Thursday 1 December 2011

மனித நாகரிகம்



ஆதிகாலத்தில் விலங்குகளுடன், விலங்குகளாக பருவகாலங்களிற்கு ஏற்ப இடப்பெயற்சிகளை மேற்கொண்டு உணவு, உறை விடங்ககளை தேடித்தேடி நாடோடிகளாக, விலங்குகளைவேட்டையாடியும்,  இயற்கை உணவுகளைத் தேடியும் வாழ்ந்தவர்கள்.

பின்பு ஆற்றுப்படுக்கை, மலையடிவாரங்களிலும் வேளாண்மையை மேற்கொளுவதற்காகவும், கால்நடைவளர்ப்புகளிலும் ஈடுபட்டனர்.

ஆதிகாலத்தில் ஆடையின்றி வாழ்ந்தவர்கள். முதலில் இலை, தழைகளை ஆடையாக்கிக்கொண்டானர், விலங்குகளைவேட்டையாடத்  தொடங்கியதும் விலங்குகளின் தோலினை ஆடையாகப்பயன் படுத்தத் தொடங்கினார்கள்.

மனிதன் தான் தனது இயல்பை உணராமல் தடுமாறுகிறான். ஆரம்பத்தில் அவனும்  தன் உணவுக்காக, உடைக்காக, உறைவிடத்திற்க்காக சண்டை 
போடத்துவங்கினான்.

 பசி எடுத்தால் உணவு, இச்சை பிறந்தால்  இணை என்ற 
இரண்டே வேட்கைகளில் தான் அதற்க்குள் சண்டை நடக்கிறது. அது மிருக இனம் பிழைத்திருப்பதற்கும், இனப்ப்பெருக்கம் செய்வதற்க்கும் இயற்க்கை விதித்திருக்கும் விதி.

விலங்கைப்போல் வாழ்ந்த மனிதன், நாகரீகம் வளர தனக்கென்று சில
வரைமுறைகளைவகுத்துக் வகுத்துக்கொண்டதே கலாச்சாரமும், பண்பாடும்.

விலங்கிற்கு தாய்க்கும், துணைக்கும் வித்தியாசம் தெரியாது. ஆனால் மனிதனை அப்படி நடக்காமல் வழிவகுப்பது காலச்சாரமும்,பண்பாட்டையும் கொண்ட நாகரிக வளர்ச்சியே!!!

ஆனால் மிருகங்கள் ஒன்றை ஒன்று பார்த்து, பொறாமைப்படுவது இல்லை, வஞ்சம் கொள்வது இல்லை, சதிச் செயல்களில் ஈடுபடுவது இல்லை மனிதன் தான் இயல்பை உணராமல் தடுமாறுகிறான்.

ஆரம்பத்தில் அவனும் தன் உணவுக்காக, உடைக்காக, உறைவிடத்திற்க்காக
சண்டைபோடத்துவங்கினான். பிற்பாடு நாகரீகம் வளர வளர அவனுடைய தேவைகளும் பெருகிவிட, கூடுதலான வசதிகளுக்காகவும் தன் பெருமைகளுக்காகவும் போரிடும் குணம் அவன் அடிப்படை குணம் ஆகிவிட்டது.

அதை மறைத்து தன்னை நல்லவனாக காட்டிக் கொள்ளும் முனைப்பு அவன் இயல்பு ஆகிவிட்டது. சட்ட திட்டங்களால் ஆளப்படுவதால் மட்டுமே எந்த சமூகமும் நாகரீகம் அடைந்து விட்டதாக சொல்ல முடியாது.

எப்பொழுது பிறமனிதர்களின் உணர்வுகளிற்கு மதிப்பும், அதனைப்புரிந்து செயற்பட முற்படுகிறானோ அதுவே நாகரீகம் எனக்கருதலாம். நாகரிக வளர்ச்சி அடைந்த நாடுகள் என்றும், பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகள் எனத்தம்மைதாமே கூறிக்கொள்பவர்களின் அதிகூடிய நாகரிக வளர்ச்சியால் மனித நாகரீகம் பெணப்படுவதில்ல்லை.

உதாரணமாக அரைநிர்வாணமாக ஆடைகளைபாவிப்பது , பொதுஇடங்களில் உணவுப்பழக்கம்,பொதுஇடங்களில் சிற்றின்பத்தை தூண்டும் உணர்வுகளை பகிர்ந்து கொள்வது எனப்பலவற்றைக்கூறலாம். ஆனால் ஒரு ஆணும்- பெண்ணும் விரும்பி தங்களுக்கிடையில் பாலியல் தேவைகளைபூர்த்தி செய்து கொள்வதை நான் எந்த தருணத்திலும் எதிர்க்க மாட்டேன்.

