Friday 16 December 2011

மூன்று எழுத்து


உயிர்...மூன்றெழுத்து...!
உயிர் தந்த, அன்னை ...மூன்றெழுத்து...!
அன்னை காட்டிய அன்பு ..மூன்றெழுத்து...!


அன்பினால் உருவாகும் ..கனிவு ,மூன்றெழுத்து...!
கணிவினால் ,உருவான பணிவு..மூன்றெழுத்து...!
பணிவு ஆல் உண்டான ..தகுதி ..மூன்றெழுத்து...!


தகுதியால் வந்த திறமை மூன்றெழுத்து...!
திறமையினால் நான் அடைந்த பதவி..மூன்றெழுத்து...!
பதவியினால் நான் செய்யும் கடமை ..மூன்றெழுத்து...!


கடமையினால் எனை அடையும் வெற்றி...மூன்றெழுத்து...!
வெற்றியினால் கிட்டும் புகழ் ..மூன்றெழுத்து...!


இந்த மூன்றெழுத்தில் எல்லாம் நான் என்ற ஈரெழுத்து இருக்க காரணம் ஆன என் அன்னை நீயே என்றும் என் (உயிர்) முதலெழுத்து...!

(நன்றிகள் ஏன்.கணேசனிற்கு)