Thursday 22 December 2011

அம்மா என்னும்......


அன்பை அணுவாக்கி என்னை
உயிராகியவளே....!
ஆசை உடன் என்னை தூக்கி
ஆளாக்கியவளே....!



இவுலகில் இல்லை
இதற்குமீறிய பந்தம்.....!
ஈருயிராய் உன்னுள் வளர்த்து உலகத்தில்
ஓர் உயிராய் ஆக்கியவளே....!

உன் நினைவால்
என் நினைவுடிினாய்....!
ஊண், உறக்கம் இன்றி என்
உயிர், உடல் , வளர்த்தவளே....!

எத்துணை துன்பம் நான் தந்த போதிலும்...!
ஏன் எனை உன் உயிர் கொடுத்து
உருவாக்கினாய்...!
ஐயம் இல்லை தாயே நின்


அன்பால் வெல்லுவேன் இவ்வுலகை....!
ஒரு கோடி ஜென்மங்கள் நான் பிறந்தாலும்
இறக்காது நம் பந்தம்.....!
ஓராயிரம் யுகங்கள் கழிந்தாலும், நீதானே

என் உயிர் மூச்சு.....!
ஃ றிணை ஆவேன் நானும்
உன் நினைவைய் இழந்தால்........!
அம்மா....!


நன்றிகள்!