ஆனால், அதனை நான்கு சுவர்களுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். 
முன்பெல்லாம் நாட்டிற்கு,நாடு படையெடுப்பு வலிமைகூடிய நாடு வலிமைகுறைந்தநாட்டின் வளங்களையும்,வலிமை குறைந்த நாட்டு மக்களையும்நாடு சூரையாடிசென்றனர்.

ஆனால் இரண்டாவது உலகமகா யுத்தத்தின் பிற்பாடு ஒருநாட்டு மக்களை,வேறொரு நாடு மக்களை அடிமைகளாக  நாடுகடத்தவோ, அடிமைகளாக அவரவர் நாடுகளிலும் கையாளக்கூடாதேன்ற நாகரீகத்தை வரவேற்றது மனிதகுலம்.


ஆனால் 1980 ஆண்டுகாலப்பகுதியில் போருளாதாரதுடன்கூடிய நாகரீகவளர்ச்சி அடைந்த நாடுகளின் மனிதவலுப்பற்றாமையைப் போக்கும் நோக்கத்திற்காக அகதிகள் என்ற போர்வையில் தங்கள் மனிதவலு பற்றாக்குறையை போக்கிக் கொண்டார்கள்.
அனத்தங்களின் போது பாதிக்கப்பட்டவர்களிற்கு உதவி செய்வது போன்று  
பாசாங்கு செய்து தங்களிற்குத் தேவையான கனிவளங்கள், பெரும் இலாபம் ஈட்டக்கூடிய பொருட்களையும் பாதிப்பிற்குள்ளான நாடுகளில் இருந்து தத்தமது நாடுகளிற்கு கொண்டுசென்றது விடுகின்றனர். 

பொருளாதாரத்துடன் கூடிய நாகரீகவளர்ச்சி உள்ள நாடுகளில் எல்லாம் அந்நாட்டு மக்களை நாகரீகம் என்னும் மாயையினுள் வைத்திருக்கவேண்டிய நிற்பந்தத்திற்காக இயற்கைஅனர்த்தங்கள், உள்நாட்டுப்போர்,நாடுகளை வழிநடத்துபவர்களின் நிதிமோசடி, அண்டைநாட்டின் படையெடுப்பு போன்ற நிகழ்வுகளினால் பாதிப்புக்கு உட்பட்டோரினது நிகழ்வுகளை  தொலைக்காட்சியிலும்,வானொலி நிகழ்ச்சியிலும் வழங்கி உலகத்திலேயே இவர்கள்தான் அதியுன்னத மான நாகரீகமான வாழ்வுமுறையை கொண்டுள்ளனர் எனக்காண்பிக்கிறார்கள்.

உதாரணமாக ஒரு நாட்டில் உணவு,குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு மனிதப்பேரழிவு நீண்டநாட்களாக நடைபெறுகிறது என்றால் கூட அவர்களிற்கான உதவிகளை தேவைக்குக் கொடுத்து உதவாது அந்தநிகழ்வை காரணமாகக்கொண்டு ஊடகங்களினூடாக விளம்பரப்படுத்தி பெரும் போருளீட்டுவதால் வரும் உதவியைக் கூடப்பாதிக்கப்பட்டவர்களிற்கு முழுமையாகக் கொண்டு சேர்ப்பதில்லை.

அவற்றில் பெரும்பங்கு பணத்தினையும் தங்களுடைய நாடுகளிற்கே திரும்பவும் கொண்டு சென்றுவிடுகின்றனர்.வெளியில் இருந்து பார்த்தால் கொடுப்பது போன்று மாயையை ஏற்படுத்துகிறார்களே அன்றி உண்மையில் எவரிற்கு உதவி கிட்டவேண்டுமோ அது அவர்களிற்கு கிடைப்பதில்லை.

ஆனால் பொருளாதாரத்திலும்,நாகரீகத்திலும் மேம்படாதவர்கள்தான் மனித நாகரீகத்தினை உடையவர்கள் என்றேசொல்வேன். ஏனெறால்    அவர்களினால்தான் பிறருக்கு உடன்டித்தேவைகளை எவ்வித எதிர்பார்ப்புமின்றி உதவிகளை ஈடுசெய்கிரார்கள், ஈடுசெய்யமுடியும், என்று ஆணித்தரமாகக் கூறுகிறேன்.

 இதனையே எமது வாழ்க்கையில் கண்ணூடாகக் காண்கிறேன். 

 இதையே மனித நாகரீகம் எனக்கருதுகிறேன்.