட்டார்களா என ஏளனமாக சிரிப்பார்கள் விஞ்ஞானிகள்.

இப்போது கேட்டால் காற்று பதனாக்கி பொருத்தப்பட்ட ஆடையையே கையில் தந்துவிடுவார்கள். ஆமாம் கடந்த ஆண்டு இவ்வாறு கண்டுபிடிக்கப்படும் என அறிவித்திருந்தார்கள் கண்டுபிடிப்பாளர்கள்.

இன்று வெற்றியும் கண்டுவிட்டார்கள்.மேற்சட்டை,கால்முளுவதும் பாவிக்கும் காற்சட்டை (சேட்- ரவுசர்) என அணியும் ஆடைகள் எல்லாம் காற்று பதனாக்கி பொருத்தப்பட்டு விற்பனை ஆகிறது.

இதன் முதற்கட்டம்தான் மின்விசிறி பொருத்தப்பட்ட தலைக்கவசம் தற்போது காற்று பதனாக்கி பொருந்தப்பட்ட ஆடைகள்.

என்ன கேட்கவே குளிர்ச்சியாக இருக்கிறதல்லவா? ஆம் இதன் அடுத்த கட்டமாக பெண்கள் அணியும் மேற்சட்டைகளிலும் காற்று பதனாக்கி பொருத்த திட்டமிட்டுள்ளார்களாம்.
  நன்றிகள்.