Wednesday 28 December 2011

போலியான....,பொய்யான.....



மனிதன் பிறக்கும்போதும் இறக்கும்போதும் எதையும் இவ்வுலகிற்கு கொண்டு வருவதும் இல்லை,கொண்டு செல்வதும் இல்லை.


ஆனால் இடைப்பட்ட காலத்தில் வாழும்போது ஒருமனிதனிற்கு மற்றொரு மனிதன் மதிப்புக் கொடுப்பதில்லை.மனித உள்ளங்களை நேசியுங்கள்.


ஒருவரிடம் இருக்கும் பதவியோ,பணமோ,பெருமை,போன்றவற்றை சார்ந்து போலியான கௌரவத்திற்காக பொய்யான முகத்துடன் வாழாது.


மனிதத்திற்கு மதிப்பளித்து பிறர் மனதை புண்படுத்தாது உண்மையான முகத்துடன் மனிதனாக வாழ்வதே மென்மையாகும்.